Tuesday, June 27, 2006

போலி வார்த்தைகள்

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ வீசும் பார்வையின் ஒளி
என்னை வந்து கிள்ளுது.

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
நீ விடும் மூச்சு காத்து
உன் ஏக்கம் சொல்லி கொல்லுது

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகி
மேகமழையோடு என்னை தொட்டு செல்லுது

உன் உதடுகள் என்னை
அழைக்காமல் இருக்கலாம்
என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்
என்னை அணைத்து என்னமோ பண்ணுது

மனதால் உணர்த்தும் காதல் போதும்
வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!

Monday, June 26, 2006

எப்போது நுழைந்தாய் என்னுள்?

கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?

மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?

கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?

வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?

மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?

என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?

என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?

தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!

அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.

தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!

வாடகை வீடு - வில்லா 72

வீடு தேடினோம்
பாலைவனத்தில்
விரைந்து நடந்தோம்
பாதசாலையில்
வின்னை முட்டும்
கட்டிடங்கள் இடையில்
வீதி வீதியாய்
வரிசை வீடுகள்
விசால வராண்டா
வேண்டாம்டா எனக்கு
நிம்மதி குடியிருக்கும்
வீட்டை காட்டுடா
வில்லை வில்லையாய்
குட்டி வீடுகள்
கொட்டி கொடுத்தாலும்
கிடைக்காத இல்லங்கள்
வெளிச்சம் நிறைந்த
திறந்த வெளி
வில்லாவானாலும் பாலையிலே
பூத்த சோலை
வயல்காடு போல்
புற்கள் அளவாய்
வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய்
வளர்ந்து நிற்க
வெட்கத்தில் வெக்கிய
மல்லி கொடி கவிழ்ந்து படற
விக்கி விக்கி என்று பூனை பெயரை
விளிக்கும் கிளி
விடிந்ததும் சூரியனை கண்டு
கூவ சேவல்
விட்டு விடாமல் பட்டென்று
குடியேறினோம் வீட்டின் உள்ளே.

Sunday, June 25, 2006

விச்சித்திர பிறவி

விரும்பாத வேதனை வந்தால்
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.

வினோதமானவனே, உனக்கோ...
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.

தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.

Monday, June 19, 2006

காதல் கடிதம்

பெயரில்லாததால்
பெரிதுப்படுத்தவில்லை
அறிவுறுத்தியிருந்ததால்
அலட்சியப்படுத்தவில்லை
கவரும் காகித அட்டையால்
கவிழ்ந்துவிடவுமில்லை
இதுவரை யாரென்று தெரியவில்லை
இருப்பினும் சந்திக்க விருப்பம்
விருப்பத்தை சொல்லவல்ல
விபரீதம் காதல் எனவே.

Monday, June 12, 2006

பாதுகாப்பு!

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது

எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

www.thisaigal.com/jan06/jazeelakavi.htm

Sunday, June 04, 2006

வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடு
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?

பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?

உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?

பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?

இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?

நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?

நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே

கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி