யாருக்காகவாவது
யாரோ
எங்கோ
எதையாவது
எழுதிக் கொண்டே இருக்கின்றனர்
எழுதியவற்றை வாசித்து
பாராட்டுக்கள் குவிகின்றன
தனக்கானது என்று
பலரும் கொண்டாடுகின்றனர்
எனக்கு எழுதியதென்று
இல்லாதவர்கள் நினைக்கின்றனர்
தனக்கு வந்ததாகத் தொடரச் சொல்கின்றனர்
வாசிக்க வேண்டியவர்களுக்கு மட்டும்
அது சென்று சேர்வதேயில்லை
30.8.2021
இரவு 10.00
ஜெஸிலா