Thursday, April 10, 2014

பிள்ளை மனம்

'அபுதாபியில் கில்லர் கரோக்கே' என்ற விளம்பரத்தைப் பார்த்து, "இதில் நான் பங்கேற்க போகிறேன்" என்று சொன்ன உடன் என் மகள் ஃபாத்தின் "ம்மா பாம்பு உங்க உடம்ப சுத்தும், பச்சோந்தி உங்க தலையில ஏறும், தவளை மேலே குதிக்கும்" என்றெல்லாம் அடுக்க அடுக்க நான் "பரவாயில்ல பரவாயில்ல கடிக்காதுல" என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். உடனே என் மகன் ஃபாதில் "அப்போ எங்கள 'ஸ்கூலுக்கு' யாரு கிளப்புவாங்க" என்றான், "அதுக்கென்னப் பார்த்துக்கலாம்" என்றேன். "எங்களுக்கு யார் சமச்சித் தருவாங்க" என்றான்.. அவன் சொல்ல வருவதைப் புரிந்ததென்றாலும் தெரியாதது போலக் காட்டிக் கொண்டு கோபமாக இருப்பது போல நான் "ஆமாண்டா, உங்களுக்கு சமைக்கவும், கிளப்பவும் தானே ம்மா வேணும்? பரவால அதுக்கெல்லாம் ஆள் வைச்சிக்கலாம்" என்றதுதான் தாமதம். பெரும் குரலெடுத்து அழுது கொண்டே ஃபாதில்.. "ம்மா அதுலப் போனீங்கன்னா நீங்க செத்துப் போய்டுவீங்க அப்புறம் நாங்க தனியா இருக்கனும். எங்களுக்கு யார் இருப்பாங்க?" என்று கண்கள் வேர்க்கச் சொன்னதும் என் மனம் குளிர்ந்து நெகிழ்ந்தது.

இதற்கு ஒரு தினத்திற்கு முன்புதான் குழந்தைகளுக்கு பிரிவின் துயர், இல்லாமையின் வலி, இருப்பின் அருமை தெரிவதில்லை என்று புகார் வாசித்தேன். அப்போது அதை அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் அசட்டையாக இருக்கிறார்கள் என்ற என் கவலையை உடைக்கும் விதமாக அமைந்தது அவன் அழுகை.

கில்லர் கரோக்கே என்றால் இதுதான் http://www.youtube.com/watch?v=uKRlEJqI1mg

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி