Friday, July 06, 2007

பழிக்கு பழி

ஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.


மனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா' போகணும்னு படிச்சி தெரிஞ்சுக்குது இந்த புறா. சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத்திடலாமா?



நீ மட்டும் தான் ஓட்டப் போட்டு காசு சேமிப்பியா நாங்களும்தான்னு போட்டி போடுதுங்க. முதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.




சொன்ன பேச்சு கேளு மக்கர் பண்ணாதேன்னு உலுக்குது. நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாதவங்கள (மேலாளர்/ மனைவி/ கணவன்/ துரோகி) அந்த இடத்துல வச்சு பாருங்க சிரிப்பா வருது ;-)



உன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது.

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசம்.

கோபிநாத் said...

\\சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத்திடலாமா?\\

\\ுதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.\\

\\உன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது. \\

ஜெஸிலாக்கா.....கலக்கலான படங்கள்
comments எல்லாம் சூப்பர் ;))))

குட்டிபிசாசு said...

//உன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது. //

ரொம்ப தான் ஆசை!!
ஹிஹி!! :)))

லொடுக்கு said...

தலைப்பை பார்த்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன். :)

Jazeela said...

ஆமா முத்துலெட்சுமி இந்த ஐந்தறிவுகளின் அட்டகாசம் தாங்க முடியலை ;-)

கோபி படங்களெல்லாம் உங்க பொறந்தநாள் பரிசா வச்சிக்கிடுங்க ;-) அப்புறம் அந்த முட்டாய் பொட்டி இன்னும் வந்து சேரலையே ;-)

ரொம்ப தான் ஆசைன்னு அந்த வரிகுதிரையத்தானே சொன்னீங்க குட்டிபிசாசு? கண்டிப்பா படம் போட்ட என்னை இல்லையே ;-)

லொடுக்கு நீங்க பயந்துட்டீங்களா? கேட்கவே எனக்குதான் பயமா இருக்கு. ;-) அப்படி பார்த்தா அந்த தலைப்புல நீங்கதானே எழுதணும் ;-)

லொடுக்கு said...

//அப்படி பார்த்தா அந்த தலைப்புல நீங்கதானே எழுதணும் ;-)//

எழுதிட்டா போச்சு :)

Sumathi. said...

ஹாய்,

சூப்பர் போங்க..

நான் கூட என்ன்வோனு நினைச்சு வந்து பார்த்தா..ஹா ஹா ஹா...வாய் விட்டு சிரிச்சுடேன்.

குட்டிபிசாசு said...

//ரொம்ப தான் ஆசைன்னு அந்த வரிகுதிரையத்தானே சொன்னீங்க குட்டிபிசாசு? கண்டிப்பா படம் போட்ட என்னை இல்லையே ;-)//

இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா!! :))

Jazeela said...

//எழுதிட்டா போச்சு :)// அடப்பாவி மக்கா, அப்படி ஏதும் செஞ்சிடாதீங்கப்பா.;-)

//நான் கூட என்ன்வோனு நினைச்சு வந்து பார்த்தா..ஹா ஹா ஹா...வாய் விட்டு சிரிச்சுடேன்.// வாங்க சுமதி, ரொம்ப நாளா இந்த பக்கம் உங்க காத்தேயில்லையே ;-) வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். இப்ப நீங்க சிரிச்சதுக்கு இந்த மருத்துவச்சிக்கு 'ஃபீஸ்' வெட்டுங்க பார்ப்போம் ;-)

//இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா!! :))// குட்டிபிசாசே எந்த விளையாட்டுக்கு? ஹே, இங்க யாராவது ஏதாவது விளையாட்டு நடத்துறாங்களா என்ன ;)

Ayyanar Viswanath said...

மின் மடல்களை கூட பதிவாய் மற்றும் உங்கள் திறமைய என்னன்னு சொல்ல?
:)

அபி அப்பா said...

அறிவுகண்ணை திYஅக்கும் அருமையான பதிவு:-))

Jazeela said...

//அறிவுகண்ணை திYஅக்கும் அருமையான பதிவு:-))// அபிஅப்பா அப்படியெல்லாம் கூட ஒரு கண் இருக்கா என்ன ?

//மின் மடல்களை கூட பதிவாய் மற்றும் உங்கள் திறமைய என்னன்னு சொல்ல?
:)// என்னான்னு வேணும்னாலும் சொல்லிக்கிடுங்க நமக்கு ஆட்சேபனையே இல்லை ;-) மாகாணத்துல முக்கால் வாசிப்பேர் அப்படித்தான் குப்பை கொட்டுறாங்க. மூசா நபி காலத்து மடல்களையெல்லாம் போட்டு அதை மெச்ச ஒரு கூட்டமும் வந்து போயி ரொம்ப கடுப்பாயிடுச்சு. இனி யாருக்கும் வாய்ப்பு தரக் கூடாதுன்னு ஒரு வலைப்பூவே மின் மடல்ன்னு ஆரம்பிக்க இருந்தேன்னா பார்த்துக்கிடுங்க. அதான் திருந்தியிருந்த நானும் இடைவேளி வரும் போது இப்படி கூட்டணியில் ஐக்கியமாகிடுறேன்.

கோபிநாத் said...

\கோபி படங்களெல்லாம் உங்க பொறந்தநாள் பரிசா வச்சிக்கிடுங்க ;-) அப்புறம் அந்த முட்டாய் பொட்டி இன்னும் வந்து சேரலையே ;-)\\

ரொம்ப நன்றிக்கா....முட்டாய் தானே நேரில் பார்க்கும் போது கொடுத்துட்ட போச்சு ;))))

Anonymous said...

//பழிக்கு பழி//

ப் -வராதா?

Sumathi. said...

ஹாஇ,

யார் சொன்னது, நான் உங்க எல்லா போஸ்ட்டயும் படிக்கறேன், ஆனா சில சமயம் கமெண்டரதுக்கு தான் லேட் ஆயிடுக்து.அதனால தான் ஜூட்....for comnts.hi hi hi hi....

Anonymous said...

nalla comments, nice post jazeela ;-)

Jazeela said...

அனானி வரும்னா போட்டுடலாம் ;-)

நன்றி சுமதி. என் பதிவை படிக்கவும் ஆளிருக்கா, கேட்க சந்தோஷமாத்தான் இருக்கு ;-)

நன்றி ஹனிஃப் பாய்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி