Tuesday, October 11, 2022

நவராத்திரி


 கீரைவிற்கும்

கண்ணமாவின் தலையில்


கொலு பொம்மைகள்

நவராத்தி நாட்களென்று

பொம்மைகள் விற்பதை

வியாபாரமாக்கியிருந்தாள்

சாமிகளை தலையில்

சுமந்தவளாக சப்தத்துடன்
கூவி விற்றாள்
சிவன் இருக்கிறான் என்றாள்
கண்ணன் ராதை உண்டா
என்றனர்
விநாயகரை நம்பிக்கையோடு
வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால்
தும்பிக்கை சரியில்லையாம்
சிரித்த முகத்துடன் சாமிகள்
இவள் சிரிப்பிற்கு
விலைப் போகவில்லை
விற்காத சாமிகளும்
இவள் வேதனையை
நோக்கவில்லை
’சாமி சாமி’ என்று
பொம்மைகளை விற்றாள்
ஆசாமிகள் யாரும் வாங்கவுமில்லை
இத்தனை சாமிகள்
இருந்தும்
அவள் குழந்தையின்
பசியை யாருமே
போக்கவில்லை.
-ஜெஸிலா பானு

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி