Tuesday, February 17, 2015

நான் ஒரு இனப் பாகுபாடாளர் அல்ல...

அலுவலக வாசலில் உள்நுழையுமிடத்தில் ஏதோ கொட்டிக்கிடந்தது, அது வெள்ளை பளிங்குத் தரையில் பளிச்சென்று தெரிந்தது. நான் வரவேற்பாளினியிடம் "என்னது இது?" என்றேன். அவள் அலட்சியமாக "யாரோ கொஞ்சம் காபிக் கொட்டிட்டாங்க" என்றாள். "துடைத்துவிடலாம், இல்லாவிட்டால் அதை மிதித்து மற்ற இடமும் அழுக்காகிவிடும்" என்றேன். அவள் வேலையைப் பார்த்தப்படியே "இன்னும் ஒரு மணி நேரத்தில் பணியாளர் வந்துவிடுவார், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்" என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை கடந்த எங்கள் பொது மேலாளர் ஒரு திசுத்தாளை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து அந்த இடத்தை துடைக்கலானார். இதைப் பார்த்த உடனே வரவேற்பாளினி விறுட்டென எழுந்துச் சென்று "கொடுங்க நான் துடைக்கிறேன்" என்று கேட்க, காத்திருந்ததுப் போல் கொடுத்துவிட்டு சென்றார் மேலாளர்.

அவர் செய்வார் இவர் செய்வார் என காத்திராமல் நாமே உடனே செய்ய வேண்டும் என்பது நன்றாக உரைத்தது.

பெரும்பாலான ஆசியர்கள் வேலைகளில் பாகுபாடுப் பார்க்கிறோம். வெகு சிலரே எதையுமே தரக்குறைவான வேலையாகப் பார்க்காமல் செய்ய முன் வருகிறார்கள்.

(வரவேற்பாளினி ஃபிலிப்பினோ, மேலாளர் லெபனியர், நான் இந்தியர் என்பதை சொல்லத்தான் வேண்டுமா..?).
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி