உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ வீசும் பார்வையின் ஒளி
என்னை வந்து கிள்ளுது.
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ விடும் மூச்சு காத்து
உன் ஏக்கம் சொல்லி கொல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகி
மேகமழையோடு என்னை தொட்டு செல்லுது
உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்
என்னை அணைத்து என்னமோ பண்ணுது
மனதால் உணர்த்தும் காதல் போதும்
வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!
Tuesday, June 27, 2006
Monday, June 26, 2006
எப்போது நுழைந்தாய் என்னுள்?
கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?
மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?
கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?
வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?
மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?
என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?
என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?
தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!
அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.
தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?
மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?
கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?
வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?
மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?
என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?
என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?
தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!
அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.
தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!
வாடகை வீடு - வில்லா 72
வீடு தேடினோம்
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.
Sunday, June 25, 2006
விச்சித்திர பிறவி
விரும்பாத வேதனை வந்தால்
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.
வினோதமானவனே, உனக்கோ...
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.
தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.
வினோதமானவனே, உனக்கோ...
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.
தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.
Monday, June 19, 2006
காதல் கடிதம்
பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.
Monday, June 12, 2006
பாதுகாப்பு!
துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!
www.thisaigal.com/jan06/jazeelakavi.htm
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!
www.thisaigal.com/jan06/jazeelakavi.htm
Sunday, June 04, 2006
வாழ்வே உனக்காக
கால காலமாக இயற்கையோடு
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?
பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?
உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?
பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?
இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?
நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?
நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே
கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?
பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?
உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?
பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?
இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?
நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?
நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே
கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?
Sunday, May 21, 2006
பெட்டிக்குள் அடங்காதது
ஆண்கள் இயல்பு கொண்ட
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.
தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.
மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.
குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது
மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே
என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.
தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.
மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.
குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது
மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே
என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.
Saturday, May 13, 2006
புல்வெளியில் பனிதுளி
விடியல் விடியல்
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?
பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?
உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?
பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?
உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன
Wednesday, April 12, 2006
குமுறல்
பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்
வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்
வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை
பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்
அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்
எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை
மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்
வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்
வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை
பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்
அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்
எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை
மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக
Monday, April 10, 2006
வேலை பளு
வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.
மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.
மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்
Sunday, April 09, 2006
சுனாமி அழிவு
கடலோரம் கடக்கும் போது
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.
வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்
உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்
உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்
தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ
வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ
மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?
ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?
http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.
வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்
உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்
உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்
தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ
வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ
மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?
ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?
http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html
Saturday, April 08, 2006
சுதந்திரப் பறவை
என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?
நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?
எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்
மூடி மறைப்பது - கூண்டு கிளியா?
முடியை மறைப்பது - அநாகரீகமா?
காட்ட மறுப்பது - திணிப்பா?
சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே
கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு
கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்
கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்
எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்
பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று
அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்
மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு
வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்
கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை
உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?
நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?
எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்
மூடி மறைப்பது - கூண்டு கிளியா?
முடியை மறைப்பது - அநாகரீகமா?
காட்ட மறுப்பது - திணிப்பா?
சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே
கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு
கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்
கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்
எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்
பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று
அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்
மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு
வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்
கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை
உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!
Sunday, April 02, 2006
விபத்து
முருங்க இலை பறிக்க மரமேறி
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை
கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை
காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை
பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை
பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை
உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை
கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை
காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை
பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை
பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை
உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?
Tuesday, March 28, 2006
யார் காரணம்!?
கனவோடு மனமேடையேறி
இன்பமாய் இல்லறம் தொடங்கி
விரைவிலே உற்றவன் இறக்க
நாட்பது கழிந்து வேலை தேடி
சேரவும் செய்தேன்
நானா காரணம்?
இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
விளக்காய் கிடைத்த வேலையை
தெய்வமாக போற்றி
கண்டவர் பார்வையை கடந்து
சீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.
துணிவா காரணம்?
ஒரு வாரத்திலே தெரிந்தது
புதிய துணை உண்டானது என்று
இழந்த துயரை மறந்து
கவசமான உயிரை
கவனமாய் பாவித்தேன்.
நம்பிக்கையா காரணம்?
எதிர்ப்புகளே மிகுந்தது
உணர்வுக்கு புரிதல் இல்லை
அழிக்க வற்புறுத்தல்
தாங்ககூடிய சுமை என்றேன்
கேட்பாரில்லை.
காரணம் தந்தார்கள்
சமுதாய சந்தேகம் என்று!
இன்பமாய் இல்லறம் தொடங்கி
விரைவிலே உற்றவன் இறக்க
நாட்பது கழிந்து வேலை தேடி
சேரவும் செய்தேன்
நானா காரணம்?
இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
விளக்காய் கிடைத்த வேலையை
தெய்வமாக போற்றி
கண்டவர் பார்வையை கடந்து
சீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.
துணிவா காரணம்?
ஒரு வாரத்திலே தெரிந்தது
புதிய துணை உண்டானது என்று
இழந்த துயரை மறந்து
கவசமான உயிரை
கவனமாய் பாவித்தேன்.
நம்பிக்கையா காரணம்?
எதிர்ப்புகளே மிகுந்தது
உணர்வுக்கு புரிதல் இல்லை
அழிக்க வற்புறுத்தல்
தாங்ககூடிய சுமை என்றேன்
கேட்பாரில்லை.
காரணம் தந்தார்கள்
சமுதாய சந்தேகம் என்று!
Tuesday, May 10, 2005
தமிழ் இனி...
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும
அம்மா என்பதை பசுக்கள் மறவாது!
காற்று நுழையாத குகையிலும்
குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!
புயலுக்கு மடிந்து சரியும்
வாழைத்தரு அல்ல
நூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்
ஆலமரம் நீ!
வெள்ளையர்கள் வந்தாலும்
மொகலாயர்கள் மேய்ந்தாலும்
ஆரியர்கள் ஆண்டாலும்
செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!
சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்
உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்த
முத்தாகவே கோர்த்து வைப்பேன்.
பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!
சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்
திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்
ஐந்திணையை வியக்க வைத்தாய்
உன் புகழை அளந்தால்
அந்த இமயம் கூட குட்டையே!
உன்னைக் கொண்டு
வெள்ளை நிலவை தங்கமாக்கலாம்
வெள்ளரியையும் விரலாக்கலாம்
கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!
இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளே
இசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றி
நாவிற்கும் சுவை சேர்ப்பவளே
நாடகமாக மேடையில் அரங்கேறி
வெள்ளித்திரையில் வெளிச்சம் பெற்றவளே!
எவ்வினம் அழிந்தாலும்
வல், மெல், இடை என
மூன்றினத்தோடு கூடி நிற்பவளே!
உயிரில்லா சொற்களுக்கும்
உயிர்மெய் தந்தவளே!
செல்லரித்துப் போகும் புத்தகமா நீ?
பத்திரமில்லாத சொத்தல்லவோ!
வெடித்துப் பறந்து போகும் பஞ்சா நீ?
பாறையாகிய மனதையும் கரைக்கும்
வல்லமை பெற்றவள் அல்லவோ நீ!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என ஐந்து நிலங்களிலும் தங்கியவளே
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
என நான்கு திசைகளிலும் திரிந்தவளே
த-மி-ழ் என்ற மூன்று எழுத்துக்களில் விரிந்தவளே
உன்னை பார்க்க, கேட்க, இரண்டு கண்கள் இரண்டு காதுகள் போதாதே
நீ எங்கள் கண்கள்
இனி வரும் நாட்களில் நாங்கள்
குருடர்களாக இருக்க விரும்பவில்லை
பூமி பிளந்து தேடினாலும
'ழ'கர எழுத்துக் கிடைக்கப் பெறுமோ?
எந்நாட்டில் மழை விழுந்தாலும
உன் மீது விழாது தப்பிடுமோ?
தமிழ் அழியும்
ஆம், பிறந்த குழந்தை
தாய்ப்பால் சுவைக்க மறந்தால்
தமிழ் அழியும்
ஆம், காற்றினை 'பொடா' சட்டத்தில்
கைது செய்ய முடிந்தால்
பறவைகள் தூதாக
உன்னைச் சுமந்த காலம் போக
இக்கால கணினிக்குள்ளும் ஊடுருவி
இனி பிறக்கபோகும்
இயந்திர மனிதனையும் சென்றடைவாய்!
தமிழ் இனி - இது கேள்விக்குறி
தமிழ் இனிமை - இது முற்றுபுள்ளி
புரியாதவனுக்கு தமிழ் இனி??
புரிந்தவனுக்கு "இனியும் தமிழ்"...
தமிழ் இனி
என்பது முடியாத வாக்கியம்
முடித்தேன் அதனை
தமிழ் இனிது வளரும் எனக் கூறி.
(கவிஞர் அறிவுமதியின் தலைமையில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை)
அம்மா என்பதை பசுக்கள் மறவாது!
காற்று நுழையாத குகையிலும்
குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!
புயலுக்கு மடிந்து சரியும்
வாழைத்தரு அல்ல
நூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்
ஆலமரம் நீ!
வெள்ளையர்கள் வந்தாலும்
மொகலாயர்கள் மேய்ந்தாலும்
ஆரியர்கள் ஆண்டாலும்
செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!
சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்
உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்த
முத்தாகவே கோர்த்து வைப்பேன்.
பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!
சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்
திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்
ஐந்திணையை வியக்க வைத்தாய்
உன் புகழை அளந்தால்
அந்த இமயம் கூட குட்டையே!
உன்னைக் கொண்டு
வெள்ளை நிலவை தங்கமாக்கலாம்
வெள்ளரியையும் விரலாக்கலாம்
கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!
இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளே
இசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றி
நாவிற்கும் சுவை சேர்ப்பவளே
நாடகமாக மேடையில் அரங்கேறி
வெள்ளித்திரையில் வெளிச்சம் பெற்றவளே!
எவ்வினம் அழிந்தாலும்
வல், மெல், இடை என
மூன்றினத்தோடு கூடி நிற்பவளே!
உயிரில்லா சொற்களுக்கும்
உயிர்மெய் தந்தவளே!
செல்லரித்துப் போகும் புத்தகமா நீ?
பத்திரமில்லாத சொத்தல்லவோ!
வெடித்துப் பறந்து போகும் பஞ்சா நீ?
பாறையாகிய மனதையும் கரைக்கும்
வல்லமை பெற்றவள் அல்லவோ நீ!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என ஐந்து நிலங்களிலும் தங்கியவளே
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
என நான்கு திசைகளிலும் திரிந்தவளே
த-மி-ழ் என்ற மூன்று எழுத்துக்களில் விரிந்தவளே
உன்னை பார்க்க, கேட்க, இரண்டு கண்கள் இரண்டு காதுகள் போதாதே
நீ எங்கள் கண்கள்
இனி வரும் நாட்களில் நாங்கள்
குருடர்களாக இருக்க விரும்பவில்லை
பூமி பிளந்து தேடினாலும
'ழ'கர எழுத்துக் கிடைக்கப் பெறுமோ?
எந்நாட்டில் மழை விழுந்தாலும
உன் மீது விழாது தப்பிடுமோ?
தமிழ் அழியும்
ஆம், பிறந்த குழந்தை
தாய்ப்பால் சுவைக்க மறந்தால்
தமிழ் அழியும்
ஆம், காற்றினை 'பொடா' சட்டத்தில்
கைது செய்ய முடிந்தால்
பறவைகள் தூதாக
உன்னைச் சுமந்த காலம் போக
இக்கால கணினிக்குள்ளும் ஊடுருவி
இனி பிறக்கபோகும்
இயந்திர மனிதனையும் சென்றடைவாய்!
தமிழ் இனி - இது கேள்விக்குறி
தமிழ் இனிமை - இது முற்றுபுள்ளி
புரியாதவனுக்கு தமிழ் இனி??
புரிந்தவனுக்கு "இனியும் தமிழ்"...
தமிழ் இனி
என்பது முடியாத வாக்கியம்
முடித்தேன் அதனை
தமிழ் இனிது வளரும் எனக் கூறி.
(கவிஞர் அறிவுமதியின் தலைமையில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை)
Subscribe to:
Posts (Atom)