Tuesday, May 22, 2007

பாரனாய்ட் - Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.

நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? அதுல தப்பேயில்ல ஆனா மிதமிஞ்சி பொங்கி வழியுற அளவுக்கு நம்பிக்கையிருந்தா பிரச்சனைதான். என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்துல நம்பிக்கை வைக்கலாம் அதப்பத்தி உறுதியாவும் பேசலாம் ஆனா தெரியாத விஷயத்த பத்தி நீங்களே நினச்சுக்கிட்டு இப்படித்தான் இருக்கும்னு ஒரு முன்முடிவோட இருந்துக்கிட்டு சந்தேகப்படுவது முட்டாள்தனமா பைத்தியகாரத்தனமா? என்ன குழப்புறேனா? சரி தெளிவாவே சொல்லிடுறேன். ஒருத்தர் எப்போதும் மத்தவங்க மேல அவநம்பிக்க வச்சி சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்து, ஒவ்வொரு செயலிலும் குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இல்லாத பொருள தேடிக்கிட்டு 'நான் சொல்றதுதான் சரி, நான் புடிச்ச முயலுக்கு ஒன்றரைக் காலுன்னு' (மூணுகாலுன்னுதான் அடம்பிடிக்கணுமா என்ன?) அடம்பிடிச்சிட்டிருந்தா இந்த 'பாரனாய்ட்' குணக்கேடுல மாட்டிக்கிட்டாங்கன்னு அர்த்தம். 'பாரனோயா'வால் (Paranoia) பாதிக்கப்படுகிறவர்கள்தான் 'பாரனாய்ட்'. அடம்பிடிக்கிறது எல்லா குழந்தைங்கக்கிட்டயும் இருக்குற குணம். குழந்தைகளா இருக்கும் போது புரியாம அடம்பிடிப்பத நாம குழந்த குணம்னு விட்டுடுவோம். குழந்தையும் வளர வளர நாலுபேருக்கிட்டப் பேசிப் பழகும் போது, பெற்றோர் நடத்தையையும் மத்தவங்க வழக்கங்களையும் பார்க்கும் போது தன்னையே மாத்திக்கிற பக்குவம் வரும். ஆனா பெரியவங்களா ஆனா பிறகும் இப்படி இருக்கிறவங்களுக்கு எந்த உறவுமே நிலையாவோ நெருக்கமாவோ வர முடியாது. ஏன்னா 'பாரனாய்ட்' நோயாளி நெருங்கிப் பழகுறா மாதிரி இருக்கும் ஆனா மனசளவில தூரமாத்தான் இருப்பாங்க. உள்ளுக்குள்ள வஞ்சம் வச்சிக்கிட்டு இதுக்கு இப்படித்தான் அர்த்தம், எத பேசினாலும் நம்மளத்தான் குத்திக்காட்டி மறைமுகமா ஏதோ பேசுறாங்க, இவ செய்ற செயல் நம்மள கெடுக்கன்னு, தானே நினச்சுக்கிட்டு மனசுக்குள்ள எப்பவுமே போராடிக்கிட்டு இருப்பாங்க. சுருக்கமா சொன்னா கற்பனை திறன் இவங்களுக்கு அலாதி, கத கட்டுறதுல ஞானி, குதர்க்கமான சிந்தனைவாதி.

இதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டா? ஒரு நெருக்கமான ஒருத்தரோட அழைப்புக்காக காத்திருக்கீங்க, அவங்களும் உங்கள அழைக்கிறதா சொல்லிருக்காங்க ஆனா தவிர்க்க முடியாத காரணத்தால அழைக்க முடியல. நீங்க அழைக்கும் போதும் எடுத்துப் பேசுற சூழ்நிலையில இல்லன்னு வச்சுக்கோங்க, சரி ஏதோ பிரச்சன அதான் பேச முடியல, அவங்க சூழ்நில அப்படின்னு நல்லவிதமா நினச்சுக்கிட்டா நல்லது. அப்படியில்லாம வேணும்னே எடுக்கலன்னு நினச்சுக்கிட்டு காரணம் கேட்டும் திருப்தியில்லாம அப்படியிருக்க முடியாது 'பொய்'னு தலையில ஒலிச்சுக்கிட்டே இருக்கிறதனால தையத்தக்கான்னு குதிச்சா 'பாரனாய்ட்'. இதுதான் எல்லாரும் செய்ற விஷயமாச்சேன்னு நீங்க கேட்கலாம். அதுக்காக எல்லாத்துக்கும் 'பாரனாய்ட்'னு சொல்ல முடியாது. இப்படி தோணும் போதே 'ச்சே நமக்கேன் இப்படி தப்பு தப்பா நினக்க தோணுது, அவங்க சொல்றதுல உண்மையிருக்குன்னு மனச நாமே சமாதனப்படுத்திக்க முடியும்னா தப்பிச்சோம். 'பாரனாய்ட்' வந்த பிறகு குணப்படுத்த மருத்துவர தேடுறத விட அதுல விழுந்திடாமப் பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மள நாமே காப்பாத்திக்க முடியிலன்னா நெலம முத்திப் போயி கண்டதுக்கெல்லாம் குறுக்குக்கேள்வி வந்து வாழ்க்கையே போராட்டமாயிடும். இது நாய் குணம் மாதிரி. சில நாய் பார்த்திருக்கிறீங்களா காரைத் துரத்திக்கிட்டே போகும், அல்லது கண்ணுக்கு பயமா தெரியுற ஏதையாவது பார்த்து குரைக்கும் அந்த மாதிரிதான் இதுவும். இந்த சூழல் ஒரு நட்புக்கிடையே வந்துச்சுன்னா 'நம்பிக்க இல்லன்னா போடா'ன்னு சொல்லிட்டு அவங்களா மன்னிச்சி திரும்ப வர வரைக்குமிருக்கலாம். அப்படியில்லாம கணவன் - மனைவிக்குள் வந்திடுச்சுன்னா யோசிச்சு பாருங்க - வாழ்வே நரகம்தான். 'பாரனாய்ட்' நோயால கொலை செஞ்சக் கதையெல்லாம் கூடஇருக்கு. இப்படிப்பட்டவங்க நம்மக்கு நெருங்கின உறவா இருந்தா இவங்களப் பார்த்துப் பரிதாபப்படுறதா, கோபப்படுறதானே தெளிவாயிருக்கிறவங்களுக்கும் குழப்பமாப் போயிடும்.

பொதுவா இந்த 'பாரனாய்ட்' தாக்கம் இரு வேறுப்பட்ட தகுதிகளுக்கிடையே உள்ள உறவுக்குள்ள வர பிரச்சனை. இத 'இரொடொமேனியா' (Erotomania) அப்படின்னு சொல்லுவாங்க. ஒருவர் பிரபலமாயிருந்தா அவங்க நெருங்கிய உறவான அம்மா, தங்கை, நண்பர்னு யாருக்கு வேணும்னாலும் இந்த நோய் வரலாம். ஏன்னா அவங்கள மாதிரி நாம இல்லங்குற தாழ்வுமனப்பான்மையில அவங்க உதாசினப்படுத்துறாங்கன்னு, அவங்க செய்யுற செயல் ஒவ்வொண்ணும் நம்மள மட்டம் தட்டுறதுக்குன்னு தோணிக்கிட்டே இருந்தா 'பாரனாய்டா' வெடிக்கும். குறைகுடம் கூத்தாடுவது சகஜம்தானே? பாரனாய்டில் பலவகைகள் இருக்கிறது 'புரியாத புதிர்' ரகுவரன் ஒருவகைன்னா 'வல்லவன்' ரீமா சென், 'ஆளவந்தான்', 'அந்நியன்' எல்லாம் ரொம்ப முத்தின வேறு வகை. பாரனாய்ட்வாதிகளுடைய சிந்தனை சிதறல் எப்படியிருக்கும் தெரியுமா?

* காலிப் பாத்திரம் மிகுந்த சப்தமிடுறா மாதிரி சின்ன விஷயத்தையும் பிரம்மாண்டபடுத்திப் பெருசா யோசிப்பாங்க.
* நீ பெரியவளா நான் பெரியவனா என்கிற மாதிரி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிற்பாங்க.
* தான் நினைக்கிறது, புரிஞ்சுக்கிறது மேல அவ்வளவு நம்பிக்க அவங்களுக்கு - தான் நினைப்பது சொல்றதுதான் சரின்னு உறுதியாயிருப்பாங்க.
* தன் தவறை மறைக்க மத்தவங்க மேல பழி போடுவாங்க. (உத. கணவனுக்கு மனைவி மேல சந்தேகம் என்பதையும் நேரடியாக் காட்டிக்காம அவ இப்படி உன்னப்பத்தி சொல்றா அப்படின்னு மத்தவங்க மேல பழி போட்டு கேள்வி எழுப்புவாங்க)
* நெருங்கியவங்க எப்போதும் ஏமாத்துறாங்க என்ற உணர்வோடு மறைகழண்டு ஆடுவாங்க.
* பிடிச்சபிடியா உரிமையென்ற பேருல உயிரெடுப்பாங்க, சந்தேகப் பிசாசுங்க.

இப்படில்லாமிருக்கிறதால உறவற்று போயிடுவாங்க, தனியாயிருப்பத ஆரம்பத்தில் நல்லாயிருக்குன்னு நெனச்சாலும் 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'யாச்சே ஏதாவது குழப்பிக்கிட்டே இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு கணக்குப் போட்டுக்கிட்டு வாக்குவாதத்தில் ஆரம்பிச்சு சண்டையிலப் போயி நிற்கும். தனிமைப்பட்டுப் போன மனசுக்கு பாதுகாப்பில்லாம பய உணர்வு கூடும் அதுவே தூக்கத்தக் கெடுக்கும், பிடிச்ச விஷயங்களக் கூட செய்யப்பிடிக்காமப் போகும். இப்படிப்பட்டவங்கள பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது, இவங்கள கையாள்வது ரொம்ப கஷ்டம்.

சாதாரணமா இருக்கிறவங்க திடீர்னு தாக்கத்தால சின்ன விஷயத்திற்குக் கூட குரல உயர்த்தி சண்டப்போடுவாங்க. தன்னிலை மறந்து நடந்துக்கிறவங்களும் இருக்காங்க, தான் இப்படியெல்லாம் பேசுறோம்னு தெரிஞ்சும் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவங்களும் இருக்காங்க. தன் மேல கவனம் வரணும் என்பதற்காகவே ரொம்ப விஷேசமா ஆடுவாங்க. இப்படி வித்தியாசமா ஆடும் போதுதான் அத சாமி வந்திடுச்சுன்னும், பேய் புடுச்சிடுச்சுன்னும் மந்திரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

இந்தப் பிரச்சனை வர்றதுக்கு காரணம் மூளையில 'அமிக்டலா'ன்ற (Amygdala) ஒரு பகுதியில சரியா இருக்க வேண்டிய நரம்பணுக்கள் சிதறிப்போய் பாதிப்படைந்திருந்தாலோ, அல்லது சிறு வயதில் சில சம்பவங்களால் பாதிப்பிருந்தாலோ, அதுவுமில்லாம வேற நோய்க்கு சாப்பிடுற மருந்தோட பக்கவிளைவினாலோ இந்த 'பாரனாய்ட்' வரலாம்.

'பாரனாய்ட்' குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நான் ஆரம்பத்திலேயே சொன்ன காரணம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மருத்துவர் மேல முதல்ல நம்பிக்கை வரணுமே? அந்த நம்பிக்கை வந்தாலும் அவர் கொடுக்குற மருந்து மேல நம்பிக்கையிருக்கணும். இந்த மருந்த சாப்பிட்டா நமக்கு அப்படிலாம் தோணாது பூரண குணமாயிடுவோம்னு உறுதியிருக்கணும். இல்லாட்டிப் போனா காசக்கொட்டி வைத்தியம் பார்த்தும் 'ம்ஹும் இந்த மருந்து என்னை மாத்த முடியாது'ன்னு சாப்பிடாம விட்டுட்டா கோவிந்தா கோவிந்தாதான்.

என்ன மண்டையப் பிச்சுக்கிறீங்களா? வேண்டாங்க. சமாதானத்த வெளியில தேடாம அவங்கவங்க மனசுலதான் இருக்குன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா 'பாரனாய்ட்' பின்னங்கால் பிடரில அடிச்சா மாதிரி பிறழ்ந்து ஓடிடும்.

17 comments:

Ayyanar Viswanath said...

நல்ல இடுகை ஜெஸிலா

/இந்தப் பிரச்சனை வர்றதுக்கு காரணம் மூளையில 'அமிக்டலா'ன்ற (Amygdala) ஒரு பகுதியில சரியா இருக்க வேண்டிய நரம்பணுக்கள் சிதறிப்போய் பாதிப்படைந்திருந்தாலோ, அல்லது சிறு வயதில் சில சம்பவங்களால் பாதிப்பிருந்தாலோ, அதுவுமில்லாம வேற நோய்க்கு சாப்பிடுற மருந்தோட பக்கவிளைவினாலோ இந்த 'பாரனாய்ட்' வரலாம்./

எப்படி இதெல்லாம் .சமீபமா ஒரே மருத்துவமா இருக்கே என்ன ரகசியம் :)

குட்டிபிசாசு said...

இந்த பதிவை நீங்க வேண்டுமென்றே தமிழ்மணத்துக்கு அனுப்பின மாதிரி இருக்கு, ஏனென்றால் இப்ப நிறைய பேர் எதாவது அவர்களுக்கு பிடிக்காததை சொன்னால் பின்னூட்டத்தில் பிடிவாதமாக திட்டுராங்க!!சுத்தமாக சகிப்புத்தன்மையே இல்லை!!ஹஹஹ..
அவர்களுக்கு நல்ல உபயோகமான பதிவு!!

வாழ்த்துக்கள்!!

தென்றல் said...

நல்லா technicalஆ எழுதி இருக்கீங்க..., ஜெஸிலா!

நன்றி!

Jazeela said...

//சமீபமா ஒரே மருத்துவமா இருக்கே என்ன ரகசியம் :) // ரகசியமெல்லாம் ஒண்ணுமில்ல அய்யனார். நம்ம மக்கள் தொண்டை வலின்னு மருத்துவர்கிட்டப் போனா எண்டோஸ்கோப்பி, லாப்ரோஸ்கோப்பின்னு பணம் பழுக்க வச்சிடுறாங்க. அதனால் நோய்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிஞ்சி வச்சிருந்தா நல்லதுதானே?

//இந்த பதிவை நீங்க வேண்டுமென்றே தமிழ்மணத்துக்கு அனுப்பின மாதிரி இருக்கு, ஏனென்றால் இப்ப நிறைய பேர் எதாவது அவர்களுக்கு பிடிக்காததை சொன்னால் பின்னூட்டத்தில் பிடிவாதமாக திட்டுராங்க!!சுத்தமாக சகிப்புத்தன்மையே இல்லை!!// என்னவொரு சிந்தனைப்பா குட்டிபிசாசுக்கு! எப்படிங்க இப்படிலாம் யோசிக்க முடியுது உங்களால் ;-)

நன்றி தென்றல்.

அபி அப்பா said...

எனக்கு என்ன பின்னூட்டம் போடுவதுன்னு தெரியாத காரணத்தால் ஹி.ஹி

ஜெஸிலா said...
குசும்பு தாங்கல. இப்படி இருந்தா ஏன் வெர்ட்டிகோலாம் வராது. உடற்பயிற்சி செய்யுங்கன்னா தட்டச்சு பயிற்சில நடக்குது ! ;-))

Jazeela said...

//எனக்கு என்ன பின்னூட்டம் போடுவதுன்னு தெரியாத காரணத்தால் ஹி.ஹி// 'ஹி..ஹி..' கூட பாரனாய்ட் நோயின் அறிகுறியாக்கும் ;-)))

ஆமா அங்கு எழுதினத இங்க ஏன் வந்து ஒட்டுனீங்க??

லொடுக்கு said...

இப்போல்லாம் உங்க பதிவு படிக்கும் போது எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு சுத்துதே அதுக்கு என்ன பேரு? Girreniod??

லொடுக்கு said...

//ஆமா அங்கு எழுதினத இங்க ஏன் வந்து ஒட்டுனீங்க?? //

அவர்தான் கள்ளகாப்பி அடிக்குறதுல மன்னனாச்சே!!

Jazeela said...

//இப்போல்லாம் உங்க பதிவு படிக்கும் போது எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு சுத்துதே // என்ன லொடுக்கு இப்படிலாம் எழுதலாம்னு சொல்றீங்களா இல்ல வேண்டாம்னு சொல்றீங்களா? புரியாம என் தலதான் சுத்துது இப்போ.

//அவர்தான் கள்ளகாப்பி அடிக்குறதுல மன்னனாச்சே!!// அபி அப்பா உங்களுக்கு முன்னாடி பென்ஞ்ச் நம்ம லொடுக்குதான்னு சொல்லவேயில்லையே ;-)

------------------------------------------- said...

It was really very nice going through you article on Paranoid. Out of curiosity i just want to know that.. certain things which you have publised is almost applicable to each and everybody on this earth. I believe atleast one attribute will be applicable to you also... Do we need to think that we too have paranoid... which needs to be treated ... Edhaarthamaaga oru manidhanin manadhanukku irrukkira vishayam endru eduthu kolla mudhiyadha ?!

------------------------------------------- said...

It was really very nice going through you article on Paranoid. Out of curiosity i just want to know that.. certain things which you have publised is almost applicable to each and everybody on this earth. I believe atleast one attribute will be applicable to you also... Do we need to think that we too have paranoid... which needs to be treated ... Edhaarthamaaga oru manidhanin manadhanukku irrukkira vishayam endru eduthu kolla mudhiyadha ?!
johnjosephj@gmail.com

------------------------------------------- said...

It was really very nice going through you article on Paranoid. Out of curiosity i just want to know that.. certain things which you have publised is almost applicable to each and everybody on this earth. I believe atleast one attribute will be applicable to you also... Do we need to think that we too have paranoid... which needs to be treated ... Edhaarthamaaga oru manidhanin manadhanukku irrukkira vishayam endru eduthu kolla mudhiyadha ?!

------------------------------------------- said...

if you dont mind, can you analyse my issue and comment on that... i just wanted to know wethr its paranoid or not....

Jazeela said...

//Out of curiosity i just want to know that.. certain things which you have publised is almost applicable to each and everybody on this earth. I believe atleast one attribute will be applicable to you also... // அதத்தான் நான் கட்டுரையிலேயே சொல்லியிருக்கேனே //இதுதான் எல்லாரும் செய்ற விஷயமாச்சேன்னு நீங்க கேட்கலாம். அதுக்காக எல்லாத்துக்கும் 'பாரனாய்ட்'னு சொல்ல முடியாது. இப்படி தோணும் போதே 'ச்சே நமக்கேன் இப்படி தப்பு தப்பா நினக்க தோணுது, அவங்க சொல்றதுல உண்மையிருக்குன்னு மனச நாமே சமாதனப்படுத்திக்க முடியும்னா தப்பிச்சோம். 'பாரனாய்ட்' வந்த பிறகு குணப்படுத்த மருத்துவர தேடுறத விட அதுல விழுந்திடாமப் பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்//
//Edhaarthamaaga oru manidhanin manadhanukku irrukkira vishayam endru eduthu kolla mudhiyadha ?!
// விஷயத்தின் தீவிரத்தை பொறுத்தது. கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரை விசாரிப்பதே மெய் என்றிருக்க, காரணமே இல்லாமல் ஒருவரை சந்தேகிப்பதை எதில் சேர்ப்பது? முன்முடிவோடு இருந்துக் கொண்டு கற்பனைகளை மனதில் பிரம்மாண்டமாக்கிக் கொண்டால் பாரனாய்டின் அறிகுறி எனலாம்.

Jazeela said...

//if you dont mind, can you analyse my issue and comment on that... i just wanted to know wethr its paranoid or not.... // Sure. But when you have a doubt about yourself and questioning, may be you are still not trapped. ;-)

Jazeela said...

டெல்பைன், ஒரு மருத்துவரே வந்து பாராட்டு தெரிவிப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து எழுதினாலும் அதில் கிடைக்கும் பாராட்டில்தான் முழுமைப் பெறுகிறது. மிக்க நன்றி..

Unknown said...

hi jezzila innaiku than muthal thadavai intha pakkatha pakkuren ... vallthukal .... ungaloda sirugathai vittu vilagi ... paduchen . nala irunthathu....vallthukal.. nanri

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி