Tuesday, September 18, 2007

பெண்கள் போகப் பொருளா?

ந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்.

நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்பல்லாம் அந்த விளம்பரத்தை கண்டாலே வெறுப்பு வளரும் அளவுக்கு ஊடகம் வளர்ந்திடுச்சு. ஒரு பொருளோட விளம்பரம் தொலைக்காட்சியில் எதுக்கு வருதுன்னு நினைக்கிறீங்க? ஒரு பொருளை மக்கள் மத்தியில் எப்படி அறிமுகப்படுத்துவது, கொண்டு சேர்ப்பது என்பற்கான யோசனை, பல மூளைகளின் வேலை, அதன் மொத்தத் தோற்றம், இது தானே விளம்பரம் என்பது? அதைப் பார்த்து நீங்க அந்த பொருளைப் பத்தி தகவல் தெரிஞ்சக்கணும்னுதானே? பொருளைப் பரவலா அறிமுகம் செஞ்சா அதை நாம் வாங்கணும்னு தானே? விளம்பரம் என்பதன் மூலம் அது நம்மை அடையணும், நம்ம மனசுல அந்தப் பொருள் பதியணும்னுதானே? ஆனா இப்ப உள்ள விளம்பரங்களெல்லாம் அதற்காகப் போடுறா மாதிரியே தெரியலை? 'எதற்கான விளம்பரம் இது' என்று யோசிக்கும் அளவுலதான் விளம்பரப் படங்கள் எடுக்கிறாங்க.

எல்லா விளம்பரங்களிலும் ஒரு குத்தாட்டம் இல்லாம இல்ல. புடவைக்கான விளம்பரமானாலும் சரி சிமிண்ட்டுக்கான விளம்பரமானாலும் சரி அந்த காலகட்டத்து படப்பாடலையொட்டிய ஒரு ஆட்டம் கண்டிப்பா இருக்கணும்கற அளவில் தான் விளம்பரம் தயாரிப்பவர்களுடைய மூளை வேலை செய்யுது. மேலை நாட்டு கலாச்சாரம்னும் சொல்ல முடியாது ஏன்னா அவங்க விளம்பரங்களில் குத்தாட்டமெல்லாமிருக்காதே? விளம்பரப்படுத்த வேண்டிய பொருளைக் காட்டுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஒரு பெண் வலம் வந்துட்டு போய்டுவா. இது என்ன மாதிரியான போக்குன்னே (டிரெண்ட்னே) தெரியலை. விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை ஒரு நொடிதான் காட்டுவாங்க - ஆனா அந்த விளம்பரத்திற்கு வரும் பெண் மாடலை எல்லாக் கோணங்களிலும்.

பெரும்பாலான விளம்பரங்களில் பெண்கள் அதிகம் அழகுக்குத்தான் ஆர்வம் காட்டுவதாகவும், எப்படி ஆண்களை வளைத்துப் போடுவதுன்னு என்பதில்தான் முனைப்புடன் செயல்படுவதாகவும் தான் விளம்பரத்தை அமைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னு ஆகிப்போச்சு. அட்டகாசமான பனியனைத் தடவி பார்க்க விளம்பரத்தில் ஒரு பெண். சரி ஆணை இரசிப்பது பெண்கள் அதனால் அந்தக் கட்டத்தில் பெண்கள் அவசியமென்று சில ஆணாதிக்கவாத மூளை சொல்லலாம். அப்படிப் பார்த்தால் எல்லா தங்க நகை விளம்பரத்திலும் ஒரு ஆண் வேணுமா வேணாமா? ம்ஹும், அங்க ஆண் இருக்க மாட்டார். இதிலிருந்து என்ன தெரியுது? விளம்பரப்படுத்தும் அனைத்துமே ஆண்கள் பார்ப்பதற்காகத் தயாரிக்கப்படுகிறது. அவர்களைக் கவர்வதற்காகவே ஒரு பெண்ணை விளம்பரத்தில் புகுத்துகிறார்கள். பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?

ஊருக்குப் போயிருக்கும் போது பெரிய ஹோர்டிங் போர்டை பார்த்தேன் 'Definitely Catchy' என்று எழுதி ஒரு அழகான பெண்ணின் பிரம்மாண்ட புகைப்படம், என்ன விளம்பரம்னு பார்த்தா - Deccan Chronicle பத்திரிகைக்கான விளம்பரம். விளங்கிடும்னு நினைச்சுக்கிட்டேன். நேற்று பார்த்த விளம்பரம்தான் கொடுமையின் உச்சக்கட்டம் 'ஆக்ஸ்' வாசனைத் திரவியத்தின் விளம்பரம். வாசனைக்கு ஒரு ஆணை நோக்கி ஆயிரம் 'உரித்த கோழிகள்' ஓடி வருவதாகக் காட்சியமைப்பு. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விளம்பரம். 'உரித்த கோழிகள்' என்று குறிப்பிட்டிருப்பது அரை நிர்வாண உடைகளில் இல்லை இல்லை முக்கால் வாசி நிர்வாண உடைகளில் பெண்கள் (உடைகளே இல்லை என்பது தான் பிரச்சனை). இந்த விளம்பரம் அப்பட்டமான ஆணாதிக்க மூளையின் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணுக்கு தேவை மாமிச இச்சை என்பது போலவும், மயக்கும் வாடையில் மயங்கி எவனுடனும் ஒரு பெண் அலைந்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள் என்பது போலவும், கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம். பெண்கள் வெறும் கவர்ச்சி பொம்மைதான்ல? வெறும் காட்சி பொருள்தான்ல? இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?

வீணாப்போனவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் அதற்கு போராட்டம் நடத்தி வீண் என்பதால் சமூக ஆர்வலர்களும், மகளிர் மன்றங்களும் இருந்து விட்டனவா அல்லது பழகிப் போன அறிவுக்கு இதெல்லாம் பழகிப் போய் அறியாமையின் உச்சக்கட்டம் கண்ணில் பட்டும் காணாதவர்களாக இருக்கிறார்களா? கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்? ஒருவேளை கற்பு, கலாச்சாரம், பண்பாடுன்னு பேசுறாங்களே அது இதுதானோ? பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

59 comments:

Anonymous said...

ஜெஸிலா பிரம்மாதமான பதிவு, உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது. ஆணாதிக்கம் பீடித்த உலகில் ஒரு ஒளிமயமான பெண்ணியக் குரல் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

சமீபத்தில் அனுராதா ரமணன் எழுதிய 'அன்புடன் அந்தரங்கம்' பதிலில் ஒரு பகுதி இது

"ஒரு ஆணின் ஆரம்ப கட்ட சபலத்தின் போதே, மனைவி ஒரு கடிவாளத்தைப் போட்டு, திசை திருப்பி விட முடியும். அந்தக் கடிவாளம் உண்மையானக் காதலால் செய்ததாக இருந்தால் எந்த ஆணும் அதை மீற மாட்டான். மேலும், 40 வயதில் ஆண் மனம், விளையாட்டு காட்டுகிற பக்கம் பாய்கிற குழந்தை மாதிரி... இங்கே எதுவோ குறைகிற மாதிரியும், அங்கே என்னவோ கொட்டிக் கிடக்கிற மாதிரியும் மயங்கி நிற்கும். "எல்லாம் இங்கே இருப்பதுதான் அங்கேயும்... மேலும், இது உன் சொந்தமான சரக்கு!'"


//கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம். பெண்கள் வெறும் கவர்ச்சி பொம்மைதான்ல? வெறும் காட்சி பொருள்தான்ல? இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன?//

சூப்பராயிருக்கும் இது மட்டும் நடந்திட்டா நிச்சயம் இந்த உலகம்(விளம்பர) திருந்திடும். ஆனால் உலகின் கடைசி பெண் வரை இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தன்னுடைய வாய்ப்பை இன்னொருத்தி தட்டிப் பறிச்சிடுவான்னு ஏதாவது ஒரு பொண்ணு நடிச்சிக்கிட்டே தான் இருப்பா.

Jazeela said...

பாலா, மன்னிக்கணும் உங்க பின்னூட்டம் பிரசுரிக்க முடியாது. யாருக்கோ போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கு சம்பந்தமில்லாமல் நான் அனுமதிக்க முடியாது.

கோவி.கண்ணன் said...

//பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.//

சரியா சொன்னிங்க :))

இந்த காலத்தில் பெண்களை பெற்றோர் / கணவர் தவிர வேறு எவரும் கட்டுப்படுத்துவது போல் தெரியவில்லை. மற்றவையெல்லாம் வீனாக இவர்களே வலிய சிக்கிக் கொள்வதுதான்.

Unknown said...

Neenga solrathu romba sari thozhi.. aanal unmaiyila nadakuma theriyala, inga oru product vilambarathuku nadu road la oru ponnai arai kurai aadaiyil aada vaikum kodumaiyum nadakirathu, ithellam sari panna ungalai ennai pola ovvoru thozhigaulum yosikka vendum..
ungaluku en vaazhthukkal thozhi..

Unknown said...

இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?

பெண்களை போகப்பொருளாகவே உருவகிக்க பெண்களே உதவுகின்றனர் என்பதுதான் கொடுமை. கடும்போட்டி நிலவுகின்ற மாடலிங் துறையில், முடிந்தவரை பெண் உடலை கீழ்த்தரமாகக் காட்டவென்றே ஒரு கூட்டம் தயாராக இருக்கும்போது மறுக்கவா? வெறும் பேச்சு.

என்னதான் பெண்களிடம் பொருள் இருந்தாலும், அவர்களே சம்பாதித்தாலும், அவர்களுக்கு வேண்டிய பொருளை அவர்களாகத் தீர்மானிக்காமல் கடைசியில் ஒரு ஆணிண் தலையசைப்பு வேண்டியிருக்கிறது அல்லது அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். பெண்களின் அன்பில் வரும் இயல்பான குணமிது. இந்தப் போக்கு மாறுமா? மாற வேண்டுமா?
ஆக முடிவெடுக்க ஆண் வேண்டும். அவனைக் கவர என்ன செய்ய என்று விளம்பரதாரர்கள் யோசிக்கிறார்கள். தவறான முடிவில் - கொடுமையான விளம்பரங்கள். இதுவும் மாறுவதென்பது இப்போதைக்கில்லை. (எல்லாம் meterialistic world/thinking செய்யும் லீலைகள்)

Anonymous said...

Nalla pathivu jazeela,unmaiyilayey vilambarangalil pengal boga porulai taan payan padutha padugiraargal ,maara vaendum , maaruma ? :-)

Anonymous said...

//பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை//

இப்படியும் சொல்வீர்கள்.ஆனால் அதே கட்டுரையில்,

//பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?//

இப்படியும் சொல்வீர்கள்.
பெண்களின் பிரச்னையே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் இருப்பதுதான் :-) அதுசரி. பெண்கள்னா அப்படித்தான இருந்தாகணும்? :-))))

பெபுபிபு என்று அழகாகத்தான் சொல்றீங்க போங்க. நல்லா இருங்கடே!

Jazeela said...

//பெரும் காதல் கொண்டவன் // பெயரே தூக்கலாக இருக்கிறதே! :-) வாழ்த்துக்கும் நீண்ட விளக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி தோழரே.
//தன்னுடைய வாய்ப்பை இன்னொருத்தி தட்டிப் பறிச்சிடுவான்னு ஏதாவது ஒரு பொண்ணு நடிச்சிக்கிட்டே தான் இருப்பா.// போட்டியிருக்கட்டும் ஆனால் அது எதற்கான போட்டியென்பதில் தெளிவும் இருக்கட்டும்.

//மற்றவையெல்லாம் வீனாக இவர்களே வலிய சிக்கிக் கொள்வதுதான்.// கோவி.க. சிக்கிக் கொள்ளவது தவறென்றே தெரியாததுதான் இதில் கொடுமையே :-(

சுதா, இந்த மாதிரியான பதிவை படித்தால் கூட ஆமா 'வந்துட்டா பெருசா'ன்னு சொல்றதே முதலில் பெண்கள்தான். //pola ovvoru thozhigaulum yosikka vendum..// யோசிப்பார்கள் என்று நம்புவோமாக. சுதா, 'தமிழில் தட்டச்ச' என்று இதே வலைப்பூவில் மேலே இருக்கிறதே அதைக் கொண்டு கொஞ்சம் தட்டிப் பழகுங்களேன்.

Anonymous said...

போகப்பொருளாக பெண்கள் இருந்ததால்தான் பல இன்னல்களையும் கடந்து மனிதர்கள் வாழ்கின்றார்கள். டைணோசவர் போன்ற இராட்சத விலங்குகளே தாக்கு பிடிக்க முடியாம செத்திட்டுது. பெண்களிடம் இருக்கும் பாலியல் கவர்ச்சிதான் இனவிருத்திக்கு மட்டுமல்ல, பெண்களுக்குப் பாதுகாப்புக்கும் காரணமாகியது.

அதுசரி ஒண்ணு கேக்கிறேன். தப்பா எண்ணாதீங்க!!

ஏங்க இந்த பொண்ணுங்க புத்தியைவிட மேக்கப்பை நம்பித் தொலைக்கிறாங்க?

புள்ளிராஜா

PPattian said...

அந்த விளம்பரத்தை நானும் பாத்திருக்கேன்.. வக்கிரத்தனமானதுதான். அதனால் கவரப்பட்டு டியோடிரன்ட் வாங்கும் ஆண்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.. பொருளின் தரத்துக்குதான் மதிப்பே ஒழிய விளம்பரத்துக்கு அல்ல..

ஆனாலும்.. அந்த விளம்பரம் நம்மை பேச வைத்து விட்டது பாருங்கள்.. அதில்தான் அவர்களின் "பிராண்ட்" வெற்றி பெறுகிறது

Jazeela said...

//இதுவும் மாறுவதென்பது இப்போதைக்கில்லை.// இப்போதைக்கில்லை என்றால் எப்போதைக்குமில்லை என்றாகிவிடாதா? எப்போதுதான் மாறும்? கேட்டு சொல்லுங்க சுல்தான் பாய் :-)

ஹனீஃப், மாற வேண்டுமென்று எல்லோரும் விரும்பிவிட்டாலே மாறிவிடும்.

//பெண்களின் பிரச்னையே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் இருப்பதுதான் :-)// ஒழுங்கான நல்ல மனநிலையில் படித்தால் உங்களுக்கும் தெளிவாகவே புரியும். //பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. // பெண்கள்தானே ஆண்கள் மீது இப்படி ஒரு கேவலமான ஆளுமை செலுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன்? ஆணாதிக்க மூளைக்கு அதெல்லாம் விளங்குவது கஷ்டம்தான் :-) ஆபுரொபிபு. நல்லா இருங்கடே!

Jazeela said...

//ஏங்க இந்த பொண்ணுங்க புத்தியைவிட மேக்கப்பை நம்பித் தொலைக்கிறாங்க?// ஆமா புள்ளிராஜா, எனக்கும் அதே கேள்வி உண்டு. மேக்கப் போடும் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் விடை கிடைக்கலாம்.

அபி அப்பா said...

நல்ல பதிவு!ஹும் நான் வேற ஏதாவது சொல்ல போய் எக்கு தப்பா அடி விழுந்தா ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு!!

Jazeela said...

//அதனால் கவரப்பட்டு டியோடிரன்ட் வாங்கும் ஆண்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.. // சரியா சொன்னீங்க புபட்டியன். அப்படியிருக்கும் போது இப்படிப்பட்ட விளம்பரம் அவசியமா? அப்படி விளம்பரப்படுத்தும் பொருளை நாம் புறக்கணித்தால் என்ன? அந்த விளம்பரமே அவர்களுக்கு வீழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டுமே.

அபி அப்பா said...

ஜஸீலா! இந்த அண்ணாச்சிய பாருங்க ஒரு ஆணீய பதிவு போட்டிருக்கார்! நான் அது உள்ளயே போகலை அந்த திஸ்கிய பார்த்ததும் ஓடி வந்துட்டேன்! ஆமா நெசம்மா!

Sumathi. said...

ஹாய் ஜெஸிலா,

//ஒரு பெண்ணுக்கு தேவை மாமிச இச்சை என்பது போலவும், மயக்கும் வாடையில் மயங்கி எவனுடனும் ஒரு பெண் அலைந்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள் என்பது போலவும், கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம்.//

நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு.எனக்கும் கூட இந்த விளம்பரங்களைப் பாக்கும் போதும் இதே எண்ணம் தான் தோன்றுகிறது.அது மட்டும் இல்ல, இந்த சன் டிவில வர்ற விளம்பரங்களைப் பாக்கும் போது நிஜமாவே ஒரு கோவமும் அருவருப்பும் தான் தோன்றும்.

Sumathi. said...

ஹாய் ஜெஸிலா,

//கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்? //

நீங்க வேற, இவங்களை எல்லாம் ஆட்டுவிக்கறது வீனாப் போன அரசியல்வாதிகளும் அரைகுறை பேச்சாளர்களும் தான்.சொந்தமா சுயமா யோசிக்கற அளவுக்கு நம்ம பெண்களுக்கு ஏது பொறுப்பு.

Sumathi. said...

ஹாய் ஜெஸிலா,

ஆனா இந்த பெண்களை மதிக்க முதல்ல பெண்களே நிறைய்ய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறதே..
இந்த மாதிரி விளப்பரங்களில் நடிக்க மாட்டேன்ன்னு ஒரு பெண் சொன்னால், மற்ற பொண்களும் அதை
ஆமோதித்து செயல்படுத்தனும்ல, ஆனா இங்க ஒருத்தி விட்டா, அந்த இடத்திற்கு எத்தனை பலமான போட்டி நடக்கிறது? அடிப்படையிலிருந்து நாமளே மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர மாற்றங்களை உண்டாக்க முடியாது.

Unknown said...

ஜசீலா

எது ஆபாசம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது.இந்த பதிவில் இருக்க்கும் பெண்ணின் உடை பல நாடுகளில் சாதாரண உடையாகத்தான் இருக்கிறது.

அந்த ஆக்ஸ் டிய்யொடரண்ட் விளம்பரம் நகைசுவைகாக எடுக்கப்பட்டது.கஸ்டமர்கள் ஒர்ரு விளம்பரத்தை ரசித்தால் அந்த விளம்பரத்தை நினைவு வைத்திருப்பார்கள்.

Benu said...

I saw this ad yesterday only n immediately i thought "Intha ad innum jezi kanla padalaiyo. Udane blogla potruvale". Bt actually such ads needs to be warned & the sensor board should reject such ads.

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

நண்பர் சேவியர் தன் பதிவில் இதே பத்திரிகை, இதைவிடவும் மோசமான வாசகமுள்ள விளம்பரப் படம் ஒன்றைப் பதிந்திருக்கிறார்.

இப்போது அதனை அண்ணாசாலையிலிருந்து எடுத்துவிட்டார்கள்.

நிற்க.

பெண்களைக் கண்ணியமாகக் காட்டும் விளம்பரங்களே இல்லையா?

1.சாமுத்ரிகா பட்டு - மீரா ஜாஸ்மின்
2.ப்ளஷர் இருசக்கரம் - பிரியங்கா
3.பி.எஸ்.என்.எல் - ப்ரீத்தி சிந்தா

இன்னும் நிறைய இருக்கின்றன.

அன்புடன்
ஆசாத்

லொடுக்கு said...

//அபி அப்பா said...
ஜஸீலா! இந்த அண்ணாச்சிய பாருங்க ஒரு ஆணீய பதிவு போட்டிருக்கார்! நான் அது உள்ளயே போகலை அந்த திஸ்கிய பார்த்ததும் ஓடி வந்துட்டேன்! ஆமா நெசம்மா!
//

இது மிகப் பெரிய பொய்!!!!
அண்ணாச்சி பதிவில் அபிஅப்பா பலமாக சிரித்து 3 பின்னூட்டங்கள் இட்டுள்ளார். என்ன கொடுமை இது அபிஅப்பா?

தாரா said...

Dear Jeseela,

I wrote a similar post like this some time back. http://siragugal.blogspot.com/2005/02/blog-post_16.html

Thara.

ஜமாலன் said...

நல்ல பதிவு பாராட்டுக்கள்.

அந்த உரித்தகோழி (நல்ல உவமை) நானும் பார்த்தேன் கலைஞர் தொலைக்காட்சியில். துவக்கமே அதிர்துல்ல.. அதுதான். போகப்பொருள் என்பது 3000 ஆண்டுகாலப் பிரச்சனை. பாலிண்பம் என்பது எல்லாப் பொருட்களிலும் பசைப்போல பூசப்பட்டு பெருக்கப்பட்டு உள்ளது. அது அதிகாரம் மற்றும் பொதுபுத்தி குறித்த பிரச்சனை.

உங்கள் கேள்விகள் நியாயமானவை. எழுத்துக்கள் கோபத்தில் அதிர்வதை உணரமுடிகிறது. மூளையிலிருந்து இல்லாமல் மனதிலிருந்து வெடிக்கிறது..

காரூரன் said...

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. விளம்பரம் என்பது ஏதாவது ஒரு வடிவத்தில் பேசப்படவேண்டும். கம்பனின் கவிதையில் வந்த சீதையாயினும் சரி, இன்றைய கவிஞர்களாகட்டும் பெண் ரசிக்கப்படவேண்டியவள் என்று தான் வர்ணித்துள்ளார்கள். ஒரு புதுக்கவிஞன் பெண் விஞ்ஞானத்தால் விண்ணைத் தொட்டாலும், மாதமொருமுறை நிகழும் கால விஞ்ஞானம் இருந்தால் தான் அவள் இவ்வுலகில் பெண் என்கிறான். இப்படி சொல்வது ஆண் ஆதிக்கமா? பெண்ணிற்கு ஆணை விட பெண் தான் சவால். ஆண் 60 வயதானாலும் (Hero) கீரோ. பெண் ஒரு பிள்ளை பெற்றால் அவள் நிலைமை அம்போ! இதை நம்மவர் ரசனை என்பதா அல்லது ஆண் ஆதிக்கமா?

Ayyanar Viswanath said...

நல்ல பதிவு ஜெஸிலா

Jazeela said...

நன்றி அபி அப்பா. //பார்த்ததும் ஓடி வந்துட்டேன்! ஆமா நெசம்மா!// உங்களை பற்றி தெரியாதா எனக்கு :-). லொடுக்கு, அங்க போய் பார்க்காமலே அவர் ஒரு ஓ.வா. என்று நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே? :-D

விரிவான விளக்கமான கருத்துக்கு நன்றி சுமதி. என்னுடன் சேர்ந்து ஒரு சில பெண்களாவது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி.

//எது ஆபாசம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது.// ஒத்துக்குறேன் செல்வன்.
//இந்த பதிவில் இருக்க்கும் பெண்ணின் உடை பல நாடுகளில் சாதாரண உடையாகத்தான் இருக்கிறது.// ஆமா நான் அந்த படத்தில் இருக்கும் பெண் மிக மோசமான ஆடை உடுத்தியிருக்கிறாளென எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா செல்வன்? அந்த விளம்பரத்தை உங்கள் கண்கள் நோக்க பெண்ணை ஏன் போகப் பொருளாக உபயோகிக்கிறீர்கள் என்பது என் கேள்வி.

//அந்த ஆக்ஸ் டிய்யொடரண்ட் விளம்பரம் நகைசுவைகாக எடுக்கப்பட்டது.// எனக்கு வக்கிரம்தான் தெரியுது நகைசுவையல்ல. ஒருவர் ஒரு பொருளை நினைவில் வைத்திருக்க வேறு உக்தியே இல்லையா என்ன? ஒரு திருடனை/ கொலைகாரனை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஒரு தியாகியை/ நற்குணம் படைத்த பிரபலத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உங்கள் அகராதியில் வித்தியாசமில்லையோ?

//I saw this ad yesterday only n immediately i thought "Intha ad innum jezi kanla padalaiyo. Udane blogla potruvale". Bt actually such ads needs to be warned & the sensor board should reject such ads.// நன்றி பெனு. என்ன ரொம்ப நல்லாவே புரிஞ்சிவச்சிருக்க நல்லதிற்கில்ல :-D

//நண்பர் சேவியர் தன் பதிவில்// சுட்டி தந்திருக்கலாம் அண்ணா. நல்ல விளம்பரங்களை கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தானே இருக்கிறது. :-(

தாரா, உங்களுடைய சுட்டியில் உள்ள பதிவை படித்தேன். மிகவும் தெளிவாக நிறைய விஷயங்களை தந்திருக்கிறீர்கள். பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி. வாழ்த்துகள்.

நன்றி ஜமாலன், 3000 ஆண்டுக்கால பிரச்சனைக்கு தீர்வுதான் எப்போது? :-(

காரூரன், கம்பர் காலத்தில் அறியாமையில் அப்படி நிகழ்ந்தது என்று சொல்லலாம் இன்றைய காலகட்டத்தில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது ஆனால் இதை தவிர.

பாரதி தம்பி said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு, //பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை// என்ற பொதுவான ஒரு முடிவுக்கு வருவது தவறானது. எல்லா இடங்களுக்கும் இது பொருந்தாது. அதிகபட்ச இடங்களில் ஆண்களும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூக பொதுப்புத்தியுமே பெண்களுக்கான எதிரி. இதை மறுக்கும் விதமான கருத்துக்கள் ஆணாதிக்கவாதிகளுக்கும், பழமைவாதிகளுக்கும் சாதகமாகவே முடியும்.

Jazeela said...

//பொதுவான ஒரு முடிவுக்கு வருவது தவறானது. எல்லா இடங்களுக்கும் இது பொருந்தாது. அதிகபட்ச இடங்களில் ஆண்களும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூக பொதுப்புத்தியுமே பெண்களுக்கான எதிரி.// அப்படியா. ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒரு ஆண் இப்படி ஒத்துக்கிறது. பொதுவான முடிவுக்கெல்லாம் வரலை. தன்னையே ஆதிக்கம் செய்து அடங்கி கிடப்பதிலிருந்து முதலில் வெளியில் வந்து, கவர்ச்சிக் காட்டுவதிலும் அழகு கூட்டுவதிலுமிருந்து வெளி வந்த பிறகு ஆண் ஆதிக்கத்தை பற்றி பேசலாம்ன்னு சொல்றேன். ஒரு கூட்டம் நடிச்சி தர வேண்டியது இன்னொரு கூட்டம் ஆபாச, ஆணாதிக்கம்னு கோஷம் எழுப்ப வேண்டியது. யாரை குறைச் சொல்ல சொல்றீங்க? யானை மாதிரி மண்ணை வாரி தலையுல போட்டுக்குற கும்பல் இது.

அபுல் கலாம் ஆசாத் said...

//சுட்டி தந்திருக்கலாம் அண்ணா//

http://sirippu.wordpress.com/2007/08/31/dcad/

இதோ நண்பர் சேவியரின் பதிவின் சுட்டி.

அன்புடன்
ஆசாத்

Nilofer Anbarasu said...

அவர்களுடய நோக்கம், விளம்பரம்
எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே. ஆனால் கவர்ச்சியை ஆயுதமா க எடுத்து இருப்பது தான் சற்றே
வேதனைக்குறியது...

Unknown said...

//ஆமா நான் அந்த படத்தில் இருக்கும் பெண் மிக மோசமான ஆடை உடுத்தியிருக்கிறாளென எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா செல்வன்?அந்த விளம்பரத்தை உங்கள் கண்கள் நோக்க பெண்ணை ஏன் போகப் பொருளாக உபயோகிக்கிறீர்கள் என்பது என் கேள்வி.//

ஜசீலா,

அந்த பெண் மோசமான ஆடை அணியவில்லை எனும்போது "போகப்பொருள்"ஆக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்?

நிற்க..."போகப்பொருள்" என்ற சொல்லை நீங்கள் பெரும் குற்றமாக கருதுகிறீர்கள்.அதன் பொருள் என்ன?ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் போகப்பொருள் தான்.இனக்கவர்ச்சி இருபாலாருக்கும் இடையே நிலவுவது தவிர்க்க முடியாதது.

கமலஹாசன் சட்டை போடாமல் நடித்த படங்களுக்கு கல்லூரி பெண்கள் கூட்டம் அலைமோதும்.அஜித்,விஜய் படங்களுக்கும் தான். பாக்கியராஜ் படங்களில் இரட்டை அர்த்த காமடிகள் ஏராளம் இருக்கும்.ஆனால் பெண்கள் கூட்டம் தான் திரையரங்குகளில் அலைமோதும்.மிலிந் சோமன் சட்டை இல்லாமல் உடல் அழகை காட்டி நடிக்கும் விளம்பரங்கள் ஏராளம் உண்டு.ஆக பெண்கள் என்றில்லை, இங்கு ஆணும் 'போகப்பொருளாக' தான் பயன்படுத்தப்படுகிறான்.

ஆக பெண்மை விலை பேசப்படுகிறது, போகப்பொருளாக பயன்படுகிறது என குற்றம் சாட்டினால் அதேபோல் ஆண்மை விலை பேசப்படுகிறது, போகப்பொருளாக பயன்படுகிறது எனவும் சொல்ல வேண்டிவரும். ஆக உங்கள் குற்றசாட்டு "இன கவர்ச்சியை விளம்பரத்துக்கு பயன்படுத்துவது சரியா?" என்று தான் இருக்க வேண்டும்.

ஒன்று சரியா,தவறா என்பதை நிர்ணயிக்க அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என பார்க்க வேண்டும்.விளம்பரத்தில் நடிக்கும் பெண்/ஆண் இதனால் பாதிக்கப்படுகிறாரா? இல்லையே?அவர் மனமொப்பி மிகுந்த மகிழ்வுடன் தான் இந்த விளம்பரத்தில் நடிக்கிறார். பார்க்கும் வாடிக்கையாளரும் பாதிக்கப்படுவதில்லை.விற்கும் வணிகரும் பாதிக்கப் படுவதில்லை. அனைத்து தரப்பிலும் மகிழ்வு என்ற நிலைதான் காணப்படுகிறது.

ஆக இதில் நாம் குற்றம் சாட்ட என்ன இருக்கிறது?

//எனக்கு வக்கிரம்தான் தெரியுது நகைசுவையல்ல. ஒருவர் ஒரு பொருளை நினைவில் வைத்திருக்க வேறு உக்தியே இல்லையா என்ன? ஒரு திருடனை/ கொலைகாரனை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஒரு தியாகியை/ நற்குணம் படைத்த பிரபலத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உங்கள் அகராதியில் வித்தியாசமில்லையோ?//

வக்கிரம்,நகைசுவை என்பதும் ஒவ்வொருவர் பார்வைக்கும் வேறுபடுவது.செந்திலை கவுண்டமணி அடிப்பது நமக்கு ஜோக்,செந்திலுக்கு அது சீரியஸ் விசயம்.லாரலை ஹார்டி அடித்தால் லாரல் அழுவார்.நாம் சிரிப்போம்.

ஒரு விசயம் வக்கிரமா, நகைசுவையா என விவாதிப்பதை விட அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், பலனடைந்தவர்கள் எத்தனை பேர் என பார்க்க வேண்டும்.அந்த விளம்பரத்தால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?யாருக்கும் எந்த பாதிப்புமில்லை.அந்த விளம்பரத்தில் நடித்தவர்களுக்கு புகழ்,பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எடுத்தவர்களுக்கு வருமானம் எனும்போது அந்த விளம்பரத்தை எப்படி குறை சொல்ல முடியும்?

மற்றவர்கள் தன்னை எப்படி நினைவில் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்வது அவரவர் விருப்பம்தான். கமலுக்கு தன்னை காதல் மன்னன் என மற்றவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. சிம்புவுக்கு ப்ளேபாய் இமேஜை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மாடலிங்கில் வருகிறவர்களுக்கு அதேபோல் தன்னை தனது கவர்ச்சியால் உலகம் அறிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

இதெல்லாம் தானாக தேர்ந்தெடுத்த அவரவர் சுய விருப்பம் தானே?

Jazeela said...

சுட்டி தந்தமைக்கு நன்றி அண்ணா. எனக்கு உங்க பெயர் தெரியாமலில்லை ஆனால் என்னவோ உங்களை அண்ணாவென்று கூப்பிடவே தோன்றுகிறது. சுட்டியில் உள்ள விளம்பரத்தை பார்த்தேன் - எரிச்சல் மிஞ்சியது. நல்லவேளை எடுத்து தொலைத்துவிட்டார்கள்.

//ஆயுதமா க எடுத்து இருப்பது தான் சற்றே வேதனைக்குறியது...// ஆக மொத்தத்தில் கவர்ச்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது. செல்வன், ராஜா சொல்வதை கவனித்தீர்களா?

செல்வன், //அந்த பெண் மோசமான ஆடை அணியவில்லை எனும்போது "போகப்பொருள்"ஆக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்?// அந்த விளம்பரம் எதற்கான விளம்பரம்? ஒரு பத்திரிகையின் விளம்பரம். Definitely Catchy என்னது? அந்த பத்திரிகையா அந்த பெண்ணா? அந்த விளம்பர பலகையில் பத்திரிகையின் பெயரைவிட எதனை வெளிச்சம் போட்டு பெருசாக காட்டியுள்ளார்கள்? நான் சொல்ல வருவது இந்த ஒரு விளம்பரத்தை மட்டுமல்ல. பெரும்பாலான விளம்பரங்களில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் தென்பட்டால்தான் ஆண்கள் கண்களில் படும் என்பதற்காக புகுத்துகிறார்கள். அப்ப பெண்கள் அந்த இடத்தில் போகப் பொருளாகிறாள் - சரியா? இது இனக்கவர்ச்சியல்ல - வக்கிரபுத்திகளின் ஆதிக்க ஆலோசனையின் வெளிபாடு. படத்தில் கதாநாயகனுக்காக படம் ஓடுவது பெண்கள் கூட்டத்தினால் மட்டுமா? கமலஹாசன், விஜய், அஜித் மீது பைத்தியங்கள் உண்டு இல்லையென்று மறுக்கவில்லை. அதனாலேயே இப்போதெல்லாம் விளம்பரத்திலும் சூர்யா வருகிறார் - மறுக்கவில்லை, ஆனால் ஒரு கதாநாயகன் தோன்றும் விளம்பரத்திற்கும் - குத்தாட்டம் போடும் பெண்கள் தோன்றும் விளம்பரத்திற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியாமல் இருக்காது.

//விளம்பரத்தில் நடிக்கும் பெண்/ஆண் இதனால் பாதிக்கப்படுகிறாரா? இல்லையே?// //அவர் மனமொப்பி மிகுந்த மகிழ்வுடன் தான் இந்த விளம்பரத்தில் நடிக்கிறார். //காசுக்காக, புகழுக்காக? இல்லையா? அதுதான் அவலம் என்று சொல்கிறேன். உடலை கவர்ச்சியாக காட்டி பொருள் ஈட்டுவதற்கு விளம்பரங்களில் நடிக்க தேவையில்லையே? பெண்கள் அப்படிப்பட்ட புகழ்ச்சியில் வீழ்ந்துவிட கூடாது என்றுதான் கேட்டிருக்கிறேன்.

//பார்க்கும் வாடிக்கையாளரும் பாதிக்கப்படுவதில்லை.// ஏன் பாதிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட விளம்பரத்திற்கு நான் மட்டுமல்ல முகம் சுளிப்பவர்கள் ஏராளம். ஒரு கட்டிடத்திலிருந்து அப்படியே குதித்து ஒரு குளிர்பானத்தை எடுக்கும் ஒரு விளம்பரத்தை பார்த்து ஒரு சிறுவன் இறந்தது நினைவில் இருக்கலாம். விளம்பரங்களை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் அல்லவா? அந்த வாசனை திரவத்திற்கு வரும் விளம்பரங்களை பார்க்கும் போது சின்ன வயதிலேயே ஒரு பெண்ணை இப்படியெல்லாம் எளிதில் கவர்ந்துவிட முடியும் என்று தோன்றாதா? சின்ன பசங்க பார்க்குபடியான விளம்பரமா அது? பெண்கள் இப்படித்தான் ஒரு அற்ப விஷயத்திற்கு மயங்கி பின்னாடியே வந்துவிடுபவர்களா? அப்படிப்பட்ட கீழ்தரமானவர்களாக ஏன் பெண்களை காட்டுகிறார்கள்? அப்படிப்பட்ட விளம்பரத்தில் பெண்கள் ஏன் நடிக்க சம்மதிக்க வேண்டும்? //அனைத்து தரப்பிலும் மகிழ்வு என்ற நிலைதான் காணப்படுகிறது.// எப்படிப்பட்ட மகிழ்வு? //பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி// அப்படியா? பார்த்த எல்லோருக்கும் கண்டிப்பாக இப்படிப்பட்ட மகிழ்ச்சி வந்துவிடாது. என் பதிவையே மீண்டும் சுருக்கமாக இங்கு கொட்டியிருப்பதாக தோன்றுகிறது.

Anonymous said...

Pengalai ganniyamaga madikka theriyanum, kaalathirketra nalla saattaiyadi........idu mattuama? ms.world, ms.universe, tharpodu mrs.chennai.....yen inda pottigal...thodarattum ungal saattai adi....ore theervu "irai acham" [God Fearing]. panathirgaga edai vendumanalum seiyalam edanaiyum ilakkalam endru ninaikumbodu idu pondra avalangal thodarum...sambandapatta pen/aan veetil ullavargal kandithal yen inda pengal/aangal idu pondra ad/cinamavil nadikka varugirargal
panam thane? thevai oru kalachara puratchi. Ovvoru aanum thanadu porupil ullavargalai [amma, manaivi, magal, sagodari...]patri sindithal yen inda avalam? yellorum kaasukkaga vila povadal thane......
Jaffar-KUL

Jazeela said...

நன்றி ஜாபர் உங்கள் பின்னூட்டத்திற்கு. தமிழில் தட்டச்சு செய்து பழகுங்களேன். இதே வலைப்பூவிலே மேலே 'தமிழில் தட்டச்ச' என்று இருப்பதை கவனிக்க. இன்னும் உதவி வேணுமெனில் தொடர்பு கொள்ளுங்கள்.

RATHNESH said...

சகோதரி, தங்கள் பதிவின் மையக் கருத்தில் இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட தன்மையைச் சுட்டிக் காட்ட, நான் எழுதிய பதில் நீளமாக இருந்ததால் தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன். (விளம்பரங்களில் ஆணாதிக்கம் - http://rathnesh.blogspot.com). எனக்கு லிங்க் பண்ணுவது முதலான பல அடிப்படைக் கணினி செய்முறைகள் தெரியாது என்பதால் அதனைத் தங்கள் பின்னூட்டமாக எப்படிப் போடுவது என்று புரியவில்லை. எல்லா பின்னூட்ட பரபரப்புகளும் முடிந்த பிறகு நிதானமாக படித்துப் பாருங்கள். நன்றி.

RATHNESH

பொன்ஸ்~~Poorna said...

ஜெஸிலா,
நல்லாத் தான் கொட்டிருக்கீங்க.. ரிலையன்சோ, டாடாவோ ஒரு தொலைபேசி விளம்பரத்துக்கு அரை நிர்வாண ஆடையில்(நீங்க சொன்னது போலத் தான்.. முழு நிர்வாணம் தான்..) ஒரு மாடல் (பிரபல நடிகைகள், டிவி மாடல்கள்) உட்கார்ந்து 'call me' என்று சொல்வது மாதிரி எழுதி வைத்திருப்பார்கள்.. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால் சென்னையில் பல இடங்களில் இந்த hoardingஐப் பார்த்து கடுப்பாகி இருக்கிறேன்..

அப்புறம் மற்ற விளம்பரம் எல்லாம் 'போய்த் தொலையட்டம்' என்றே தோன்றிவிட்டது.. உச்ச பட்ச கோபம் ஏற்படுத்தும் விளம்பரம் லா அழகு சோப் தான்.. பார்த்திருக்கீங்களா?

Unknown said...

Dear Jazeela

I am contacting you because I want to know Tamil typing. Actually I have been trying this for more than 2 years. In fact I had tried to elicit information from writer Sujatha as well as from his website.

Coming to brasstacks I will just list my requirements. You may help me to the extent possible.

1. Photograph of a Tamil typewriter. Because, the font I choose should match a standard typewriter.
2. Suggest a good Tamil font for me.

I came to know about your site, of course, from Ananda Vikatan.

Regards.
Madhukar R. Marur
mmarur@yahoo.com

Anonymous said...

இதெல்லாம் ஆதம் நபி காலத்திலிருந்து சொல்லி வந்த கருத்துதான். மோசமான விளம்பரம் எனத்தெரிந்தும் பெண்கள் ஏன் நடிக்கப் போக வேண்டும். காசுக்காகத்தானே

Jazeela said...

ரத்னேஷ், நீங்க தெளிவா இருந்தா சரிதான்.

பொன்ஸ், பகிர்வுக்கு நன்றி. //உச்ச பட்ச கோபம் ஏற்படுத்தும் விளம்பரம் லா அழகு சோப் தான்.. பார்த்திருக்கீங்களா?// அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க. :(

மதுகர் தனி மடல் வரும்.

கூத்தாநல்லூரன், //பெண்கள் ஏன் நடிக்கப் போக வேண்டும். // அதானே ஏன் நடிக்க போக வேண்டும்? :-)

கணேசன் செந்தில்குமரன் said...

சம்மந்தமில்லாமல் பின்னூட்டம் தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். நான் இந்த வலைப்பூ உலகிற்கு புதிது. என்னுடைய வலைப்பூ முகவரி http://ganesan-senthilkumaran.blogspot.com/ உங்கள் ஆசிர்வாதத்துடன்.

தமிழன்-கறுப்பி... said...

yeah that is true... but some adds are good for ex:bank of india(sevayai kadantha nesamiku uravukal), and it's dipend of the companys....

ரசிகன் said...

ஜெஸிலா அக்கா..
ஏன் இப்படி தப்பாவே எடுத்துக்கிறிங்க..பொண்ணுங்கன்னா...பொறுப்பானவங்க.. எப்பவும் டிரண்டு அப்டேட் செய்பவங்க.,ஒரு பொருளை வாங்க 100 முறை யோசித்து நல்லது கெட்டது பாத்து வாங்குவாங்க..அதனால பொண்ணுங்க சொன்னா ஒரு நம்பகத்தன்மை இருக்குமின்னுதான் விளம்பரத்தில போடராங்க...

ஒரு அழகான [கவர்ச்சியான பெண் அல்ல]பெண்ணை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் வருதுன்னா.. அது கெமிஸ்டிரி.. இயல்பானது..அது அந்த சமயம் மட்டும் தான். ஆனா தப்பான எண்ணம் வரது இல்லை. இந்த பொண்ணுங்கதான் இதப் பத்தி டீப்பா திங்க்/ஆராச்சி எல்லாம் பண்ணி தப்பு தப்பா குற்றம் கண்டு புடிக்கிறாங்களோன்னு தோனுது..

உதாரணத்துக்கு என் "என்னடா... இந்த தமிழ் மணத்துக்கு வந்த சோதனை?" படம் பாருங்க..
மற்றபடி எனக்கு , உங்களோட எழுத்து நடை,செய்தி தெளிவு ரொம்ப புடிக்குது...
சொல்லவந்ததை பொருத்தமாக வரிசைப் படுத்தியிருப்பதில் உங்கள் தனித்தன்மை தெரியுது.வாழ்த்துக்கள்.

அப்புறம் நான் துபாயில் இருந்தபோது நாய்களிடம் தனியாக மாட்டிய வீரக் கதையெல்லாம் கிறுக்கியிருக்கேன்.வந்து திட்டுங்க... சாரி ... கருத்த நிச்சயம் சொல்லுங்க..

அன்புடன்
ரசிகன்

Unknown said...

பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். பணத்தாசை பிடித்து பெண்கள் தாமாகவே துணி அவிழ்க்க துணிகிறார்கள். ஆண்கள் வலுக்கட்டாயமாக பெண்களை பிடித்து வந்து நடிக்க செய்வதில்லை; மேலும் ஆண்களின் பொறுப்பான கட்டுப்பாட்டிலுள்ள எந்த பெண்களும் இதை செய்வதில்லை.தான்தோன்றி தனமாக இருப்பவர்களே இதை செய்கிறார்கள். ஒரு ஆண் ஜட்டியோடு விளம்பரத்தில் வந்தால் முகம் சுளித்து அருவருப்படைபவர்கள் அதே உடையில் பெண் வந்தால் ஆனந்தமடைகிறார்கள். ரசிக்க தெரிந்தவர்கள் ஆண்கள் அதை மறுப்பதற்கில்லை.ஆனால் அதற்கு வழி அமைத்து கொடுப்பவர்கள் பெண்களல்லவா! உடலைக் காட்டி பொழைக்கிறது ஒரு பொழப்பா?

ரசிகன் said...

ஜெஸிலா அக்கா.. மறுபடி கிருக்கறுத்துக்கு ,ஏன் இவ்வளவு நேரம் இடுத்துக்கிறிங்க....படிக்கிறதுக்கு நாங்கல்லா காத்துக்கிட்டிருக்கோமின்னு தெரியாதா?..

Jazeela said...

//ஜெஸிலா அக்கா.. மறுபடி கிருக்கறுத்துக்கு ,ஏன் இவ்வளவு நேரம் இடுத்துக்கிறிங்க....படிக்கிறதுக்கு நாங்கல்லா காத்துக்கிட்டிருக்கோமின்னு தெரியாதா?..// எனக்கும் எழுதுவதற்கு நிறைய இருக்கு ஆனா என்ன செய்றது அலுவலகத்தில் பிழிஞ்சி எடுக்குறாங்க அதான். இந்த பக்கம் எட்டிப்பார்க்கக் கூட நேரமில்லாமல் இருக்கேன் :-(. கண்டிப்பா சீக்கிரம் ஏதாவது கிறுக்கிப் போடுறேன். நன்றி உங்க பின்னூட்டங்களுக்கு.

Anonymous said...

you have given a wonderful concept.... think in a postive way ... the Ads contribute that ...world is slowly coming around womens ... it is the first step... slowly you will see a bright future for women in the world...

ரசிகன் said...

நிச்சயமா காத்துக்கிட்டிருப்போம்.பேச்சு மாறாதிங்க..

ரூபஸ் said...

//நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?//
இது ஒரு நல்ல கேள்வி...
//கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்?//
இதுதான் நிதர்சன உண்மை..

தமிழன்-கறுப்பி... said...

என்ன ஜெஸி இன்னும் எதுவும் கிறுக்கவில்லையா?

Anonymous said...

Enna jazeela rommmmmmba natkalaaga
kirukka kanom, waiting :-)

ரசிகன் said...

ஜெஸிலா அக்கா..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

Unknown said...

hi jazi,
this is the first article iam reading. like cinema even advertisement must be censored.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆய்வு என்ற சிறு பத்திரிகையில் வந்த 'விளம்பரங்களின் வன்முறை எத்தகையது' (பூமா சனத்குமார் எழுதியது என்று ஞாபகம்) என்ற கட்டுரையை முடிந்தால் படித்துப் பார்க்கவும் (வலையில் கிடைக்காது என்று நினைக்கிறேன்).

விளம்பரங்களில் செயல்படும் நுண் அரசியல் / அதிகாரக் கருத்தியல்களைக் கட்டவிழ்திருப்பார் அந்தக் கட்டுரையில்.

Anonymous said...

மொத்தமுள்ள 54 பின்னூட்டங்களில் செல்வனின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன் சிவாஜி பட விழாவில் ஸ்ரேயா கால் மேல் கால் போட்டபடி(அது ஜெல் தடவிய கால்கள் என்பதால் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது) அமர்ந்து கொண்டிருந்தார். முதல்வர் பங்கேற்கும் விழாவில் எப்படி? இப்படி? ஆபாசமாக உட்காரலாம் என்று தமிழ் உணர்வோடு எகிறிக் குதித்தார்கள் தன்மான, மற்றும் கலாச்சாரக் காவலர்கள்.

அடப் போங்கடா அழகை ரசிக்கத்தெரியாத ஜென்மங்களா! "மாநிலத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது சிவாஜி மாதிரியான ஒரு குப்பைப் படத்தின் விழாவில் "வாங்க பழகலாம் என்று அழைக்கும் அங்கவை, சங்கவை, வாங்க வந்து வடை தட்டுங்க என்று அழைக்கும் ஸ்ரேயாவின் அம்மா" போன்ற நாகரீகமான, பிறர் மனதை காயப்படுத்தாத வசனங்களை தமிழுலகத்திற்குத் தந்த, கருப்புப் பணம் பற்றி ஊருக்கு உபதேசித்துவிட்டு வினியோகஸ்தர்களிடமே கோடிக்கணக்கில் கம்பி நீட்டிய, கிழட்டு ரஜினி ஐஸ்வர்யா ராய் கிடைக்காத ஏக்கத்தில் மருமகனின் ஜோடி ஸ்ரேயாவோடு டூயட் பாடிய & எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா அசிங்கப் படத்தின் விழாவுக்கு வருவது பற்றி தமிழக முதல்வருக்கே அவமானமாக இல்லை. பெருசா பேச வந்துட்டானுங்க" என்று நினைத்துக் கொண்டேன்.

பெண்கள்'னாலே ஆண்களும் சரி, பெண்களும் சரி இப்படியே எத்தனை நாட்களுக்கு பேசிக் கொண்டிருப்பீர்கள். "என் வருமாணத்திற்கு ஏற்ற தரமான சோப். பவர் சோப்தான்" என்று ஒரு ஆம்பிளை சொல்ற விளம்பரத்தை நீங்க பாத்ததில்லை போலும் ஜெசிலா. dc விளம்பரத்தைப் பொறுத்த அளவில் பெண் அல்ல பிரச்சினை, வாசகம்தான்.

உரித்த கோழி மேட்டருக்கு வருவோம். (கரெக்டா தெரியலை, ஆனா எல்லோரும் அறிந்ததே)ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான ஆண்களையும், பெண்களையும் நடு ரோட்டில் நிர்வாண‌மாக வைத்து படம் பிடிக்கிறாரே ஒரு போட்டோகிராபர். அதில் எப்போதாவது நீங்கள் ஆபாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? செல்வன் சொல்வதைப் போல "அது உங்கள் பார்வையைப் பொறுத்தது". நான் ஒரு நமீதா ரசிகன் என்பது என் தங்கச்சிக்குத்தான் முதலில் தெரியும், முன்பு நான் மும்தாஜ் ரசிகனாக இருந்ததும் அவளுக்குத்தான் தெரியும். "ச்சீ... என்ன ஒரு கேவலமான ரசனை" என்று ஒரு போதும் அவள் என்னைத் திட்டியதில்லை. என்னைப் பொறுத்த‌ அள‌வில் வ‌ச‌ன‌ங்க‌ள் ம‌ட்டுமே ஆபாச‌ம். பெண்க‌ளோ, அவ‌ர்க‌ள் அணிந்திருக்கும் ஆடைக‌ளோ அல்ல‌ என்றே தோன்றுகிறது. இந்த‌ இட‌த்தில்(ஆடை விஷயத்தில்) ஆங்கில‌ மேதை "ஆழியூரான்" சொன்ன‌ மாதிரி நீங்க‌ள் ஒரு பொதுவான‌ முடிவுக்கும் வ‌ர‌க்கூடாது.

நீங்க‌ள் குறிப்பிடும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள், சினிமாக்கள் மூலமாக‌ பெண்கள் பொருளாதார‌ ரீதியாக‌ எவ்வ‌ள‌வு த‌ன்னிறைவு பெற்றிருக்கிறார்க‌ள் என்ப‌தை ம‌ற‌ந்துவிட்டுப் பேசுகிறீர்க‌ள். செத்து சுடுகாடு போற வரைக்கு ஆண்கள் ஈரோ வேசம் கட்டுற தமிழகத்தில், அட்லீஸ்ட் விளம்பரத்துறையாவது முழுவதுமாக பெண்களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரு ஆணை, பெண் வெற்றி கொள்வ‌தென்பது பொருளாதார சுய சார்பில் தொட‌ர்கிறது.பெரும்பாலான‌ ந‌டிகைக‌ள் ஏன் டைவ‌ர்ஸ் செய்கிறார்க‌ள். ஏனென்றால் ஒரு போதும் அவ‌ர்க‌ள் அடிமையாக‌ இருக்க‌ விரும்புவ‌தில்லை.

"பெண்க‌ளை ஆபாச‌மான‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிப்ப‌வ‌ர்க‌ளை நாய்க்கு நிக‌ராக‌த்தான் நினைக்க‌த் தோன்றுகிற‌து என‌க்கு. நாய்க‌ளுக்கு ம‌ட்டுமே க‌டித்துக் குதறிப் ப‌ழ‌க்க‌ம். த‌மிழ்ச் ச‌முதாய‌ம் வ‌ரைய‌றுத்துள்ள‌ ஆபாச‌ அள‌வுகோலுட‌ன் ஒரு பெண் வீதியில் வ‌ரும்போது ஒருபோதும் என் ம‌ன‌ம் வ‌ர‌ம்பு மீற‌த் துனிந்த‌து இல்லை.

பின் குறிப்பு:
அவ‌ர்க‌ளை அவர்களுக்கே தெரியாமல் சைட் அடிப்ப‌து எவ்வ‌ள‌வு ர‌ச‌னையான‌ விஷ‌ய‌ம். அதெல்லாம் என்னை மாதிரி பிற‌விக் கலைஞ‌னுக்கே சாத்திய‌ம்.

Anonymous said...

dear madam,
penhalai penhalai madikkathteriyade
jenmagkal,
orupuram kadaulahaum tayahayum,parkirarhal,marupuram eppadi bohappurulai?
ippenirkupadilai oru kulanthaiin photo potakkudiya manonilai varavendum
tankal vartaiyal ayirathil oruvar
thirunthinalum santosame..
zakkir....

குடுகுடுப்பை said...

இங்கே பெண்ணுரிமையை கூட ஒரு ஆண் வரைவு செய்வது கேவலமானது.

Trichy Syed said...

பெண்ணியத்தின் நியாயமான, துணிச்சலான, கம்பீரமான குரலைக் கேட்டேன் இந்த பதிவில்!

Asiya Omar said...

தாங்கள் சொல்லியிருக்கின்ற கருத்துக்கள் அருமை.ஜெஸிலா.
//பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.//

மிக அருமை.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி