Friday, December 29, 2006

சிம்ரனுக்கொரு நியாயம் ரஜினிக்கொரு நியாயமா?

சந்திரமுகியில் வாய்ப்பு புட்டுக்கிச்சு, அப்போ சிம்ரன் கர்ப்பமா இருந்தது காரணம். வயிற்றில் புள்ளய வச்சிக்கிட்டு 'ரா.. ரா..' ஆடியிருந்தால் ஜோதிகா ஆடின 'அந்த' ஆட்டம் வந்திருக்குமா? இப்ப சிம்ரனுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருஷமாகிறதாம், மீண்டும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ருசி கண்ட பூனையாச்சே அவ்வளவு லேசில் திரைத்துறையை விட்டு போக முடியுமா?

அதனால்தான் மீண்டும் திரைதுறைக்கு வந்துவிட்டார். விளம்பரங்களில் வலம் வருபவரை இயக்குநர்கள் அணுகி தாரளமாக அக்கா, அண்ணி, அம்மாவாக நடிக்க நிறைய வாய்ப்புக்கள் தருகிறார்களாம்.

பேரன் கண்ட பிறகும் ரஜினி கதாநாயகனாக வருவார் நாம் பார்க்க வேண்டும். பூசணிக்காய் உடம்பை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறுசுகளுடன் கைக்கோர்த்து ஆடுவார் விஜயகாந்த் பார்த்துத் தொலைக்க வேண்டும். கமலுக்கு இன்றும் இரண்டு ஜோடிகள் கேட்கிறது. சரத்குமார் முகத்தில் பல சுருக்கம் வந்த பிறகும் நாயகிகளுடன் மரத்திற்கு மரம் மாறி கண்ணாமூச்சி விளையாடுவார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்ம கதாநாயகிகள் திருமணமாகி ஒரு குழந்தைப் பெற்றுவிட்டால் அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கிறது. என்ன அநியாயம். ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா? இன்று நேற்றல்ல காலகாலமாக நடந்து வரும் அநியாயம்தான் இது. 'பராசக்தி'யில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பண்டரிபாய், 'அன்னையின் ஆணை'யில், இன்னும் பல படங்களில் சிவாஜிக்கு தாயாக நடித்திருக்கிறார். இதே கொடுமையைதான் ரஜினி செய்தார், 'எங்கயோ கேட்ட குரலில்' மீனா மகளாக நடித்து விட்டு, 'வீரா', 'முத்து' படங்களில் ரஜனிக்கு ஜோடியாக வந்தார். ஆண் ரசிகர்களுக்கு எப்பவுமே பார்க்க புதுசு புதுசாக தினுசு தினுசாக இளமை துள்ளும் கதாநாயகிகள் வேண்டும் போலும். ஆண் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். பாவம் சபிக்கப்பட்ட கதாநாயகிகள்.

இந்த வரிசையில் சிம்ரன் தனி இரகம்தான். அணுகிய இயக்குநர்களுக்கு பதிலடியாக 'இன்னும் இளமை துடிப்பில்தான் இருக்கிறேன், கதாநாயகி வேடமென்றால் வாங்க, இல்லாட்டி சோலியப் பார்த்துக்கிட்டு போங்க' என்று சொல்லிவிட்டாராம். பிடிவாதத்திலும் ஒரு அர்த்தமிருந்திருக்கிறது, இப்போது தெலுங்கில் இரட்டை வேடம் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் இயக்குநர் ஓ.வி.எஸ். சவுத்ரி. படத்தின் பெயர் 'ஒக்கமகடு', ஜோடியாக பாலகிருஷ்ணா.

27 comments:

நாமக்கல் சிபி said...

Sabash Simran

கதிர் said...

:)))

கோவி.கண்ணன் [GK] said...

திரைமசாலாவில் பெண்களை தொட்டுக் கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்துகிறார்கள். *இமேஜ்* உள்ள நடிகர்கள் தனக்காகத்தான் படம் ஓடுவதாக வெளியில் வெட்கமில்லாமல் சொன்னாலும் சின்னப் பெண்ணாகத்தான் ஜோடி சேர்ந்து நடிக்க துடிக்கிறார்கள்

கண்டனத்துக்கு உரியது.

SP.VR. SUBBIAH said...

ஆண்களிலும் எவ்வள்வோ புதுமுகங்க்கள் வந்து கொண்டுதானே இருக்கிறார்களே அம்மணி! (Sister)

விஷால், ஜீவா, ஸ்ரீகாந்த், ஷியாம்
இவர்களையெல்லாம் விட்டுவிட்டீர்களே!

Jazeela said...

சிம்ரனுக்கு சபாஷ் சொன்ன சிபிக்கு ஒரு 'சபாஷ்'. ஆனால் இப்படி எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் சிம்ரனும் பார்ப்போம்.

கதிர் தம்பி, ஏன் சிரிக்கிறீக?

கோவி.க., கண்டனம் மட்டும்தான் நம்மலால முடிஞ்சது.

//விஷால், ஜீவா, ஸ்ரீகாந்த், ஷியாம்
இவர்களையெல்லாம் விட்டுவிட்டீர்களே!// எவ்வளவு புதுசு வந்தாலும் பெருசுகளும் இன்னும் களத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள்? ஆனால் இளம் நடிகைகள் வர வர கொஞ்சம் பழசானாலும் ஒதுக்கி விடுகிறார்களே!? திருமணமாகி விட்டாலே காணாமல் போய்விடுகிறார்கள் கதாநாயகிகள்.

Anonymous said...

சிம்ரன் புகழ் ஓங்குக...

அனைத்துலக சிம்ரன் ரசிகர் மன்றம்,
டி.கல்லுபட்டி கிளை சார்பாக,
ஆழியூரான்

வல்லிசிம்ஹன் said...

கண்டனம் வேணும், ஜெஸிலா.
யார் அதைக் கேட்பார்கள் என்றுதான் தெரியவில்லை.

படம் பார்ப்பதையே விட்டுவிடலாம். என்றுதான் தோணுகிறது.

Sumathi. said...

ஹாய் ஜெஸிலா,

சரியான அடி தான் குடுத்து இருக்கீங்க.
இந்தமாதிரி நாலு பேர் கேட்டாலே போதும்... சீக்கிரமே மக்கள் புரிஞ்சுப்பாங்க..

very good keep up your good work.

Jazeela said...

வல்லி மற்றும் சுமதி, அட அட அட நீங்க இரண்டு பெண்களாவது நம்ம இணத்திற்கு ஆதரவா வந்து கண்டனம் தெரிவிச்சிருக்கீங்களே, ரொம்ப சந்தோஷம்.

Anonymous said...

நியாயமான கண்டனம்!! எல்லாம் இந்த தமிழ் பட ரசிகர்களும் சமுதாயமும் செய்யும் வேலை! இந்த நிலைமை கண்டிப்பாக மாற வேண்டும்!

என் தலைவி சிம்ரன் நிச்சயமா கலக்க வருவாரு!!!
WAIT AND SEE!!!

நாகை சிவா said...

நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குஷ்பு, ரேவதி, ஸ்ரீதேவி, கஜோல், மாதுரி போன்றவர்கள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

அதிலும் கஜோல்........ சான்ஸே இல்ல ;-)

Anonymous said...

சினிமா என்பது இப்போது கலை என்ற கட்டத்தை தாண்டி நிற்கும் ஓர் வர்த்தகம். கலைப் படங்களுக்கு, இங்கு எத்தனை தயாரிப்பாளர்கள் பணம் கொடுப்பார்கள் என்று சொல்லுங்கள். அதே மாதிரிதான், தயாரிப்பாளர்களின் பயம்.

நீங்கள் இதை சற்றே சீர்தூக்கி பார்த்தால், தமிழ் கலாச்சாரப் பின்னனியே காரணம் என்று புரியும். தமிழக மக்கள், திருமணம் ஆனப் பெண்களை, ஓர் தாய் என்ற கட்டுப்பாட்டையே பார்க்கின்றனர். சினிமாவில் வரும் கதா நாயகி கதாபாத்திரங்களில் திருமணம் ஆனவர்களைப் பார்க்கும்போது, 'அடுத்தவன் பொண்டாட்டி' என்றே நோக்குடனே பார்க்கின்றனர்.

அடிப்படைக் காரணம், பெண்ணடிமைத்தனம் அல்லது ஆணாதிக்கத்தனம், இரண்டுமே பொருந்தும்.

தியாகத்திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஜி, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், அடுத்தவன் பெண்டாட்டியைப் பார்த்து ரசிக்கவேண்டும், கனவுகாணவேண்டும் அல்லாதுவிட்டால் அது பேண்ணடிமைத்தனம் அல்லது ஆணாதிக்கம் என்றா?

Anonymous said...

//Ravanan said...
ஜி, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், அடுத்தவன் பெண்டாட்டியைப் பார்த்து ரசிக்கவேண்டும், கனவுகாணவேண்டும் அல்லாதுவிட்டால் அது பேண்ணடிமைத்தனம் அல்லது ஆணாதிக்கம் என்றா? //

aiyayo... naan apdi solla varala... katha nayagan thirumanam aana pirahu nadithaalum, avan aduthaval purusan enra nokku yaarukkum varuvathillai. aana katha naayagihal mattum nadithaal appadi oru nokku...

pinnani ennanu paatha athu thamiz kalatchaaram.

ps1: I also don want to see a married women as a heroine.

ps2:sorry for english. I'm in my friend's home and so I couldn't type in thamiz.

சல்மான் said...

அப்படியே, சிம்ரனுக்கு வாயுப்பு கொடுத்தாலும், கதாநாயனுடைய அந்தஸ்தை பூர்த்தி செய்யும் போகப் பதுமையாகவே பெண்களை காண்பிக்கும் திரையுலகை பற்றிதான் நியாயம் அநியாயம் பேசவேண்டும் என எண்ணுகிறேன்.

பெரும்பாலும் பெண் போகத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்திய குறிப்பாக தமிழ் திரைப்படங்களில், எனக்கு இன்னும் இந்த சாக்கடையில் இடம் நிறைய வேண்டும் என கேட்கும் 'புதுமை மற்றும் இளமை' பெண்களைப் பற்றியா கவலைப்படுகிறீர்கள்?

ஒரு ரேவதி போன்ற நடிகைகள் பற்றி நீங்கள் கவலைப்பட்டிருந்தால் உங்களின் கேள்வியில் வலு அதிகம் இருந்திருக்குமோ?

சல்மான்

Jazeela said...

//ஸ்ரீதேவி, கஜோல், மாதுரி போன்றவர்கள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அதிலும் கஜோல்........ சான்ஸே இல்ல ;-)//
பட்டியல் போடுற அளவுதான் இருக்குன்னு நீங்களே ஒத்துக்கிட்டீங்க பார்த்தீங்களா? ஆண்கள் வரிசை கணக்கில் அடங்காதவை.

//katha nayagan thirumanam aana pirahu nadithaalum, avan aduthaval purusan enra nokku yaarukkum varuvathillai.// யாருக்கும் என்ன யாருக்கும் பெண்களுக்கு வருவதில்லை. கதை கதாபாத்திரங்களை கனவு கண்ணனாக நினைப்பதில்லை பெண்கள். எங்களுக்கு நிஜ ஹீரோக்கள் தான் பிடிக்கும் ;-)
//pinnani ennanu paatha athu thamiz kalatchaaram.// எது கலாச்சாரம்? திரையில் வரும் பெண்களை கனவு கன்னிகளாக பார்த்து ஜொள்ளு விடுவதா? நீங்களும் உங்க கலாச்சாரம். இது கலாச்சாரத்திற்கு புது வரையறுப்பா இருக்கே!

Jazeela said...

//சாக்கடையில் இடம் நிறைய வேண்டும் என கேட்கும் 'புதுமை மற்றும் இளமை' பெண்களைப் பற்றியா கவலைப்படுகிறீர்கள்?

ஒரு ரேவதி போன்ற நடிகைகள் பற்றி நீங்கள் கவலைப்பட்டிருந்தால் உங்களின் கேள்வியில் வலு அதிகம் இருந்திருக்குமோ?//

சல்மான் உங்க கண்களுக்கு ரேவதி சாக்கடை குடும்பத்தில் இல்லாதவராக இருக்கலாம். கலை தொழிலை சாக்கடை என்பது என்னைப் பொறுத்தவரை தவறு. இங்கு யார் புனிதம் யார் அசிங்கம் என்று யாரும் சொல்ல முடியாது. கேள்வி பெண்ணுக்கு ஒரு நியாயம் ஆணுக்கு ஒரு நியாயமா என்பதுதான்.

Anonymous said...

வணக்கம்,

காரணம் ரசிகர்களின் எண்ணிக்கை தான் மற்ற படி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ரஜினி இன்று ஒரு படத்தில் நடித்தாலும் கூட முதல் 5 வாரங்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக செல்லும். அது எப்படி பட்ட மட்டமான படமாக இருந்தாலும் சரி.
ஆனால், ஒரு நடிகையை வைத்து படம் எடுத்தால்,அது எப்பேர் பட்ட நல்ல சிறந்த, நடிகையாக இருந்தாலும் சரி, அவ்வாறு நிகழ்வது சற்று சிரமமே.

பணம் போடும் தயாரிப்பாளர், இந்த பிரச்சினைகளுக்கு அஞ்சி கூட இவ்வாறு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி,

நாடோடி said...

ஒரே காமடியா இருக்குங்க உங்களோட..

இந்த துறையில காணாம போனவங்க பல பேர். அதுல பொண்ணுங்கள் மட்டும் நீங்க பார்வை இடுகிறிர்கள்.

விஜயன்னு ஒருத்தரு இருந்தாரு. அருமையான் நடிகரு காணம போயிட்டாரு. இது போல பல பேர். விஜயன் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். இதுக்கா இதை ஆணடிமைத்தனம் என கூறலாமா?.

சந்திரமுகில சிம்ரன் காணமபோனது அவரு புருசன் போட்ட கன்டிசன்ல திறைதுறையினால அல்ல.

Anonymous said...

//திரைமசாலாவில் பெண்களை தொட்டுக் கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்துகிறார்கள். *இமேஜ்* உள்ள நடிகர்கள் தனக்காகத்தான் படம் ஓடுவதாக வெளியில் வெட்கமில்லாமல் சொன்னாலும் சின்னப் பெண்ணாகத்தான் ஜோடி சேர்ந்து நடிக்க துடிக்கிறார்கள்//
உண்மை தான். அதே சமயம் சல்மான் சொல்வது போல் ஒரு ரேவதி போன்ற கதாபாத்திரங்கள் கூட திருமணத்திற்குப் பின் நாயகியாக நடிக்க விடுவதில்லையே நம் சினிமாவில்!

பழைய நடிகைகளான கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி, சாவித்திரி போன்றவர்கள் திருமணத்திற்குப் பின்னும் நாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இன்றைய நாயகிகள் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் "இளம்" மாணவிகளாக இருப்பதால், அதற்குத் திருமணமான பெண்களைப் பொருத்துவதில் சினிமாவில் பிரச்சனை வந்துவிடுகிறது. அதே பள்ளி அல்லது கல்லூரிக்கு அரைக் கால்சட்டை போட்டு ஒரு விஜயகாந்தோ, அஜீத்தோ வந்தால் நாம் பொறுமையாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது! [தல போல வருமா என்று கேட்கப் போகிறவர்களுக்கு, தல அஜீத்துக்கும் திருமணமாகி அங்கிள் தானே? ;) ]

இதையும் தாண்டி குஷ்பூ, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ரேவதி, ஊர்வசி, அவர் தமக்கை கல்யாணி என்று ஆங்காங்கே நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. இன்னும் அதிகமாகும் என்று நம்புவோம்.. [ம்ம்ம்.. ஜோ திரும்பி வந்தா நல்லாருக்கும் :) ]

ஏ.எம்.ரஹ்மான் said...

ஜெசிலா தங்கை இப்ப எப்படி பிளாக் வரீங்களோ இதே போல திருமணத்துக்கு பிறகு வரீங்கலானு பார்போம்.

Jazeela said...

ரஹ்மான் அண்ணாத்த எனக்கு திருமணம் ஆகவில்லையென்று உங்களுக்கு சொன்னது யார்?

Hariharan # 03985177737685368452 said...

இது டிமாண்ட் & சப்ளை விஷயமாகத்தான் நினைக்கவேண்டும்.

கிழநாயகர்களை அவர்கள் படங்களை நீங்கள் பார்க்காதீர்கள்.

என்றபோதும் தியேட்டரில் நெரிசலில் வரிசையிலிருப்பவன் தோள்மீதேறி 200 ரூபாய்க்கு டிக்கட் வாங்கி அவனது ஆதர்ச கிழ நாயகனை உடன் நடிக்கும் இள நாயகிக்காகப் போய்ப் பார்த்து டிமாண்டை ஏற்றுவது ஆண்கள் தானே!

தனது செல்வம் செலவழித்து திரைத்துறைக்கு ஆதரவு தரும் ஆண்களுக்கு இந்தச் செல்வாக்கு கூட இருக்கக்கூடாதா?

அப்பாவி ஆண்களின் இந்த ஆணியம் மீது ஆணி அடிக்கலாமா நீங்கள்? :-(

Anonymous said...

புல்லரிக்குதுங்க உங்க புதுமைக் கண்ணோட்டத்தப் பாத்து!

ஐஸ்வர்யா ராய், சிம்ரன் இப்டி பிரபலமான ஆட்களப் பத்தி எழுதிதான் உங்க முற்போக்குத்தனத்த காட்டணுமா? வேற பெண்கள் உங்க அழகிய கண்களுக்கு படவே மாட்டாங்களா? ஊர்ல எவ்ளோ பேர் கஷ்டப்படுறாங்க? நீங்க எப்டி பிரபலமான பேரப்போட்டு எழுதி வலைப்பதிவு வாசகர்கள இழுக்கிறீங்களோ அதே மாறிதான் சினிமாவும், சின்னப்பொண்ணுங்கள போட்டு துட்டு பாக்குறானுங்கோ?

இப்டி துணிச்சலோட பேசுன சிம்ரனுக்கு வாழ்த்துக்கள்!

ஆதங்கத்துடன்
- அழகிய ராவணன்

ஏ.எம்.ரஹ்மான் said...

இப்படியெல்லாம் மடக்கினா நான் எப்படி பதில் சொல்லுரது தங்கச்சி, திருமணத்திற்கு பிறகு தான் பிளாக் வரீங்கனா நீங்க புதுமை பெண்தான் தங்கச்சி.சமத்துவம் ஓங்குக.

Jazeela said...

//புல்லரிக்குதுங்க உங்க புதுமைக் கண்ணோட்டத்தப் பாத்து!// பார்த்துங்கோ மாடு மேஞ்சிடப் போவுது.

பிரபலமாக இருப்பதால்தானே எழுதுறோம், அதனாலதானே நீங்களும் வந்து படிக்கிறீங்க. ஆனா பிரபலமாகாத சிறுசுகளைப் போட்டும் பணம் பண்ணுறாங்க கில்லாடிங்க.

Unknown said...

Nalla karuthhu. Anaal, Sivaji kaalaththilum K.R.Vijaya, Saavthri, Vijayakumari pondravargal thirumanaththikku piragum Naayagigalaaga nadiththaargal enbathai naam ninaivu koora vendum.
T.V. Comperingulum naam sirumigalai thaan kangiroame thavira, 1/2 kuzhandahi petra thaaimaargalai paarpathillai.
Pongal Nalvazhthukkal.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி