Monday, August 14, 2006

அம்மா தாயே...







யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.

பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், எப்ப திருத்திக்கப் போறீங்க? பெரும்பாலும் சாப்பாட வீணாக்குறது குழந்தைங்கதான், அதற்கு காரணம் பெரியவங்க நீங்க தானே? இல்லையா பின்ன..

தாய்மார்களுக்கு எப்போதும் தன் குழந்தைகள் அதிகம் உண்டு ஆரோக்கியமா இருக்கணும்னு ஆவல். அதில் தவறில்லை. ஆனால் தன் குழந்தை இவ்வளவுதான் சாப்பிடுவாள்/ வான் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வீணாக்கும் அந்த உணவு வேறு குழந்தையின் பசியை தீர்க்கும் என்று அறிந்திருந்தாலே இந்த அலட்சிய போக்கு வராது.

ஒரு குழந்தை மிச்சம் வைக்கும் அந்த உணவு பண்டத்தை வீட்டில் யாராவது சாப்பிட்டு முடித்து விரயம் செய்யாமல், குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தாலே உத்தமம். நிறைய சமைத்து விட்டு மிஞ்சி, வீணாக்குவதற்கு பதிலாக அளவாக சமைத்தாலே போதுமானது.

சிலர் பழங்களை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக நிறைய வாங்குவார்கள். வீட்டில் ஆர்வமாக யாரும் சாப்பிடாததால் அழுகி, கடைசியில் குப்பைக் கூடைக்கு செல்லும். இப்படி வீண் விரயம் செய்வதை விட தேவையானவையை மட்டும் வாங்கி உண்ணலாமே?

வீட்டில், பார்க்கவே ருசியாக இருக்கும் உணவை, தட்டு நிறைய அள்ளிப் போட்டு நிரப்பிக் கொள்வோம், வாயில் வைத்த பிறகு 'நல்லாவே இல்ல வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்து விடுவோம். அப்படி செய்யாமல் கொஞ்சம் முதலில் வைத்து ருசி பார்த்து மீண்டும் வைத்துக் கொள்ளலாமே?



விரயம் செய்வதை விட வீட்டில் வேலை செய்பவரிடம் தவறாக நினைக்கவில்லை என்றால் தரலாம், இல்லை பிச்சைக்காரர்களுக்கு தரலாம் அதுவும் வாய்பில்லை என்றால் குடியிருப்பு காவலாளியிடம் கொடுக்கலாம். இவர்களெல்லாம் ஏழ்மை அறிந்தவர்கள், பசி புரிந்தவர்கள் வீணாக்காமல் கண்டிப்பாக பசியோடு இருக்கும் வயிறுக்கு சேர்த்து விடுவார்கள். இதெல்லாம் முடியாவிட்டாலும் பூனை, நாய், பறவைகளுக்காவது போடலாம். ஆனால் தயவு செய்து யாருக்கும் பயனில்லாத வகையில் தூர எறிவது சரியில்லைதானே?

குற்ற உணர்வில் எழுதும் பதிவாகவும் இதை கொள்ளலாம். ஏனென்றால் துபாயில் பிச்சைக்காரனே இல்லை. அளவாக சமைத்தாலும் எஞ்சிவிடுவதை என்ன செய்வது? மறுநாள் வைத்து சாப்பிட முடியாமல் சமயங்களில் விரயமாகிவிடுகிறது.

அப்படித்தான் போன வாரம் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனேன் எல்லோரும் சாப்பிட்டும் நிறைய மிஞ்சிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் கீழ் மட்டத்தில் வேலைப் பார்ப்பவரிடம் கொடுத்தேன். மறுநாள் நான் கொடுத்த பாத்திரத்தின் மீது ஒரு சீட்டு அதில் 'நன்றி. நான் மனிதன் கோழி அல்ல' என்று எழுதி இருந்தது. நிறையதானே தந்தோம் பற்றாமல் போய்விட்டதோ என்று எண்ணிக் கொண்டேன். மறுநாள் அதை விட கொஞ்சம் நிறைய மிஞ்சவே, எடுத்துக்குறீங்களான்னு அவரிடம் கேட்டேன். "நான் எழுதியத படிக்கலையோ நீங்க" என்று கேட்டதும். "கோழி சாப்பிடுற அளவை விட கூடத்தான் இருக்கு" என்றேன். அதற்கு அவர் சொன்னார் "நான் எழுதியது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். எங்க ஊர்ல சாப்பிட்டுவிட்டு கையை நக்காம கோழிக்கு காட்டுவோம் அது கொத்திக் கொள்ளும், வயறு நிறைந்ததா நாங்க சந்தோஷப்படுவோம். அதுமாதிரி இருக்கு நீங்க செய்றது" என்று தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார். குத்தலாக இருந்தது எனக்கு. சாப்பிட்டு மிச்சம் வருவதை சாப்பிடமாட்டோம், எனக்கு என்று தனியாக எடுத்து வந்தால் சாப்பிடுவோம் என்று அவர் சொல்லவந்த செய்தி பிறகு புரிந்தது. என்ன செய்வது நாம ஒண்ணு நெனச்சா மத்தவங்க அதயே வேற மாதிரி நினைக்கிறாங்க.

சாப்பாடு வீணாகும் போதெல்லாம் இந்தப் படங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கிறது, மனசு பதறுகிறது. இப்பவெல்லாம் எல்லோரையும் மிச்சம் வைக்காதீங்க, வீணாக்காதீங்கன்னு சொல்லி விரட்டியே எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்கச் செய்கிறேன், அதுவே பெரிய மன ஆறுதல். நீங்களும் செய்ய முயற்சிப்பீங்களா?

13 comments:

We The People said...

நீங்க சொல்லறது சரிதான். நான் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கேன். அப்பறம் அந்த படங்கள் மனிதனை கேவள படுத்த பட்ங்களா தெரியுது எனக்கு. அந்த படம் எடுக்கறவர் ஒரு வாய் உணவு தந்திருந்தால் ஒரு மனித சந்ததி ஒரு மாட்டின் சாணத்தை உண்ணும் அவலம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். ஒரு பஸ் கொளுத்தப்பட்டு பலர் உயிருக்கு போராடும் போது காப்பாற்றாமல் இன்றை செய்திக்கு நல்ல காட்சி என்று படம் பிடிக்கும் இன்றைய மனிதர்கள். இதை விற்று காசாக்கும் கொடும்பாவிகளே!

வல்லிசிம்ஹன் said...

நல்ல கருத்து ஜெசிலா.
படம் தான் பாதிக்கிறது.

சமைத்து மீத்துவதை விட அளவாக சமைக்கலாம்.

உங்க ஊரில எத்தனையோ தான தர்மம் நடப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
அதே சமயம் 'மால்' பக்கங்களில் தூக்கி எறியப்படும் உணவுக் குப்பைகளைப் பார்க்கும் போது சென்னை ஞாபகம்வரும்.

கதிர் said...

ஜெஸிலாக்கா,

ஒரு மனிதன் கஷ்டபடுவதை பார்த்து வேதனை கொள்ளும் உங்கள் மனம்,
மனிதம் இன்னும் நீர்த்து போய்விடவில்லை என்பதை காட்டுகிறது.

இனிமே மிச்சமாச்சுன்னா ஒரு போன் போடுங்க நானே ஓடி வந்து வாங்கிக்கறேன்.

//அந்த படம் எடுக்கறவர் ஒரு வாய் உணவு தந்திருந்தால் ஒரு மனித சந்ததி ஒரு மாட்டின் சாணத்தை உண்ணும் அவலம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்//

நீங்க தவறான கோணத்தில பாக்கறிங்க.

இந்த புகைப்படங்களெல்லாம் இல்லன்னா உங்களுக்கு இந்த அவலம் தெரியுமா?

ஒரு புகைப்படக்காரர் இது போன்ற சம்பவங்களை காண சகியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய பதிவு கூட ஒருவர் இட்டிருக்கிறார்.

கொடுமையான சம்பவங்கள் உலகில் நடக்கின்றன என்பதை அறிவிப்பவர்கள் அவர்கள். இல்லனா நாம் இதைபற்றி விவாதித்திருக்க மாட்டோம்.

இந்த படங்களை பார்க்கும்போது நாம் எவ்வளவு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருது, அதே சமயம் வேதனையாவும் இருக்கு.

தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் ஜெயசங்கர்.


அன்புடன்
தம்பி

Clown said...

முந்தி எங்க அலுவலகத்தில் ஒரு தோழி இப்படித் தான் உங்கள மாரியே.
சேர்ந்து சாப்பிடறப்ப யாராவது மிச்சம் வச்சா உரிமையா கத்துவாங்க. நல்ல விசயத்த எளிமையா சொன்னீங்க.

நாலடியார்ல ஒரு பாட்டு சொல்லும்
"யானை வாயில் இருந்து சிதறும் சிறு கவளம் எத்தனையோ எறும்புகளுக்கு உணவாகும்" அப்டீன்னு.

நல்ல மணம் வாழ்க.

Jazeela said...

//நீங்க சொல்லறது சரிதான். நான் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கேன். // முயற்சி கண்டிப்பாக திருவினையாக்கும். //அந்த படம் எடுக்கறவர் ஒரு வாய் உணவு தந்திருந்தால் ஒரு மனித சந்ததி ஒரு மாட்டின் சாணத்தை உண்ணும் அவலம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். // நமக்கு எப்படி தெரியும் படம் எடுத்தவர் எந்த நிலையில் இருந்தாரென்று? புகைப்படம் எடுப்பதற்கு முன் அவரும் மாட்டின் சாணத்தையே உண்டிருப்பாரோ என்னவோ? :-(

//உங்க ஊரில எத்தனையோ தான தர்மம் நடப்பதைப் பார்த்து இருக்கிறேன்.//மனு, நீங்க சொல்வது சரிதான். தான தர்மங்கள் பிரமாண்ட அளவில் நடக்கும். மிஞ்சிய சோற்றையோ பழைய துணியையோ யாரும் வாங்க மாட்டார்கள் ;-(

//இந்த படங்களை பார்க்கும்போது நாம் எவ்வளவு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருது,// உண்மைதான் கதிர். //இனிமே மிச்சமாச்சுன்னா ஒரு போன் போடுங்க நானே ஓடி வந்து வாங்கிக்கறேன்.// பேசி எண் தாங்க செய்திடலாம் ;-)

//நல்ல விசயத்த எளிமையா சொன்னீங்க.// நன்றி வினோத். உரிமையா கத்தும் தோழி இருக்கும் வரை உங்களுக்கு பிரச்சனையில்லை.

ஏ.எம்.ரஹ்மான் said...

ஜெஸிலா

பார்க்கவே மனம் களங்குது , நல்ல விசயத்தை சொல்லயிருக்கிங்க

உணவ தூக்கி எறியாம மற்ற உயிர்களுக்கு கொடுக்குற மனசு எல்லாருக்கும் வறனும்நு கடவுளை வேண்டிக்கிறேன்.

Anonymous said...

http://seemachu.blogspot.com/2006/01/blog-post.html

http://seemachu.blogspot.com/2006/03/17.html

Jazeela said...

உங்க பிராத்தனைக்கு நன்றி ரஹ்மான்.

அனுப்பியது யாருன்னு தெரியாட்டாலும் பரவாயில்லை சீமாச்சுக்கு பதில் எழுதிடுறேன். உங்க பதிவுகளை பார்க்கும் போது http://jazeela.blogspot.com/2006/07/blog-post_18.html

பால் அபிஷேகம்
பட்டினியில் அழுதது
பச்சிளங்குழந்தை

என்பதுதான் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் எப்போ நிற்குமோ அப்போதுதான் உணவு விரயமும் நிறுத்தப்படும். ;-(

கதிர் said...

மூணு நாலு மூணு மூணு எட்டு அஞ்சு நாலு

நம்பர்தாங்க அது!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல கருத்தை வழியுறுத்தி எழுதிருக்கீங்க ரொம்ப சமுதாய சிந்தனை இருக்கும் போல

Thottarayaswamy said...

plz send me some style bloger codings

Anonymous said...

mam,
congratulations .innaikku kungumathila onga bloglenthu oru kavithai vanthurukku.athai paathuttu than blog vanthen.padangal enna urukittu.
waste parthu universal crime.nichayama nammal anathai seiyanum.blog romba nalla irukku. padithu vimarsnam seiven.happy blogging.sandhya.

Jazeela said...

நன்றி குமரன்.

சுவாமிஜி நானே கடன் வாங்கி இரண்டு நல்லவர்களால வலைப்பு அம்ச்சேன் எங்கிட்ட கேட்டா நா எங்க போவேன்?

வருக சந்தியா. உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி. அப்புறம் மேம்ன்னு சொல்லாம சும்மா ஜெஸின்னு சொன்னாலே போதும்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி