Thursday, November 30, 2006

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா
படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
வரிகள்: வாலி

படத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும்.

சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு தோன்றும், சில பாடலால் சந்தோஷம், சில பாடலால் பயம், சில பாடலால் மன சஞ்சலம், சில பாடலால் பல பழைய நினைவுகள், சில பாடலை கேட்டவுடன் நம்மை அறியாமல் வார்த்தைகள் நம் உதட்டில் ஒட்டிக் கொண்டு அதையே முணுமுணுத்துக் கொண்டும் இருப்போம். சில பாடல் அதில் வரும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து தரும். ஒரு பாடலை பிடிக்க பல காரணங்கள் பல பேருக்கு இருப்பினும், ஒரு பாடலை பிடித்து போக முதல் காரணம் அதிலுள்ள ரம்யமான இசை இணைந்த எளிமையான கவிதை வரிகள்தான் என்பது என் கருத்து.

ஏ.ஆர்.ஆரின் பாடல் எப்போதுமே கேட்க கேட்கதான் இனிக்கும். கேட்டவுடனே பிடித்து போகாது. பல முறை காதில் ஒலித்த பிறகே உதடுகள் உச்சரிக்க தொடங்கும். அப்படி மெல்ல மெல்ல வந்து மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலில் 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் தற்போதையது. நல்ல மெல்லிசை, ஸ்ரேயா கோஷுக்கு தமிழ் பாடம் எடுத்துப் பாட வைத்த பாடல் என்று தோன்றுமளவுக்கு மிக உணர்ந்து பாடியது போல இருக்கிறது அவரது குரலில் தெரியும் உணர்வுகள். ஆனால் இந்த உணர்வுபூர்வமான விசயத்தை திரையில் பூமிகாவின் முகத்தில் துளியும் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமே.


முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?

தன் தலையை தானே தட்டிக் கொண்டு நானா என்று கேட்டிருப்பது அந்த வரிகளின் அழுத்தம் ஒலிக்கும் அளவுக்கு உணர்வுகள் இல்லாமல் ரொம்ப லேசாக, விளையாட்டாக உச்சரித்திருப்பது போல் உள்ளது பூமிகாவின் நடிப்பு.

நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..

ஷ்ரேயா எந்த கஷ்டமும்படாமல் சுலபமாக பாடியிருப்பதாகவே தோன்றுகிறது பாடலை கேட்கும் போது. ஆனால் குரலில் அந்த நுணுகங்களை கொண்டுவர ரகுமான் எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார், புரியவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரென்று ஷ்ரேயாவையும் ஏ.ஆர்.ஆரையும் கேட்டால்தான் தெரியும்.

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த ஆ.... ஆ... ஹாஹா...


குழுவினர் பாடும் இந்த ரங்கோலி இடம் இனிமை. வானவில் கீழ் வந்து ஒரு சுற்று சுற்றுவதும், பாட்டில் வரும் இயற்கை சூழலும் நன்றாக வந்திருக்கிறது. பூமிகா கால்பந்தாட்ட திடலுக்கு வந்து குலுங்கி ஆடுவது அழகு, டைரி மில்க் விளம்பரத்தை நினைவுப்படுத்துகிறது.

பூவைத்தாய் பூவைத்தாய்
நீ பூவைக்கோர் பூவைத்தாய்
மன பூவைத்து பூவைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஹோ..

தேனீ நீ மழையில் ஆட
நான் மான்தான் நனைந்து வாட
என் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஹோ

வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை..ம்

-இந்த வரிகள் எத்தனை முறைக் கேட்டும் சரியாக விளங்கவில்லை

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..ஆ

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நான் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமாஆஆ

அருமையான உவமை வரிகள். நிலவை வைத்துக் கொண்டு கவிஞர்கள் என்னமா எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணம். இந்த இடத்தில் பூமிகாவின் கண்களை நெருக்கமாக காட்டியிருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.

தேன் மலை தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமோஓஓஒ

இந்த இடத்தில் தவறாமல் சாய்ந்துவிட்டார் பூமிகா சூர்யா தோள் மீது

நீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்திடலாம்..

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த
(2 முறை)


சூர்யா - பூமிகா காதல் ஜோடியின் நெருக்கத்தை இந்த ஒரு பாடலில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் என்.கிருஷ்ணன்.

ஏ.ஆர்.ஆரின் மெல்லிசை, ஷ்ரேயாவின் குரல் வளம், வாலியின் வரிகள், எனக்கு பிடித்த சூர்யா எல்லாம் கலந்து மனதில் நிற்கும் பாடல். பாடலை கேளுங்கள் பார்த்தால் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கு ;-)

பாடலை பார்க்க:


பாடலை கேட்க:
முன்பே வா.. பாடலை இறக்க
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி