Sunday, July 29, 2007

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.

என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:

வெட்ட வெளியில் வெக்கையில் அவிய திட்டமிட்டே கரமா பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு. அந்த புல்வெளிக்குள் நான் நுழைந்து "எல்லோருக்கும் வணக்கம்" என்று சொல்ல எல்லோரும் எழுந்து நிற்க. "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் உட்காருங்க" என்று நான் சொல்ல, "இத முன்னாடியே சொல்லியிருந்தா எழுந்து நின்னுருக்க மாட்டோம்ல" என்று தன் பெரிய உடம்பை அசைத்ததற்கான சிரமத்தை தெரிவித்தார் அவர். அதே நபர் "உங்களுக்கு யார் யாருன்னு தெரியுமா, அறிமுகம்.." என்று ஆரம்பிக்க நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். ஆனால் அந்த ஒருவர் மட்டும் யார் என்று யோசித்த போது 'க்ளூ' வேண்டுமா என்று தொடங்கும் முன்பே "பெனாத்தல்..?" என்று சரியாக கேட்டுவிட்டேன். அறிமுகத்திற்கு பிறகு சுடான் புலி உரும தொடங்கியது.

ஆரம்பத்தில் உருமியது மட்டும்தான் அதன்பின் அடித்த குச்சிக் கோலாட்டத்தில் (கும்மி மட்டும்தான் சொல்லனுமா என்ன?) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு "அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேசினார். பெனாத்தலார் என்னிடம் "என் பதிவுகளை படிப்பீங்களா?" என்று கேட்க நான் திருட்டு முழியோடு "ஆரம்பத்துல படிச்சுக்கிட்டு இருந்தேன் - தேன்கூடு போட்டிக்கெல்லாம் எழுதும் போது ஆனா சமீப காலத்தில் படிக்கிறதில்லன்னு" உண்மையை ஒப்புக் கொண்டேன். "ஓஹோ ஆரம்பத்தில் அந்த தப்பெல்லாம் செஞ்சிருக்கீங்க அப்புறம் திருந்திட்டீங்க" என்று எடுத்துக் கொடுத்தார் சுடான் ஹீரோ.

சென்ஷியிடம் டெல்லியில் இருந்த அனுபவத்தை கேட்க, அவர் அங்குள்ள இடம், மொழி, கலாச்சாரம் பற்றி பேசுவார் என்று ஆர்வமானால் அவர் டெல்லி வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக முத்துலெட்சுமி, மங்கை, கார்த்திக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். மாலனை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதென்று சொன்னார் (அதற்காக வருந்தினாரா சந்தோஷப்பட்டாரா என்று அவர் முகபாவம் சொல்லவில்லை). நான் அவரிடம் 'சென்ஷி'யின் பெயர் காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டேன். தன் பெயருடன் தன் நண்பர் பெயரை இணைத்து வைத்துள்ளதாக சொன்னார். ஜாதி, மத பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்களெல்லாம் இப்படி வேறு பெயரில் எழுதுவதாகவும் சொன்னார் (என்னவொரு புத்திசாலித்தனம்). அவரிடம் நான் 'ரிப்பீட்டு' என்ற அவருடைய வழக்கமான பின்னூட்டத்தை தவிர வேறு என்ன உருப்படியாக எழுதுவீர்கள் என்று கேட்டு வைத்தேன். "உருப்படியில்லாத உங்க வலைப்பதிவுக்கெல்லாம் அந்த பின்னூட்டம் கூட கிடையாது உங்க பதிவுகளை படிப்பதே இல்ல, நல்லாவே இருக்காது" என்று சொல்ல. உடனே லொடுக்கு "இல்லப்பா நீ படிப்பதில்லையா நல்லாத்தான் எழுதுவாங்க" என்று எனக்கு ஆதரவாக திருவாய் மலர. "மொக்கையாவும் இருக்காது, ரொம்ப நல்லாவும் இருக்காது, அதனால் நான் படிக்கிறதே இல்லப்பான்னு" சலித்துக் கொண்டார் சென்ஷி.

என் கணவர் பாவம் போல லொடுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்திருந்தார் ஏற்கெனவே அறிமுகமான முகம் என்பதால். லொடுக்கு தன் மனைவி ஜெசிலாவை மகள் மரியமையும் (ஆமாங்க அவர் மனைவி பெயரும் ஜெசிலா) அழைத்து வந்ததால் ஒருவித துணையாக இருந்தது எனக்கு. ரொம்ப காலம் பழகிய நண்பர்களாக உணர்வதால் லொடுக்கு தம்பதியோடு பேசுவது மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருந்தது. இருவரின் மகள்களும் விளையாட அவர்களுக்கு 'சாக்லெட்' வாங்கி குஷிப்படுத்தினார் அனானி தியாகு. (என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்.) தியாகு என்னிடம் "உங்க மகள் ரொம்ப 'கியூட்' காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுட்டாங்க" என்றார் மிகவும் பரிதாபமாக. கோபி அறிவு பசியில் வந்திருப்பாராக இருந்திருக்கும் அய்யனார்- சுரேஷின் தீவிர வாசிப்பனுபவங்களை இரண்டு காதுகளையும் சமர்பித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்ப நல்ல சாந்தமான பையனாக தெரிந்தார் கோபி.

சுடானை பற்றி ஏதாவது சொல்லுங்க என்று சுடான் புலியிடம் கேட்க "இப்போதைக்கு அந்த நாடு அப்படியேதாங்க இருக்கும். எந்த முன்னேற்றத்திற்கான முயற்சியும் தெரியல" என்று சுருங்க முடித்தார். "அபி அப்பா பதிவை படிக்காம பின்னூட்டம் போடுவதை எப்போ நிறுத்த போறீங்க" என்று நான் கேட்க வழக்கம் போல அவர் எழுதுவதை போலவே ஏதோ தெளிவில்லாமல் பதில் அளித்தார். "தான் ஓட்டவாயில்லை ஒளிவுமறைவில்லாமல் இரகசியங்களை 575 பேரிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் சொல்லிவிடுவேன்" என்று ஒப்புதல் வாக்குமூலமளித்தார். அது மட்டுமில்லாமல் சொற்பிழை அதிகம் செய்வதால் அனானியாக பின்னூட்டம் போடமுடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கம் வேறு (ரவிசங்கர், சீக்கிரமா ஒரு தமிழ் பிழை திருத்த மென்பொருளுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா- ரொம்ப அவசியப்படுது). "உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே" என்று நான் கேட்டதற்கு. "இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.

"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா? உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி "ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் "அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை" என்று சமாளித்தேன். "செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக! குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் "ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா?" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் "நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல "அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்" என்று சிரிக்க. உடனே சுரேஷ் "நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். "உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. "அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது" என்று உண்மை உரைத்தார். "மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு சுட்டிக் கூட அனுப்பினேனே" என்று என்னிடம் அய்யனார் ஆர்வமாக கேட்க "ஆமா படிச்சேன். நல்லா இருந்தது. நிறைய எழுத மாட்றார்" இப்படி நல்ல எழுதுபவர்கள் நிறைய எழுதாததை சோகமாக சொன்னேன். சுரேஷும் "ஆமாம். நானும் சன்னாசி வாசிப்பேன் நல்லா எழுதுவார்" என்றார்.

திடீரென்று சென்ஷி "நட்சத்திர பதிவரை எந்த அடைப்படை தகுதியில் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்று ஆவேசமாக கேட்க நான் விளக்கம் அளித்தும் திருப்திப்படாமல், "அதெப்படிங்க அந்த நிர்மலோ யாரோ நட்சத்திர வாரத்தில் ஒரே ஒரு பதிவு போட்டோ, ஒண்ணுமே எழுதாமலோ ஒரு பிரச்சனை வந்து எல்லாம் கிண்டல் செஞ்சாங்களே ஏன் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நட்சத்திரமாக்கணும்" என்று கேட்க. "தமிழ்மணம் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி செய்யாதது தமிழ்மணத்தின் குற்றமாகாது" என்று சொல்லியும் 'இல்லை இல்லை' என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்ஷி. (அவருக்கு அய்யனார் நட்சத்திரமானதில் கடுப்போ என்னவோ!). "அபிஅப்பா திமுக பற்றிய அரசியல் கட்டுரை எழுத வேண்டாம் கண்டிப்பாக உங்க 'இமேஜுக்கு' யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று லொடுக்கு கருத்து சொல்ல, அந்த மாதிரி கட்டுரைகளை தனிமடலாக வலம் வர செய்கிறேன். அந்த உறவின் தீவிரத்தில்தான் லக்கிலுக் என்னை வந்து சந்தித்தார் என்று சொன்னார்.

என்னை விட மிக குறைவாக பேசியது இரண்டு பேர். 1) கதிர், பாவனா பற்றி பேசும் போது மட்டும் வாய் திறந்தார் (ஜொள்ளு விட இல்லப்பா, பேசுறதுக்கு). அவர் கடைசியாக எழுதிய நிராகரிப்பட்டவர்கள் பற்றி நான் சிலாகிக்கும் போது கொஞ்சம் இலச்சையில் முகம் சிவந்தார். 2) சுல்தான், வந்தவுடன் என்னை எங்கேயோ பார்த்த நினைவு இருப்பதாக சொன்னார். அதன் பிறகு 'எங்கே பார்த்திருக்கிறேன்' என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாரோ என்னவோ வாய் திறந்து பேசி நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் போகும் போது "நீங்க ஆவேசமா பேசி பார்த்த நினைவு எங்கன்னுதான் தெரியலை" என்றார் மறுபடியும். அதுவா ஏதாவது பட்டிமன்றத்தில் பார்த்திருப்பீர்கள் என்று நான் சொல்ல "ஆம்மாம்மாமா, லியோனி பட்டிமன்றத்தில் பேசினீங்கள, அதானே பார்த்தேன்" என்று முகம் மலர்ந்தார். தெளிவுப் பெற்றதால் தலை வெடிக்காமல் கண்டிப்பாக தூங்கியிருப்பார் என்று நம்புகிறேன்.

அப்புறம் இடையிடையே தமிழச்சி- செல்லா பிரச்சனை, லக்ஷ்மி- மோகன்தாஸ் வாதங்கள், எது சரி- எது தவறு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமித்த கருத்தாக எல்லோரும் சொன்னது வலையில் கும்மி கூடிய பிறகு காட்டமான வாக்குவாதங்களும், புழுதி வாறி இறைக்கும் ச(சா)கதி சண்டைகளும் குறைந்துவிட்டதாக பலர் சந்தோஷப்பட்டாலும் சிலர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.

இப்படியே பேசி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை ஓட்டிவிட்டு அபிஅப்பா தயவிலா யாரோட தயவிலென்று தெரியாது (யாராக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர்) 'ஆர்டர்' பண்ணி சாப்பிட்டுவிட்டு பதிவர்களுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.

55 comments:

அபி அப்பா said...

ஆஹ 1 வெள்ளி வீணா போச்சு! நல்ல பதிவு தான் போங்க!

லொடுக்கு said...

இருந்தாலும் அய்யனாருக்கு நீங்க ஓவரா சப்போர்ட் பண்ணுறீங்க. :(


அழகாக பரிகசித்தமைக்கு நன்றி.

அபி அப்பா said...

வலைபதிவர் சந்திப்பு அறிவிப்பிலேயே தான் தெளிவா சொல்லியிருப்போமே, தமிழை அடுத்த கட்டம் கொண்டு போவது எல்லாம் கிடையாது சும்மா கும்மி தான்ன்னு! பட்டறை எல்லாம் ஆஸீஃப் வந்த பின்ன தான்! பொழுது போசுல்ல 5 மணி நேரம் அது போதும்! ஆனா உங்க ரங்கமணி தான் இந்த சந்திப்பிலே பாராட்டபட வேண்டியவர்!

குசும்பன் said...

"என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்."

என்னங்க உங்க பொண்ணு என் பக்கம் கூட திரும்ப மாட்டேங்கிறா, பயந்து கிட்ட கூட வர மாட்டேங்கிறான்னு நான் அடிக்கடி கேட்கும் பொழுது நீங்க சிரிச்சதுக்கான அர்த்தம் இப்பதாங்க புரியுது...நல்லா இருங்க:)



"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா? உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர்.
அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்"


விளையாட்டுதணமா எழுதுவதால் என்னை அப்படியே நினைத்து விட்டால் என்ன செய்வது...:(

குசும்பன் said...

"நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். "

பொண்ணுங்க எல்லாம் விவரம்ங்க சீக்கிரம் ஏமாற மாட்டாங்க...

குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்)

மக்கள்ஸ் பார்த்துக்குங்க! உண்மை என்றாவது வெளியே வந்துதான் ஆகும் என்பதுக்கு இதுவே சாட்சி.


அபி அப்பாவிடம் ஒரு பதிவர் பதிவு போடும் முன்பு மெயில் அனுப்பி அபி அப்பா அப்ரூவ் செஞ்ச பிறகுதான் அவுங்க பதிவு போடுவாங்க என்பதை சொன்ன பிறகு துபாயே குலுங்கம் அளவுக்கு எல்லாம் சிரிச்சீங்களே அது ஏன்?

Unknown said...

உண்மையைச் சொல்லனும்னா, 'எல்லா பதிவர்களும் (வெறும் கும்மியடிக்காமல், அய்யனார் பேசியது போல்) அறிவு பூர்வமாக பேசுவார்கள் நாம் என்னத்தை பேர் போடறது' என்று நினைத்தே வருவதற்கு தாமதமானது. வந்து பார்த்தால் வித்தியாசமாகத்தான் இருந்தது. கல்லூரிக் காலங்களில் பேச்சில் வாரி விடும் நினைப்புத்தான் வந்து வந்து போனது.

கும்மியடிக்கவும் ஒரு திறமை வேணும். அது நம் மக்களிடம் சாதாராணமாகவே பொங்கி வழிகிறது.

பாத்திம் மற்றும் மரியம் பாட்டில் மூடியில் தண்ணீர் பிடித்து குடித்து விளையாடியது முக்கியமாக மனதுக்கு இதமான விடயம். ஆமா பாத்திமுக்கு அடிபட்ட இடத்திலேயே இன்னுமொரு ப்ளாஸ்டர் போட வந்ததும், மரியம் தனக்கும் ப்ளாஸ்டர் கேட்டதும்.. சரி பாத்திமுக்கு நல்லாயிடுச்சா...

கல்லூரிக் காலத்தை மீண்டும் மனதிலிறுத்திய, இந்த பதிவர் சந்திப்புக்காக, தனியாக அழைத்த அபிஅப்பாவுக்கும் தம்பிக்கும் நன்றி சொல்லியே ஆகனும்.

வடுவூர் குமார் said...

அங்கு வராமலே மூன்றாம் கண் மூலம் பார்க்க வைத்துவிட்டீர்கள்.
நன்றி.

Jazeela said...

அபி அப்பா படிச்சிட்டு வாங்க ப்ளீஸ்!

அடடா! என்ன லொடுக்கு நான் என்னத்த சப்போர்ட் பண்ணிட்டேன்? நான் எப்போதுமே நியாயத்தின் பக்கமென்று உங்களுக்கு தெரியாதா?

அபி அப்பா மறுபடியும் சொல்றேன் பொதுவான பின்னூட்டம் வேண்டாம். :-) தயவு செய்து படிச்சிட்டு வாங்க. நீங்க எங்க ரங்கமணியை பாராட்டினதையெல்லாம் சொல்லிட்டேன் அவருக்கு போய் சேர்ந்துவிட்டது ;-) அப்புறம் அது ஆஸீஃப் இல்ல ஆசிப் தான், விட்டா sheep, goat ன்னு சொல்லுவீங்க போல :-)

//என்னங்க உங்க பொண்ணு என் பக்கம் கூட திரும்ப மாட்டேங்கிறா, பயந்து கிட்ட கூட வர மாட்டேங்கிறான்னு நான் அடிக்கடி கேட்கும் பொழுது நீங்க சிரிச்சதுக்கான அர்த்தம் இப்பதாங்க புரியுது...நல்லா இருங்க:)// குசும்பரே அதற்கு காரணம் இதுவா என்று தெரியவில்லை. உங்களுக்கு என்ன குறைச்சலுங்க?

//விளையாட்டுத்தனமா எழுதுவதால் என்னை அப்படியே நினைத்து விட்டால் என்ன செய்வது...:(// எப்படியே நினைத்துவிட்டால்?

//அபி அப்பாவிடம் ஒரு பதிவர் பதிவு போடும் முன்பு மெயில் அனுப்பி அபி அப்பா அப்ரூவ் செஞ்ச பிறகுதான் அவுங்க பதிவு போடுவாங்க என்பதை சொன்ன பிறகு துபாயே குலுங்கம் அளவுக்கு எல்லாம் சிரிச்சீங்களே அது ஏன்?// :-)))))) ரொம்ப அப்பாவியா இருக்கீங்க :-)

Jazeela said...

சுல்தான் பாய், என் மகள் பெயர் பாத்தின் ஜுமானா (Faatin Jumaana). நீங்க வந்த உடனே அவள் என்னிடம் வந்து அந்த பின்ங் ஷர்ட் யாரு என்று கைக்காட்டி கேட்டா, ஏன்னு தெரியலை. இப்போது அடிப்பட்ட இடம் கொஞ்சம் ஆறிவிட்டது. உண்மையில் சந்திப்பு கலைக்கட்டியது.

நன்றி வடுவூர் குமார்.

கதிர் said...

நண்பர்களே!

இந்த வலைப்பதிவர் சந்திப்பில் தமிழ்பதிவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், தமிழை இணையத்தில் வளர்ப்பது எப்படி என்றும் ஜெஸிலா அவர்கள் பேசுவதற்காக குறிப்பி எடுத்து வந்திருந்தார்கள். பாவம் கும்மி கோஷ்டிகள் அவரை பேச விடாமல் தடுத்து விட்டனர்.


//அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர்//

அப்படி பின்னூட்டம் போடறத தவிர பெருசா என்ன எழுதிட்டிங்க நீங்க? :)
சரி அந்த பின்னூட்டமாவது எப்படி இருக்குதுன்னு பார்த்தா வாசகியோட பார்வையிலதான் உங்க விமர்சனம் இருக்கும். படைப்பாளி என்ன சொல்ல வர்றான்றது முக்கிமில்ல. அது அப்படி இருந்திருக்கலாம், இது இப்படி இருந்திருக்கலாம்னு சொல்றத தவிர்த்து குறிப்பிட்டு சொல்லும்படியாக நீங்க என்ன எழுதிட்டிங்கன்னு எல்லாருக்கும் தரம் பிரிச்சி குடுக்க வந்துட்டிங்க?

பூங்காவிலே தங்களது படைப்பு வர்றது பெரிய விஷயமா? அப்படி என்ன பூங்கா பெரிய இந்த இதழா? இல்ல கால் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய இதழா?

அப்படி பூங்காவில வந்துதான் திறமையை நிரூபிக்கணும்னா பூங்காவே தேவையில்ல.

பல மொக்கைப்பதிவுகள் பூங்காவில வந்திருக்கு தெரியுமா உங்களுக்கு.

அது சரியில்ல, இது சரியில்ல என்று அய்யனாரோ, சுகுணா திவாகரோ சொல்லி இருந்தா கூட கும்மி கோஷ்டிகள் கொஞ்சம் யோசித்திருக்கும். :))

இந்த பதிவை நீங்கள் நகைச்சுவையாக எழுதி இருந்தால் இதையும் நீங்க நகைச்சுவையாவே எடுத்துக்கோங்க :))

கதிர் said...

அதிமேதாவித்தனமா அடுத்தவங்கள பத்தி சொல்றதுக்கு முன் உங்க மேதாவித்தனத்தை யோசிச்சிட்டு அப்புறம் எழுதுங்க, பின்னூட்டமிடுங்க.

கிண்டல் செய்வதுபோல வரும் வார்த்தைக்கும், அசிங்கப்படுத்துவது போல வரும் வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் இல்லை.

Jazeela said...

//அப்படி பின்னூட்டம் போடறத தவிர பெருசா என்ன எழுதிட்டிங்க நீங்க? :)//
சத்தியமா ஒண்ணுமே எழுதி கிழிக்க. நான் அறிவுஜீவி, மேதாவின்னு ஏதாவது எங்கேயாவது சொல்லியிருக்கேனா என்ன?

//சரி அந்த பின்னூட்டமாவது எப்படி இருக்குதுன்னு பார்த்தா வாசகியோட பார்வையிலதான் உங்க விமர்சனம் இருக்கும். // ஆமா யாரு இல்லன்னு சொன்னது?

//படைப்பாளி என்ன சொல்ல வர்றான்றது முக்கிமில்ல. அது அப்படி இருந்திருக்கலாம், இது இப்படி இருந்திருக்கலாம்னு சொல்றத தவிர்த்து குறிப்பிட்டு சொல்லும்படியாக நீங்க என்ன எழுதிட்டிங்கன்னு எல்லாருக்கும் தரம் பிரிச்சி குடுக்க வந்துட்டிங்க?// நான் என்ன தரம் பிரிச்சு கொடுத்தேன்? ஏதோ உள்குத்தோடு பேசுறீங்கன்னு புரியுது என்னான்னுதான் புரியலை :-(

//பூங்காவிலே தங்களது படைப்பு வர்றது பெரிய விஷயமா?// பூங்காவில் என் படைப்பு எப்போ வந்தது? சமீபத்தில் வரவே இல்லையே. அப்படியே வந்திருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லையே. ஏன் பூங்காவை இங்க கொண்டு வந்தீங்க?

//அப்படி என்ன பூங்கா பெரிய இந்த இதழா? இல்ல கால் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய இதழா?// என்னடா வம்பா போச்சு நான் பூங்காவை பற்றி என்ன எழுதியிருந்தேன். இருங்க என் பதிவை மறுபடியும் படிச்சிட்டு வரேன்.

//அப்படி பூங்காவில வந்துதான் திறமையை நிரூபிக்கணும்னா பூங்காவே தேவையில்ல.// வேண்டாம்னா விட்டுடுங்க.

//பல மொக்கைப்பதிவுகள் பூங்காவில வந்திருக்கு தெரியுமா உங்களுக்கு.// வரட்டும் வராமல் போகட்டும் என்னவோ நான் தான் பூங்கா நிர்வாகம் மாதிரி கேட்குறீங்க?

//அது சரியில்ல, இது சரியில்ல என்று அய்யனாரோ, சுகுணா திவாகரோ சொல்லி இருந்தா கூட கும்மி கோஷ்டிகள் கொஞ்சம் யோசித்திருக்கும். :))// என்ன சரியில்லன்னு நான் சொன்னேன். ஹய்யோ சஸ்பென்ஸ் தாங்கவில்லை என்னான்னு விளக்கமா சொல்லிடுங்க ப்ளீஸ்.

//இந்த பதிவை நீங்கள் நகைச்சுவையாக எழுதி இருந்தால் இதையும் நீங்க நகைச்சுவையாவே எடுத்துக்கோங்க :))// நான் நகைச்சுவையாதான் எழுதுவதா நினைச்சி எழுதினேன். நீங்க இப்ப எழுதியதிலும் எனக்கு துளியும் வருத்தமில்லை. அப்ப ஏன் இப்படி முடிச்சிருக்கீங்க?

//அதிமேதாவித்தனமா அடுத்தவங்கள பத்தி சொல்றதுக்கு முன் உங்க மேதாவித்தனத்தை யோசிச்சிட்டு அப்புறம் எழுதுங்க, பின்னூட்டமிடுங்க.// அடடா! நான் என்ன மேதாவித்தனமா யோசிச்சேன். எனக்கும் மேதாவித்தனத்திற்கும் சம்பந்தமே இல்லையே. ஏன் இவ்வளவு கோபம்?

//கிண்டல் செய்வதுபோல வரும் வார்த்தைக்கும், அசிங்கப்படுத்துவது போல வரும் வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாமல் இல்லை.// என்னடா வம்பாப் போச்சு. அசிங்கப்படுத்தினேனா? யாரை? எப்போ? எங்கே? சொல்லவே இல்ல? என்னைய்யா நடக்குது இங்க?????

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரிகசிக்கும் என்பதன் அர்த்தம் என்ன கிண்டல் அடிப்பது அல்லது ஒருத்தரை கேலி செய்வது என்ற அர்த்தம் தானே வருகிறது..நகைச்சுவை என்று வரவில்லையே...பூங்கா இதழில் அபி அப்பா பதிவுக்கு நீங்க போட்ட பின்னூட்டம் தான் தம்பியின் பின்னூட்டத்துக்கு காரணம் என்பது கூட புரியாத ஆளா நீங்க ? :(

Jazeela said...

வாங்க முத்துலெட்சுமி நீங்கதான் ஆரம்பிச்சு வச்சீங்கன்னு இப்பதான் பார்த்தேன். கதிர் எழுத்துக்கு அதான் அர்த்தமாகும் என்று இப்பதான் அங்க போய் பார்த்து இப்படி///இது தான் விஷயமா? இதுக்குதான் கதிர் என் பதிவில் கொந்தளிச்சிருக்காரா? அபி அப்பா உங்க அனுமதி வாங்கித்தானே உங்களை கலாய்ச்சேன். உங்க சிஷ்ய பசங்க உங்கள மாதிரி இல்லையே ரொம்ப டென்ஷன் பார்ட்டீங்க போல. கிண்டல் செய்றவங்களை பதில் கிண்டல் செய்யும் போதும் sportiveஆ எடுத்துக்கணும். உள்நேக்கத்துடன் பின்னூட்டம் போடுறீங்கன்னு ரொம்ப கலாய்க்கிறாங்க அபி அப்பா. பாவம் நான். எனக்கு சந்தோஷம்னு கொஞ்சம் கிடைப்பதே இந்த மாதிரி மெகா மொக்கையால்தான் அதையும் படிக்க விடாம இப்படி sentimentஐ போட்டு கெடுத்திடுவாங்க போல இருக்கே. எது எப்படியோ என் பின்னூட்டத்தின் மூலம் யாரு மனசாவது வேதனைப்பட்டிருந்தா மன்னிச்சிக்கோங்க.// ஒரு பின்னூட்டம் போட்டு வந்தேன். சரியா? இல்லாத நினைப்பையும் கொண்டு வந்து விட்டுடுவீங்களே. நல்லா இருங்க.

Jazeela said...

எல்லாருக்கு தெரிவிப்பது என்னவென்றால் நான் சிரிப்பான் அதாவது :-) போட்டால் அது நகைச்சுவைக்காக என்று மட்டும் பொருள் கொள்ளவும். :-)) இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே எழுதுறேன்னு அர்த்தம். :-)))) ரொம்ப சிரிக்கிறேன்னு அர்த்தம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கலப்பா நாம செய்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் பிழை கண்டுபிடிக்க ஆரம்பிச்சா .... குற்றம் பார்த்தால் சுற்றமில்லைன்னு மறந்திடாதீங்க.

//பரிகசிக்கும் என்பதன் அர்த்தம் என்ன கிண்டல் அடிப்பது அல்லது ஒருத்தரை கேலி செய்வது என்ற அர்த்தம் தானே வருகிறது..//முத்துலெட்சுமி இதுக்கு பதில் சொல்லாம விட்டுட்டேனே. நீங்க சரியாத்தான் அர்த்தம் புரிஞ்சிருக்கீங்க. கிண்டல் கேலி சிரிப்பு நகைச்சுவை எள்ளல் இதெல்லாம் ஒரே கோட்டில் வராதா? Tease is different from insult. கிண்டல் கேலி வேறு அவமதிப்பு என்பது வேறு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது என்ன புதுக்கதை நான் ஆரம்ப்ச்சி வைத்தேனா...
என்ன சொல்லவரீங்க..?

Jazeela said...

//இது என்ன புதுக்கதை நான் ஆரம்ப்ச்சி வைத்தேனா...
என்ன சொல்லவரீங்க..?// அடடா வார்த்தையை உடைச்சி அர்த்தம் படிக்காதீங்கப்பா. நான் ஒண்ணுமே சொல்ல வரலை. அபி அப்பாவே நான் சொன்னதை சரியா நகைச்சுவைன்னு புரிஞ்சிக்கிட்டு பதில் எழுதிய பிறகு ':(' இப்படி ஒரு சிரிப்பான் போட்டு பதில் எழுதி இருக்கீங்களே அதை சொன்னேன். இந்த எழுத்தோடு என் குரலும் சேர்ந்து வந்தா ஒருவேளை எந்த toneல் சொல்றேன்னு புரியுமோ? ஏன் நான் எழுதினால் மட்டும் சிரியஸாவே எல்லாரும் பார்க்கிறீங்க? :-((

லொடுக்கு said...

அய்யோ அய்யோ!! என்ன நடக்குது இங்கே???

லொடுக்கு said...

சண்டைகள் இல்லாமல் வரவர தமிழ்மணம் சலிப்பாயிருக்குன்னு நான் சொன்னதுக்காக நமக்குள்ளேயே சண்டை போடுற மாதிரி இருக்கே. :(

Jazeela said...

//"உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே" என்று நான் கேட்டதற்கு. "இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.// கதிர் இதை படிக்கவில்லையா நீங்க? உங்களை நல்லவர் வல்லவருன்னு எங்கேயும் குறிப்பிடாததுதானே கோபம் ? அது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம்னு விட்டுட்டேன். :-))))) இதனால் அறிவிப்பது என்னவென்றால் கதிர் மிகவும் நல்லவர். அமைதியானவர். அளந்து பேசுபவர். 'ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு' என்பதை எப்போவாவது மறப்பவர். :-))

//சண்டைகள் இல்லாமல் வரவர தமிழ்மணம் சலிப்பாயிருக்குன்னு நான் சொன்னதுக்காக நமக்குள்ளேயே சண்டை போடுற மாதிரி இருக்கே. :(// லொடுக்கு நம்ம சண்டை நம்ம வீட்டுக்குள்ளேயே நடக்குது. தமிழ்மணம் வரைக்கும் போகவில்லைன்னு ஒரு திருப்தி இருக்கு :-) அதுவும் இது சண்டையில்லை புரிதலில் பிரச்சனை. இரண்டு வாட்டி பார்த்தாலும் ஒரே வாட்டி பார்த்தாலும் அவங்களை சரியா நான் புரிஞ்சுக்கிறேன் என்னை மாதிரியே மத்தவங்களும் என்னை புரிஞ்சுப்பாங்களா என்ன? :-(

லொடுக்கு said...

//இரண்டு வாட்டி பார்த்தாலும் ஒரே வாட்டி பார்த்தாலும் அவங்களை சரியா நான் புரிஞ்சுக்கிறேன் என்னை மாதிரியே மத்தவங்களும் என்னை புரிஞ்சுப்பாங்களா என்ன? //

நீங்க யாரு.. அய்யனார் கவிதையையே புரிஞ்சுக்குவங்களாச்சே!!! :)))

லக்கிலுக் said...

இந்தப் பதிவு பரிகசிக்கும் பார்வையில் எல்லாம் இல்லையே? நல்லா தானே இருக்கு?

குசும்பன் said...

லொடுக்கு said...
சண்டைகள் இல்லாமல் வரவர தமிழ்மணம் சலிப்பாயிருக்குன்னு நான் சொன்னதுக்காக நமக்குள்ளேயே சண்டை போடுற மாதிரி இருக்கே. :(

என்னது சண்டையா ஹலோ எனக்கு மான் காராத்தே தெரியும் விடு ஜூட்....:)

கதிர் said...

போகிறபோக்கில் நீங்கள் போடும் "நகைச்சுவை" பின்னூட்டங்கள்தான் அடுத்தவர் மனதை நோகச்செய்கிறது என்ற புரிதல் கூட இல்லாமல் இருக்கிறீர்கள் என்ன செய்வது.

"மரமண்டை"
"தரம் தாழ்ந்து விட்டது"

இதுபோன்ற வார்த்தைகள் உங்களுக்கு வேண்டுமானால் நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் படிப்பவர்களுக்கு அது நகைச்சுவையாக தெரிய வேண்டிய அவசியமில்லை.

லொடுக்கு said...

யாரங்கே??

தம்பிக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுக்கச்சொல்லி எவ்ளோ நேரமாச்சு. கொடுங்கப்பா!!!

தம்பி ப்ளீஸ் கூல் டவுன்.

Jazeela said...

//நீங்க யாரு.. அய்யனார் கவிதையையே புரிஞ்சுக்குவங்களாச்சே!!! :)))// :-))))

//இந்தப் பதிவு பரிகசிக்கும் பார்வையில் எல்லாம் இல்லையே? நல்லா தானே இருக்கு?// நன்றி லக்கி லுக்.

//என்னது சண்டையா ஹலோ எனக்கு மான் காராத்தே தெரியும் விடு ஜூட்....:)// என்ன இருந்தாலும் உங்க அளவுக்கும் சென்ஷி அபிஅப்பா அளவுக்கும் யாருக்கும் sportiveஆ எடுத்துக்க தெரியலைப்பா.

//போகிறபோக்கில் நீங்கள் போடும் "நகைச்சுவை" பின்னூட்டங்கள்தான் அடுத்தவர் மனதை நோகச்செய்கிறது என்ற புரிதல் கூட இல்லாமல் இருக்கிறீர்கள் என்ன செய்வது.// அய்யய்யோ அதான் நான் உங்களுக்கு கிண்டலா பின்னூட்டம் போடுவதில்லைப்பா.

//"மரமண்டை"
"தரம் தாழ்ந்து விட்டது"

இதுபோன்ற வார்த்தைகள் உங்களுக்கு வேண்டுமானால் நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் படிப்பவர்களுக்கு அது நகைச்சுவையாக தெரிய வேண்டிய அவசியமில்லை.// அவசியமிருக்க வேண்டாம்தான். விட்டுடுங்க. நான் உங்களை சொல்லலையே. அபி அப்பா அதை சொல்லட்டும் கதிர். யாரால் கிண்டலை கிண்டலாக எடுத்துக்க முடியுமோ அவர்களை மட்டும்தான் நான் கிண்டல் செய்வேன். அது அவருக்கு தெரியும். அபி அப்பாவே இங்கு நடக்கும் அலிச்சாட்டியம் தாங்க முடியாமல் 'ஜுரம் வந்திடுத்து வீட்டுக்கு போகிறேன், மனசில எதுவும் வச்சிக்காதீங்கன்னு' சொல்றார் நல்ல மனுஷர்.

லொடுக்கு, கிண்டல் பண்ணிட்டு அனாவசியமா யார்கிட்டையாவது வாங்கிக் கட்டிக்காதீங்க :-)). நிறைய பேருக்கு கிண்டலின் பொருள் தெரியவில்லை. :D

லொடுக்கு said...

//லொடுக்கு, கிண்டல் பண்ணிட்டு அனாவசியமா யார்கிட்டையாவது வாங்கிக் கட்டிக்காதீங்க :-)). //

நம்ம டார்கெட் அய்யனார் தான் :)) ரொம்ப நல்லவரு.

Ayyanar Viswanath said...

/நம்ம டார்கெட் அய்யனார் தான் :)) ரொம்ப நல்லவரு. /


அடப்பாவி மக்கா இப்படி கொலவெறியோடு திரியுறிங்களே :(

லொடுக்கு said...

//அடப்பாவி மக்கா இப்படி கொலவெறியோடு திரியுறிங்களே :( //

:))))))))))

கதிர் said...

லொடுக்கு காலைல நான் ஜூஸ் குடிக்கறதில்ல, ஒன்லி ச்சாய் :)

Anonymous said...

லொடுக்கு said...
யாரங்கே??

தம்பிக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுக்கச்சொல்லி எவ்ளோ நேரமாச்சு. கொடுங்கப்பா!!!

தம்பி ப்ளீஸ் கூல் டவுன்.

லொடுக்கு ஆரஞ்சு ஜூஸ் தீர்ந்து போச்சு அதான் மிளகாய் ஜூஸ் போட்டு கொடுத்துட்டேன்..கூல் ஆக நேரம் ஆகும்.

Anonymous said...

"அதுவும் இது சண்டையில்லை புரிதலில் பிரச்சனை. "

ஏன் சண்டை போடும் முன் அய்யனார் கவிதை எதுவும் படிச்சீங்களா அப்பதான் புரிதலில் பிரச்சினை வரும்.

Anonymous said...

அய்யனார் said...
/நம்ம டார்கெட் அய்யனார் தான் :)) ரொம்ப நல்லவரு. /

என்னையும் ஆட்டதுல சேர்துக்குங்க:(

Anonymous said...

என்ன இருந்தாலும் உங்க அளவுக்கும் சென்ஷி அபிஅப்பா அளவுக்கும் யாருக்கும் sportiveஆ எடுத்துக்க தெரியலைப்பா.

இன்னும் லொடுக்கு, அய்யானர் ரெண்டு பேரையும் சேர்த்து இருந்தால் எல்லாரையும் என்று சொன்ன மாதிரி இருக்கும், இல்லை என்றால் என் பேரை விட்டு விட்டீங்க என்று சண்டை வரும்

லொடுக்கு said...

//லொடுக்கு காலைல நான் ஜூஸ் குடிக்கறதில்ல, ஒன்லி ச்சாய் :)//

ஓ!! அதான் இப்படி சூடா இருக்கிறியள்.

லொடுக்கு said...

//போலி அய்யனார் said...
என்னையும் ஆட்டதுல சேர்துக்குங்க:(
//

நாங்கள் போலி(ளி)களை ஆதரிப்பதில்லை.

லொடுக்கு said...

//இன்னும் லொடுக்கு, அய்யானர் ரெண்டு பேரையும் சேர்த்து இருந்தால் //

பத்த வச்சிட்டியே குசும்பா.. சாரி சாரி.. பரட்டை!!

Anonymous said...

லொடுக்கு, கிண்டல் பண்ணிட்டு அனாவசியமா யார்கிட்டையாவது வாங்கிக் கட்டிக்காதீங்க :-)). நிறைய பேருக்கு கிண்டலின் பொருள் தெரியவில்லை. :D

எனக்கு மேசை மீது உள்ள பொருள் தெரியவில்லை, அதற்கு எதை வாங்கி கட்ட கூடாது?

Anonymous said...

ஜெஸிலா - ஜெசிலா
அர்த்தம் என்ன?
வேறுபாடு உண்டா?

-பாபு

Anonymous said...

எங்க தலைவர் நச்சத்திரத்தில் இருந்து விடை பெற்று விட்டார் அவருக்கு நன்றி சொன்னீங்களா?

லொடுக்கு said...

//எனக்கு மேசை மீது உள்ள பொருள் தெரியவில்லை, அதற்கு எதை வாங்கி கட்ட கூடாது? //

கண்ணை.

Anonymous said...

அய்யனாருக்கு நன்றியா

நாங்க தமிழ் மணத்துக்கே நன்றி சொல்லிட்டோம் .........முடிஞ்சுதுன்னு :)

கிண்டல் செய்தால் அடி விழும் என்பதால் கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக்குங்க.

Jazeela said...

கலக்க வைக்கும் மன்னிக்கணும் சிரிக்க வைக்கும் பலதரப்பட்ட பெயர்களில் எழுதும் அனானிகளுக்கு நன்றி. :-)))

பாபு, ஆமா எந்த பாபு இது? பெயரின் பொருளா கேட்கிறீங்க? அது தனி மடலில் கிடைக்கும். ஜெஸிலான்னு நான் என் பெயரை தமிழில் எழுதுவேன் ஏனெனில் ஆங்கிலத்தில் Jazeela என்று எழுதுவதால். என் தோழியின் பெயர் ஜெசிலா Jaseela - புரிந்ததா வேறுபாடு? :-) ஆனால் இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்.

Anonymous said...

//பாபு, ஆமா எந்த பாபு இது?//

சத்தியமா நான் அவனில்லை.

Anonymous said...

//ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்//

ரொம்ப நன்றியக்கா.

Unknown said...

எல்லா கிண்டலும் முடிந்தவுடன் ஜோரா ஒரு சண்டை போட்டு மீண்டும் சமாதானமாவோம்.
கல்லூரிக் காலத்திலிருந்து எல்லா கும்மிகளும் இம்மி பிசகாமல் இப்படித்தானா?
கலாய்க்க கடைசியில் ஜெஸிலாவா?

கோபிநாத் said...

\\அபி அப்பாவே இங்கு நடக்கும் அலிச்சாட்டியம் தாங்க முடியாமல் 'ஜுரம் வந்திடுத்து வீட்டுக்கு போகிறேன், மனசில எதுவும் வச்சிக்காதீங்கன்னு' சொல்றார் நல்ல மனுஷர். \\

அபி அப்பா ரொம்ப நன்றிப்பா...வாழ்க வளமுடன்

ALIF AHAMED said...

சண்டை நடக்குதுனு ஆசையா ஓடீவந்தேன் வந்து பார்த்தா புஸ்னு ஆயிட்டு

அடுத்த வாட்டி நடக்கும் போது முன்னாடியே தகவல் அனுப்பவும்

நன்றி :)

Jazeela said...

அட தியாகு! :-)

//ஜோரா ஒரு சண்டையா?// எங்க சுல்தான் பாய் சண்டை, நான் பார்க்கலையே :-))

//அபி அப்பா ரொம்ப நன்றிப்பா...வாழ்க வளமுடன்// ஒரு கை குறையுதேன்னு நினைச்சேன் வந்துட்டீங்க. வாங்க கோபி, உங்களோடு சேர்ந்து நானும் நன்றி சொல்லிக்கவா? :-))

சும்மா அதிருதுல said...

லொடுக்கு said...
இருந்தாலும் அய்யனாருக்கு நீங்க ஓவரா சப்போர்ட் பண்ணுறீங்க. :(


///

ripitteeyy

லொடுக்கு said...

இனிமேல் மின்னலுக்கு தகவல் தவறாமல் அனுப்பப்படும். :)

Jazeela said...

வாப்பா மின்னலு. உலகம் முழுக்க ஃபோன் பறந்திருக்கு நீங்க மிஸ்ஸாகி போய்டீங்க போல :-)). அடுத்த முறை லேட்டா வந்த அர்ச்சனா ஸ்வீட்டோடத் தான் வரணும் :-)))

யார்ப்பா அந்த 'சும்மா அதிருதுல'? பூச்சாண்டி படமெல்லாம் போட்டு என்ன மாதிரி சின்ன புள்ளைங்களை பயம் காட்டிக்கிட்டு :-) அந்த ரிப்பீட்டு spelling mistake RepeatTU--ன்னு இருக்கணும் :-)

நன்றி லொடுக்கு. மறுபடியும் என் வேலையை மிச்சப்படுத்திட்டீங்க ;-)

Anonymous said...

jazeela enRaal arabic arththappadi 'miguntha nanRiyaRithaludaiya' .

SudanikaL 'jaseela' enRu arabiyil ezuthuvaargaL. aanaal athu pizai.

- Babu

Anonymous said...

shukran jazeelan

Jazeela said...

நன்றி பாபு. 'ஷுக்ரன் ஜெஸீலனை' வைத்து எடுத்த பொருள் அது என்று புரிகிறது. எனக்கு தெரிந்து எனது பெயரின் பொருளானது 'பரந்த மனம் படைத்தவள்' 'தாராள மனசு' என்றும் வைத்துக் கொள்ளலாம்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி