Monday, April 10, 2006

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.

மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

3 comments:

Jeyapalan said...

அருமையான வரிகள். தொடர்க உங்கள் எழுத்துக்கள்.

Jazeela said...

நன்றி ஜெயபால்.

Sridhar Harisekaran said...

வித்தியாசமான சிந்தனை ஜெஸிலா.. உங்கள் கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

- ஸ்ரீதர்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி