ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.
Thursday, October 13, 2022
சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’
Wednesday, October 12, 2022
துபாய் வேலை
நான் வேலை தேடி துபாய்க்கு மூன்று மாத கால விசாவில் வந்திருந்தபோது, அந்தக் காலத்தில் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்குத் தந்தனர் - ‘திருமணம் முடித்து இங்கு வா அதன் பிறகு வேலைக்கான விசா தருகிறோம்' என்று. பெரிய நிறுவனங்களிலேயே கூட, திருமணம் ஆகாதவர்களுக்கு வேலைக்கான விசா தருவதில் சிக்கல் இருந்தது. விசிட் விசாவே திருமணமாகாதவர்களுக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் சொல்வது 1997-இல். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தேன். அதிலேயே பலவித அனுபவத்தையும் பெற்றிருந்தேன். என் குடும்பத்தைத் தவிர வெளி நபர் என்று என்னை ஆதரித்தது நஸீரா மாமியும் ஹாஜா மாமாவும்தான். ’நல்ல வேலையா கிடைக்கத்தான் தாமதமாகுது, கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்’ என்ற உற்சாக வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய மகள் Sameema Mansoor எனக்கு உற்ற தோழியானாள். வார இறுதிகள் அவர்களுடனான சுற்றுப்பயணங்களென நாட்கள் நகர்ந்தன.
Tuesday, October 11, 2022
நவராத்திரி
கீரைவிற்கும்
கண்ணமாவின் தலையில்
கொலு பொம்மைகள்
நவராத்தி நாட்களென்று
பொம்மைகள் விற்பதை
வியாபாரமாக்கியிருந்தாள்
சாமிகளை தலையில்
Monday, October 10, 2022
நசீமா ரசாக்கின் ‘மராம்பு’
'மராம்பு' தலைப்பைப் பார்த்ததும் அப்படியென்றால் என்னவென்று தேடினேன். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. முதல் இரண்டு அத்தியாயங்கள் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. வெறும் 100 பக்கங்கள் என்பதால் உடனே முடித்துவிட்டேன். அதனாலேயே கீழேயே வைக்க முடியாத அளவுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. நூலாசிரியரின் முந்தைய படைப்பான 'என்னைத் தேடி' யை விடப் பல மடங்கு சிறப்பான படைப்பு இது என்று உறுதியாகச் சொல்ல இயலும். பெண்களை மட்டுமே வைத்துப் படைத்திருக்கும் படைப்பு. இதை ஆண்கள் வாசித்தால் அவர்கள் எப்படி இதனை உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை.
Saturday, October 08, 2022
தெரிசை சிவாவின் ருபினி
இளம் இசைக் குயில்
நல்ல திறமை எங்கிருந்தாலும் பாராட்டுவதே அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் / கானல் / Kaanal குழுமத்தின் பண்பு. afina_arul அபீனா அருள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8-ல் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டவர். நம்ம அமீரகத்தைச் சேர்ந்தவர் இறுதிச் சுற்று வரை வந்ததே எங்களுக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும். அவருக்குப் பாராட்டு விழா நிகழ்வைச் சிறிய அளவில் எங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து அபுதையில் சிறப்பாக நடத்தினோம். சிறிய கூட்டத்திற்கெல்லாம் வருவார்களா என்று நினைத்தோம். பெரிய மனசுக்காரர்கள் அதெல்லாம் அவர்கள் நினைக்கவே இல்லை. எனக்குத் தெரிந்து வேறு எந்தப் பெரிய அமைப்புகளும் அவரை இன்னும் கெளரவிக்கவில்லை. நாங்கள்தான் தொடக்கமென்று நினைக்கிறேன். எங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் நினைக்கிறேன்.
Sunday, October 02, 2022
தன்னம்பிக்கை மங்கை
தங்கமங்கை 23 ஆம் ஆண்டு சிறப்பிதழில் 'மங்கையரின் மறுமலர்ச்சியே மண்ணுலகின் வளர்ச்சி!' என்று ஏழு பெண்களைக் குறித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தியுள்ளனர். 'தன்னம்பிக்கை மங்கை'யாக நானும் மிளிர்கிறேன்.
ரம்யா ரவிக்குமார் டார்லிங்குக்கு நன்றி. என்னமா எழுதுறாங்க!!
என்னைப் பற்றியான்னு நானே ஷாக்காகிட்டேன். நன்றிம்மா.