Tuesday, March 28, 2006

யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறி
இன்பமாய் இல்லறம் தொடங்கி
விரைவிலே உற்றவன் இறக்க
நாட்பது கழிந்து வேலை தேடி
சேரவும் செய்தேன்
நானா காரணம்?

இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
விளக்காய் கிடைத்த வேலையை
தெய்வமாக போற்றி
கண்டவர் பார்வையை கடந்து
சீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.
துணிவா காரணம்?

ஒரு வாரத்திலே தெரிந்தது
புதிய துணை உண்டானது என்று
இழந்த துயரை மறந்து
கவசமான உயிரை
கவனமாய் பாவித்தேன்.
நம்பிக்கையா காரணம்?

எதிர்ப்புகளே மிகுந்தது
உணர்வுக்கு புரிதல் இல்லை
அழிக்க வற்புறுத்தல்
தாங்ககூடிய சுமை என்றேன்
கேட்பாரில்லை.

காரணம் தந்தார்கள்
சமுதாய சந்தேகம் என்று!
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி