Wednesday, April 12, 2006

குமுறல்

பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்

வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்

வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை

பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்

அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்

எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை

மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி