Thursday, August 02, 2007

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா இன்று (01/08/07) புதன் இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா 02-08-2007 வியாழன் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்
ரியாஸ் அகமது & குடும்பத்தினர்

59 comments:

நாமக்கல் சிபி said...

:(

Sri Rangan said...

துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.

சேதுக்கரசி said...

அதிர்ச்சிகரமாக இருக்கிறது ஜெஸிலா :-( யாஸ்மின் பாத்திமா அவர்களின் ஆன்ம
சாந்திக்கும் ஆசிப், அவர் குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின்
மன ஆறுதலுக்கும் என் பிரார்த்தனைகள். மனம் பதறுகிறது... :-((

Thekkikattan|தெகா said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...

ILA (a) இளா said...

ஆண்டவா..சோதிக்க நல்ல மனுஷங்க மட்டும்தான் கிடைச்சாங்களா?

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அண்ணாச்சிக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்னார் ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறேன்.
குடும்பத்தினர், உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளசி கோபால் said...

என்னங்க இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி(-:

ரொம்பச் சின்னவயசா இருப்பாங்க போல இருக்கே.

அடடா............ மனசு கனத்துப்போச்சுதே.

தம்பி ஆஸிபுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்
எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிச்சுக்கறோம்.

கோபால் & துளசி.

பாலராஜன்கீதா said...

நண்பர் ஆசிஃப் மீரான் மற்றும் அவர்தம் இல்லத்தினருக்கு எம் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற வெள்ளிக்கிழமை மாலை ஆசிஃப் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தன் மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதாகச் சொன்னார். ஆனால் இந்தச் செய்தி மிகவும் எதிர்பாராதது. மிகவும் வருந்துகிறோம்.

nagoreismail said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மக்பிரத் வாழ்விற்கு என் பிரார்த்தனைகள். குடும்பத்தாருக்கு அனுதாபங்கள். - நாகூர் இஸ்மாயில்

சீமாச்சு.. said...

குழந்தைகளெல்லாம் ச்சின்னப்புள்ளங்க போல இருக்கே... அம்மா இல்லாமல் கஷ்டப்படுங்களே...

ஆசிப்பும் அவர் குழந்தைகளும்.. குடும்பத்தினரும்.. இந்தத் துயரத்திலிருந்து மீண்டு ஆறுதலடைய இறைவனை வேண்டுகிறேன்..

சீமாச்சு

-/சுடலை மாடன்/- said...

சிறுவயது குழந்தைகளிடமிருந்து தாயைப் பிரித்த இளம் வயது மரணம் மிகக்கொடியது. திரு. ஆசிப் மீரான் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

சொ. சங்கரபாண்டி

சூரியன் - தி பாஸ் said...

ஆண்டவா! மனசு பாரமா ஆகிடுச்சே! என்ன சொல்வதுன்னு தெரியலையே! ஆண்டவா!:-(((

செல்வநாயகி said...

வேறுசில இடுகைகளை வாசித்துக்கொண்டிருந்துவிட்டு நீண்டநாட்களாக உங்கள் எழுத்துக்களைப் படிக்கவேயில்லையே, ஏதும் புதிதாக எழுதியிருப்பீர்களோ எனத்தான் படிக்கவந்தேன். இந்தச் செய்தி பார்த்துத் துணுக்குற்றேன். என் ஆழ்ந்த வருத்தங்கள்.

ஜி said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

:-((

Ayyanar Viswanath said...

ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்

அபி அப்பா said...

என்ன சொல்வதுன்னே தெரியலை! :-((((

கதிர் said...

மிகவும் வருந்தச்செய்யும் செய்தி.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

:-((

-சென்ஷி

koothanalluran said...

Innalillahi Wa Inna Ilaihi Rajiun. Let us pray for her heavenly abode.

லொடுக்கு said...

:(

கோபிநாத் said...

:-(

அபுசுஹைல் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அவரின் மஃபிரத்திற்கும், அவரின் மறைவை தாங்கிக் கொள்ளும் மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

ஆசிப் மீரானுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும், என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பேரிழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

எ.அ.பாலா

TBCD said...

annaarin kudumpaththiRaku en aazhnththa anuthaapangkaL..

enna aanathu enRu cholla mudiyumaa..?

லக்கிலுக் said...

நண்பர்களின் சோகத்தில் பங்கு கொள்கிறேன்! :-((((

சுந்தர் / Sundar said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மரைக்காயர் said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

மிக அதிர்ச்சியான செய்தி. பிரிவை தாங்கிக் கொள்ளும் சக்தியை ஆசிப் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் வழங்குவானாக

- யெஸ்.பாலபாரதி said...

:(

முகமூடி said...

மிகவும் கொடுமையான செய்தி. ஆசிப்புக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு எனும்போது சிறு வயது குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதை அறிய நெஞ்சு பதறுகிறது.

╬அதி. அழகு╬ said...

இளவயதில் துணைவியைப் பிரிந்து வாடும் ஆஸிஃப் மீரான் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளை நினைத்தால்தான் கலக்கமாக இருக்கிறது!

என்ன செய்வது?

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
நாம் அல்லாஹ்வுக்காகவே(அவனுடைய கட்டுப்பாட்டில் வாழ்கிறோம்); திண்ணமாக அவனிடம் (ஒருநாள்) நாம் திரும்பிச் சென்றேயாக வேண்டியவர்களாவோம்!

தாங்கவொன்னா வேதனையைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அவனே ஆஸிஃப் அவர்களுக்கு அருளட்டும்.

இப்னு ஹம்துன் said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று காலையில் வழக்கம் போல தமிழ்மணம் வர, இத்துயரச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

மர்ஹும் அவர்களின் மறுமை நல்வாழ்வுக்கும், ஆசிஃப் குடும்பத்தார் இக்கடுந்துயரிலிருந்து மீளும் மனவலிமைப்பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அபிவிருத்தி said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மறுமை வாழ்க்கையில் இறைவன் அவர்களுக்கு வெற்றியை தர பிரார்த்திப்போம்..

அவர்களது குடும்பத்தார்களுக்கு இறைவன் மன அமைதியை தரவும் பிரார்த்திப்போம்..

Osai Chella said...

mika mika inimaiyaanavar. avarukku en aazwtha anuthaapangkaL.

பாரதிய நவீன இளவரசன் said...

I havent got the oppurtunity to meet Mr. Asif Meeran so far. Nor, I have read much of his blogs. His blog following the disastarous perfomance of our Indian Team in the recent World Cup was so hillarious and is still fresh in my memory.

இந்த இளம் வயதில், துணைவியாரை இழப்பது என்பது மிகவும் துக்ககரமான விடயம். அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...

ALIF AHAMED said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

:(

:(

podakkudian said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

குடும்பத்தினர், உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

Very sad. I am very sad of him and his kids. very very sad

உண்மைத்தமிழன் said...

:(

விஜயன் said...

ஈஸ்வரா! என்ன ஆச்சு?.

அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களும் அனுதாபங்களும்.

இறைவன் இத் துயரிலிருந்து மீள அவருக்கு துணை புரியட்டும்.

துயருடன்
விஜயன்

Leo Suresh said...

eosureதாங்கமுடியாத துயரத்தை தந்த இறைவன், மனவலிமையை ஆசிப் அண்ணாச்சிக்கு, தர பிராத்திக்கிறேன்

லியோ சுரேஷ்

லிவிங் ஸ்மைல் said...

சகோதரியின் பிரிவால் வாடு ஆசிப்பிற்கும், அவரது குடும்பத்திற்கும் என் அனுதாபங்கள்

: (

Unknown said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

மெளலி (மதுரையம்பதி) said...

ஆசிப் மீரானுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும், என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் ஆசிப் அவர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் சிறந்த மனோ வலிமையும், பொறுமையையும் தரவும் பிரார்த்திப்பதோடு எமது ஆழ்நத இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த அவர் மனைவியின் மறுமை வாழ்வு சிறக்கவும் பிரார்த்திக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

நண்பர் ஆசிஃப் மீரானுக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் எனது அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறு குழந்தைகளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?? :-(((

எல்லாம் வல்ல இறைவன் மன உறுதியைத் தரவேண்டுகிறேன்.

kiddy ppl said...

:-((

:-((

பிறைநதிபுரத்தான் said...

துனையின் இழப்பை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை இறைவன் தந்தருள்வானாக..

Vijayakumar said...

மிக மிக வருத்தம் அளிக்கிறது. திரு. ஆசிப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆயில்யன் said...

இன்று காலையில் தோஹாவில் ஏசியா நெட் எப்.எம்மில் செய்திகளுக்கு முன்பு "ஆசிப் மீரான்", "சென்னை" ,போன்ற வார்த்தைகளை கேட்டேன் ஆனால் என்னவென்று புரியவில்லை ஆனால் உங்க பதிவை பார்த்துதான் விபரம் அறிந்தேன்.
மிக வருத்தமளிக்கும் செய்தி. பிரிவை தாங்கிக் கொள்ளும் சக்தியை ஆசிப் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் வழங்குவானாக

பெத்தராயுடு said...

My heartfelt condolences.
May her soul rest in peace.

குசும்பன் said...

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அண்ணாச்சிக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்மணி/kanmani said...

ஆசிப்புக்கு அழ்ந்த இரங்கல்.இதைத் தாங்கும் வல்லமையை அல்லா வழங்கட்டும்.

Unknown said...

:-((

Arunkumar said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Arunkumar said...

Heart-felt condolences...

PRABHU RAJADURAI said...

சகோதரியின் பிரிவால் வாடு ஆசிப்பிற்கும், அவரது குடும்பத்திற்கும் என் அனுதாபங்கள்.

convey my heartfelt sympathies...and that I hve no courage to speak to him over phone as well...

நேசம் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் ஆசிப் அவர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் சிறந்த மனோ வலிமையும், பொறுமையையும் தரஎன் பிரார்த்தனைகள் மறைந்த அவர் மனைவியின் மறுமை வாழ்வு சிறக்கவும் பிரார்த்திக்கிறேன்
s.abusalih

நேசம் said...

இறைவன் ஆசிப் அவர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் சிறந்த மனோ வலிமையும், பொறுமையையும் தர பிரார்த்திக்கிறேன்.மறைந்த அவர் மனைவியின் மறுமை வாழ்விற்கு இறைவனை வேண்டுகிறேன்..

by abusalih

selventhiran said...

:(

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி