Monday, June 19, 2006

காதல் கடிதம்

பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.

8 comments:

சேதுக்கரசி said...

அட, உங்க வலைப்பூவா? வாழ்த்துக்கள் ஜெஸிலா!

Anonymous said...

நறுக்கென்று கிறுக்குகிறீர்கள்... கிறுக்கல்கள் தொடரட்டும்

அன்புடன்
சேவியர்
www.xavi.wordpress.com

நவீன் ப்ரகாஷ் said...

//இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.//

:))

கதிர் said...

ஜெஸிலாக்கா நீங்க ஒரு கவிதை கிடங்கு. அருமையா கவிதை எழுதறிங்க அப்புறம் ஏன் கிறுக்கல்னு தலைப்பு. இதெல்லாம் ஒரு தொகுப்பா போடலாமே.

Jazeela said...

நன்றி சேதுக்கரசி மற்றும் சேவியருக்கு.

ந.பிரகாஷை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி.

தம்பி உங்க யோசனைக்கு நன்றி. உங்களுக்கும் எனக்கும் பிடித்தது மற்றவர்களுக்கு கிறுக்கலாக இருக்கலாம். ஆகையால் தலைப்பு கிறுக்கலாகவே இருக்கட்டும் ;-)

சேதுக்கரசி said...

எனக்கு வலைப்பூ பற்றி அதிகம் தெரியாது, ஆனால் உங்கள் வலைப்பூவில் justification மாற்றவேண்டுமென்று நினைக்கிறேன் ஏனெனில் நெருப்புநரி உலாவியில் சரியாகத் தெரிவதில்லை. ஜஸ்டிஃபிகேஷன் மாற்றினால் தெரியும். இந்தக் குறிப்பை மற்றவர்களின் வலைப்பூக்களில் வாசித்திருக்கிறேன்.

சேதுக்கரசி said...

இன்னொரு தகவல்: மறுமொழிகளை மட்டுறுத்தலில் இடுவது நலம் என்று நினைக்கிறேன். நீங்கள் பார்த்து அப்ரூவ் செய்யலாம், இல்லாவிட்டால் குப்பைகள் வர வாய்ப்புண்டு.

Ayyanar Viswanath said...

அட !!

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி