Tuesday, March 20, 2007

தமிழ் சாகடிக்கப்படுகிறது!?


என்னதான் பல்வேறு வகையான ஊடகங்கள் இருந்தாலும் வான் அலைகள் மூலம் கேட்கப்படும் விஷயங்கள் அப்படியே மனதில் பதியத்தான் செய்கின்றன. தொலைக்காட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். ஏழைகளுக்கும் எளிமையாகக் கிடைக்கக் கூடியது இந்த வானொலி சேவைதான்.

இலங்கையின் முதல்தர வானொலி சக்தி எப்.எம். அமீரகத்தில் தொடங்குகிறார்கள் என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். தரமான நிகழ்ச்சிகளை தரமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூலம் கிடைக்கும் என்று நம்பியிருந்தேன். இலங்கைத்தமிழில் புகுந்து விளையாடுவார்கள் என்று கேட்க ஆவலாக இருந்தேன். ஆனால் எங்கிருந்துதான் பிடித்தார்களோ இவ்வகையான அறிவிப்பாளர்களை, அழகு சேர்த்து பேசுவதாக எண்ணிக்கொண்டு வார்த்தைகளைச் சிதைக்கிறார்கள், குரலின் ஏற்ற இறக்கம் தருவதாக நினைத்துக் கொண்டு கர்ணகொடூரமாக நிகழ்ச்சி தருகிறார்கள். இதில் ஒரு பெண் அறிவிப்பாளர் இருக்கிறார். ஒரு அறிவிப்பாளருக்கான எந்தத் தகுதியும் இல்லாதவர் என்றே சொல்லலாம். நல்ல குரல் வளமோ, மொழி வளமோ, உச்சரிப்போ, குரல் வசீகரமோ எதுவுமே இல்லாத வகையில் நிகழ்ச்சி நடத்துவார் - சகிக்கவே முடியாத தமிங்கிலத்தில். தாங்க முடியாமல் ஒருநாள் இதே விஷயத்தை கண்டித்துக் குறுஞ்செய்தியும் அனுப்பினேன்.

மற்றுமொரு உருப்படாத நிகழ்ச்சியில் வேறு ஒரு அறிவிப்பாளர் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கேட்கிறார். உதாரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நேரம் தருகிறார்களா இல்லையா என்று. நேயர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களது பெயர் மட்டும் சொல்லி 'தருகிறார்கள்' அல்லது 'இல்லை' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். ஏன் எதற்கு என்று ஒரு வார்த்தைக்கூட அதற்கு மேலே பேசிவிடக் கூடாதாம். இந்த நிகழ்ச்சியிலும் மக்கள் ஆர்வமாக கலந்துக் கொள்வார்கள் - கொடுமைதான்?!

ஒரு நேயர் அழைத்தார் அவர் பெயர் 'அறிவு அழகு' பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நேரம் தருவதில்லை ஏனென்றால் .... என்று இழுத்த உடனே அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்கிறார் "நேரம் தருவதில்லை, அவ்வளவுதான். உங்க பெயருக்கு ஏற்றாற்போல பேசுங்கள்" என்று வெடுக்கென்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அடுத்த நேயருக்குப் போய்விட்டார். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் மனதைக் காயப்படுத்தி கருத்துக் கணிப்பு நடத்தி என்ன சாதிக்கப் போறாங்கன்னு தெரியவில்லை?

நேற்று என் கோபம் உச்சகட்டமாகக் காரணம், செய்தி வாசிப்பில் மீண்டும் தலைப்பு செய்தி என்று உரக்க வாசிப்பவர் படிக்கிறார் 'பாப் உல்மரின் சாவில் மரணம் நீடிப்பு என்று. (மர்மத்தைத்தான் மரணமாக மாற்றியிருக்கிறார்கள் என்று மண்டையை உடைத்துக்கொள்ளாமலே புரிந்தாலும் கொடுமையாக இருந்தது) என்ன செய்வது இவர்களையெல்லாம்? தமிழ்ச்சேவை என்று வானொலி ஆரம்பித்து வாழும் தமிழைச் சாகடிக்கிறார்களே, இந்தக் கொடுமையை கவனிக்க ஆளில்லையா? கடவுள் காப்பானாக.

21 comments:

Unknown said...

அவர்கள் என்ன தமிழ் வளர்க்கவா வந்தார்கள்!. இங்கிருக்கும் தமிழனுக்கு பொழுது போக்க ஒரு சாதனம் அதில் பணம் பண்ணுதல் அவ்வளவுதான். ரொம்ப அதிகமாக எதிர்பார்த்து விட்டீர்களோ!
செய்தி வாசிப்பில் தவறுவதெல்லாம் பெரிய விஷயமில்லை. தவறுகள் மனித இயல்பு தானே.
நிரம்ப கோபப்படுவீர்களோ!

Jazeela said...

//செய்தி வாசிப்பில் தவறுவதெல்லாம் பெரிய விஷயமில்லை.// உண்மையாகவா? உங்கக்கிட்டயிருந்துதான் தெரிஞ்சுக்கனும். //தவறுகள் மனித இயல்பு தானே.// தவறிலிருந்து திருந்துபவன் தான் மனிதன். கேட்பவர்கள் கேணைகளாக இருந்தால் இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின் திறன் மாறுமா என்ன?

╬அதி. அழகு╬ said...

பெந்தகொஸ்தேலேர்ந்து ஆளுங்களப் புடிச்சுப் போட்ட மாதிரி விளம்பரப் பாடல்கள்.


"ஷார்........ஜாவிலிருந்து நமச்சிவாயம்ம்ம்ம்ம்ம் மற்றும்ம்ம்ம்ம்ம்ம் து....பாயிலிருந்து கண்ணன்ன்ன்ன்ன்ன் ..."

"ஸோ ... இந்த மாத்ரி ஆள்ங்க இர்க்ர வரிக்கும் ஒன்மே உருப்டாது. ஸோ ... நீங்க என்ன செய்னும்னா ..."


ஊ......ங்கள் ஷா.....க்தீ...யை இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்களா? கொடுமைதான்.

அபி அப்பா said...

ஆமாம் சகோதரி! அதுவும் நான் காலை 6.30 முதல் 7.00 வரைதான் கேட்பேன். ஐயோ அந்த அப்பன் தேவையில்லாமல் சிரிப்பது, பிறகு"இந்த காலை வேளையில் சாலையில் செல்லும் நீங்கள் சோலையாகி மாலை வரை..." இப்படி சம்பந்தமேயில்லாமல் புலம்பி தீத்துடுவார்.

Jazeela said...

//ஊ......ங்கள் ஷா.....க்தீ...யை இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்களா? கொடுமைதான். // ஹிந்தி 106.4 'ஹம்'-க்கு மாறிவிட்டேன் ;-)

//நான் காலை 6.30 முதல் 7.00 வரைதான் கேட்பேன்// காலங்காத்தால இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் நான் எடுப்பதில்லை ;-)

Leo Suresh said...

ஜெஸிலா,
அதுவும் சாயங்காலத்துல ஒரு பெண் ஒலிப்பதிவர் வழியுறத கேட்டா எரிச்சலா இருக்கும்
லியோ சுரேஷ்

Jazeela said...

லியோ சுரேஷ், நானும் அவர்களைப் பற்றித்தான் //பெண் அறிவிப்பாளர் இருக்கிறார். ஒரு அறிவிப்பாளருக்கான எந்தத் தகுதியும் இல்லாதவர் என்றே சொல்லலாம். நல்ல குரல் வளமோ, மொழி வளமோ, உச்சரிப்போ, குரல் வசீகரமோ எதுவுமே இல்லாத வகையில் நிகழ்ச்சி நடத்துவார் - சகிக்கவே முடியாத தமிங்கிலத்தில்.// இப்படி எழுதியுள்ளேன்.
//வழியுறத கேட்டா எரிச்சலா இருக்கும்
// எரிச்சல் படுவது நான் மட்டுமல்ல. சந்தோஷம் ;-)

Ayyanar Viswanath said...

ஆரம்பத்தில் எனக்கும் இது போன்ற கோபங்கள் இருந்தன.ஆனால் தமிழ்நாட்டி ல் மட்டும் நமது தொகுப்பாளினி கள் என்ன தமிழிலா பேசுகிறார்கள்? ஒருவேளை தொகுப்பு தமிழ் என்று ஏதேனும் இருக்கிறதோ என்னமோ?

ஆனால் ஒன்று நமக்கு தமிழ்மணம் போல கீழ்தட்டு மக்களின் மொழியியல் ரீதியான 'சக்தி' வாய்ந்த ஊடகம் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

வேண்டுமென்றால் அனைவரும் சேர்ந்து பொது கடிதம் ஒன்றை சக்தி நிறுவனத்தாருக்கு அனுப்பிப் பார்க்கலாம்.பயன் கிட்டினால் அனைவருக்கும் சந்தோஷமே.

அபி அப்பா said...

//வேண்டுமென்றால் அனைவரும் சேர்ந்து பொது கடிதம் ஒன்றை சக்தி நிறுவனத்தாருக்கு அனுப்பிப் பார்க்கலாம்.பயன் கிட்டினால் அனைவருக்கும் சந்தோஷமே.//

இப்படிகூட செய்யலாமே!

Unknown said...

//மண்டையை உடைத்துக்கொள்ளாமலே புரிந்தாலும்//
வாய் தவறி வரும் வார்த்தைகள் 'மண்டையை உடைத்துக்கொள்ளாமலேயே' உங்களைப் போலவே எல்லோருக்கும் புரிந்து விடும்.
//தவறிலிருந்து திருந்துபவன் தான் மனிதன். கேட்பவர்கள் கேணைகளாக இருந்தால் இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின் திறன் மாறுமா என்ன?//
சரி சரி. தழிழை சாகடிக்கவென்றே நிலையம் திறந்திருக்கிறார்கள்.
(எதுக்கு வம்பு. நீங்க ரொம்ப கோபப்படுவதால்....)

Jazeela said...

//தமிழ்நாட்டி ல் மட்டும் நமது தொகுப்பாளினி கள் என்ன தமிழிலா பேசுகிறார்கள்?// எல்லா இடத்திலும் இதே பிரச்சனைதான். ஏன் 'சன்' நிகழ்ச்சிகளும் அப்படித்தான் இருக்கிறது. "இந்த song-அ யாருக்கு dedicate பண்ண விரும்புறீங்க", "உங்களுக்கு marriage ஆயிடுச்சா? Family இங்கத்தான் இருக்கா போன்ற சிறு வாக்கியங்களிலும் ஆங்கிலம் கலக்காமல் இருக்க முடியவில்லை. பாட்டு, திருமணம், குடும்பம் என்ற தமிழ் வார்த்தைகளுமா மறந்துப் போகும் இவர்களுக்கு? இவர்களை சொல்லிக் குற்றமில்லை அதனையும் கேட்டு, ரசித்துத்தொலைகிறார்களே நம்ம மக்கள் அவர்களை சொல்ல வேண்டும் ;-(

//வேண்டுமென்றால் அனைவரும் சேர்ந்து பொது கடிதம் ஒன்றை சக்தி நிறுவனத்தாருக்கு அனுப்பிப் பார்க்கலாம்.பயன் கிட்டினால் அனைவருக்கும் சந்தோஷமே. // செவிடன் காதில் ஊதிய சங்காயில்லாமல் பயன்கிட்டினால் சரிதான்.

லொடுக்கு said...

ரொம்ப நாளா என் மண்டையை குடைஞ்ச செய்திங்க இது. திட்டி தீர்க்கனும் போல இருக்கும். நீங்க திட்டிட்டீங்க. மகிழ்ச்சி :)

இதுல பெரிய கொடுமை என்னன்னா இவுங்களுக்கு தொலைபேசுறதுல 99.9% வாழ்வில் இங்கு வந்து கஷ்டப்படும் கீழ்தட்டு உழைப்பாளிகள் தான். அவர்களை சக்தி எப்.எம் படுத்தும் பாடு இருக்கிறதே. அப்பப்பா மிகவும் அவமானப்படுத்துவது போல் பேசுவது. கிண்டலடிப்பது. :( ரொம்ப கொடுமைங்க.

இப்ப அந்த பொண்ணு ஒன்னு புதுசா ஒன்னு செய்யுதுங்க. அதான் ஹிந்தி பாடல் போடுறது. யாரு கேட்டா உன்கிட்ட ஹிந்தி பாட்டு. அதுக்குத்தான் ஒன்னுக்கு நாலு எப்.எம் இருக்கே. 12 மணிநேர தமிழ் எப்.எம் உருப்படியா தமிழ் பாட்டு போடத் தெரியல. அந்தப் பொண்ணு தமிழ் பொண்ணா என்பத் கூட சந்தேகமா இருக்கு. சரி, தமிழ்தான் தாண்டவம் ஆடுதுன்னு பார்த்தா, ஆங்கிலமும் கந்தல் தான். :(

ஹூம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் போல. அமீரகத்தில் நல்ல தமிழ் எப்.எம் வருவது என்னாளோ!!!

Jazeela said...

//சரி சரி. தழிழை சாகடிக்கவென்றே நிலையம் திறந்திருக்கிறார்கள்.
(எதுக்கு வம்பு. நீங்க ரொம்ப கோபப்படுவதால்....) // சுல்தான் நான் கோபப்பட்டு ஏதாவது எரியவாப் போகுது? கோபமிருக்கிற இடத்திலத்தான் ஏதோ இருக்கும்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டதில்லையா? எல்லாம் நானே சொல்லிக்கக் கூடாது. ஆனா, நான் சொல்லாம வேறு யார் சொல்லுவா? ;-)

//ரொம்ப நாளா என் மண்டையை குடைஞ்ச செய்திங்க இது. திட்டி தீர்க்கனும் போல இருக்கும். நீங்க திட்டிட்டீங்க. மகிழ்ச்சி :)// லொடுக்கு, நீங்களும் நம்ம கட்சிதானா? ;-)
//யாரு கேட்டா உன்கிட்ட ஹிந்தி பாட்டு. // அப்படிப்போடுங்க!
//அந்தப் பொண்ணு தமிழ் பொண்ணா என்பத் கூட சந்தேகமா இருக்கு. //எனக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜெஸிலா!
தங்கள் கோவம் மிக நாயமானது; ஆனால் இந்த தனியார் வானொலி நிறுவனங்கள் குறிப்பாக சொந்தக்காரர்களுக்கும்;தெரிந்தவர்களுக்கும் வேலை வழங்கும் நிறுவனங்களே!!அதனால் திறமை
கணக்கெடுக்கப்படுவதில்லை. ஒருநாள் சில மணி நேரம் கேட்டுவிட்டு தலையில் அடித்துக் கொண்டு
நிறுத்திவிட்டேன். ஆனால் இலங்கை வானொலி இன்றும் இயன்றவரை தரம் பேணுகிறார்கள். ஆனால்
இணையத்தில் மாத்திரமே வருகிறது.
நீங்கள் ஒன்று செய்யலாம் ;உங்கள் எண்ணத்தை அவர்களுக்கு கடித வாயிலாக அறியத்தரலாம்.
உடனடி பயன் கிட்டுமோ தெரியாது.
காரணம்; எல்லோருமே சுல்தான் அண்ணா போல் இவற்றைச் சகித்து; ஏற்றும் கொள்ளப் பழகிவிட்டார்கள்.
இன்னும் தொலை பேசியில் அவர்களுடன் ;வழியக் காத்துக் கிடப்போர் ஏராளம்.
அவர்கள் திருந்தச் சந்தர்ப்பம் இல்லை; நாம் தான் இந்த கழிவுகளைக் கடாசி விட வேண்டும்.

லொடுக்கு said...

//இன்னும் தொலை பேசியில் அவர்களுடன் ;வழியக் காத்துக் கிடப்போர் ஏராளம்.
அவர்கள் திருந்தச் சந்தர்ப்பம் இல்லை; நாம் தான் இந்த கழிவுகளைக் கடாசி விட வேண்டும்
//
சூப்பர்பு!!!

Jazeela said...

//தங்கள் கோவம் மிக நாயமானது; // நன்றி.
//ஒருநாள் சில மணி நேரம் கேட்டுவிட்டு தலையில் அடித்துக் கொண்டு
நிறுத்திவிட்டேன். ஆனால் இலங்கை வானொலி இன்றும் இயன்றவரை தரம் பேணுகிறார்கள். // அதே இலங்கை வானொலி நிறுவனம்தான் அமீரக வாசனைப்பட்டதும் இப்படி மாறிவிட்டார்கள் போலும்!
//நீங்கள் ஒன்று செய்யலாம் ;உங்கள் எண்ணத்தை அவர்களுக்கு கடித வாயிலாக அறியத்தரலாம்.// ம்ம் செய்கிறேன்.
//உடனடி பயன் கிட்டுமோ தெரியாது.
காரணம்; எல்லோருமே சுல்தான் அண்ணா போல் இவற்றைச் சகித்து; ஏற்றும் கொள்ளப் பழகிவிட்டார்கள்.//
சுல்தான் அண்ணா கேட்டிருந்தார் இவர்கள் தமிழ் வளர்க்கவா வந்திருக்கிறார்கள், பணம் பண்ணுதல் அவ்வளவுதான் என்று பிறகு ஏன் 'செந்தமிழ் கேட்கும்' என்று ஏன் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக சக்தி எப்.எம். என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே?
//இன்னும் தொலை பேசியில் அவர்களுடன் ;வழியக் காத்துக் கிடப்போர் ஏராளம்.
அவர்கள் திருந்தச் சந்தர்ப்பம் இல்லை; நாம் தான் இந்த கழிவுகளைக் கடாசி விட வேண்டும். // 100% உண்மை.

நாமக்கல் சிபி said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//வேண்டுமென்றால் அனைவரும் சேர்ந்து பொது கடிதம் ஒன்றை சக்தி நிறுவனத்தாருக்கு அனுப்பிப் பார்க்கலாம்.பயன் கிட்டினால் அனைவருக்கும் சந்தோஷமே.
//

அய்யானார் அவர்கள் சொல்வது போல் செய்து பார்ப்பது பலனளிக்கும் என்று தோன்றுகிறது!

நல்ல யுக்தி!

வி. ஜெ. சந்திரன் said...

உங்கள் வலைப்பதிவுக்கு இன்று தான் வருகிறேன்.
சக்தி உங்கும் வந்து சத்தி (வாந்தி) எடுக்க தொடங்கி விட்டதா :(

கொழும்பில்-இலகையில் சக்தியில் வேலை செய்யும் அறிவிப்பாளர்கள் பலருக்கு சினிமா ஹீரோக்கள் மாதிரி ஒரு நினைப்பும் பேச்சுக்களும்.

அனுபவியுங்க அவஸ்தைய :(

Jazeela said...

வி.ஜெ. சந்திரன் வருகைக்கு நன்றி.

சிபி, //அய்யானார் அவர்கள் சொல்வது போல் செய்து பார்ப்பது பலனளிக்கும் என்று தோன்றுகிறது!// தொலைநகல் அனுப்பவிருக்கிறேன் பலனளிக்கிறதா என்று பார்க்கலாம்.

மஞ்சூர் ராசா said...

தொலைபேசி எண் இருந்தால் நேரடியாகவே நிர்வாகத்திடம் பேசி பார்க்கலாம்.

அப்படியும் திருந்தவில்லையென்றால் துபாயில் இருக்கும் நண்பர்கள் ஒருநாள் நேரடியாகவே சென்று கண்டனம் தெரிவிக்கலாம்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி