Sunday, May 21, 2006

பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்ட
ஆண் வண்டுகள்
மலர் விட்டு மலர் தாவி
மூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்
காட்டு பூக்களின்
தேனை மட்டும் உண்ணாமல்
துளைக்கவும் துடங்கியது
மூங்கிலை.

தூது போன தென்றல்
புல்லாங்குழலென எண்ணி
மூங்கில் துளையில் நுழைந்து
ராகம் எழுப்பியது.

மரங்கொத்தி ராகத்திற்கேற்ப
மரத்தை தட்டி தாளம் துவங்கியது.

குயில் சூழலுக்கேற்ப
பாடி மகிழ்ந்தது

மர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாற
புல்வெளி மேடையாக இருக்க
நேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்
புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆட
வண்ண வண்ண விளக்காக
வானவில் வந்து நிற்க
எழிலகத்தை காண
இரண்டு கண்கள் போதாதே

என் புகைப்பட பெட்டி கூட
இவ்வழகிய காட்சியை அதனுள்
பூட்ட நினைத்ததை எண்ணி
ஏலனமாக புன்னகையித்தது.

Saturday, May 13, 2006

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?

பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?

உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி