Monday, July 03, 2006

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமா
வான் உலகை மறக்குமா
உலகம் பூமியை மறக்குமா
பூமி நிலத்தை மறக்குமா
நிலம் பாதையை மறக்குமா
பாதை கால்சுவடை மறக்குமா
கால்சுவடு உரிய கால்களை மறக்குமா
கால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமா
கண்கள் காக்கும் இமையை மறக்குமா
இமை உடலை மறக்குமா
உடல் உயிரை மறக்குமா
உயிர் எதுவும் மறக்குமா
எதுவும் எதையும் மறக்காத போது
என்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

2 comments:

ஏ.எம்.ரஹ்மான் said...

நான் உன்னை மறந்தாலும் ,உன் கவிதையை மறக்க மாட்டேன்.
by www.rashmiatamilnet.blogspot.com

Jazeela said...

யாருங்க நீங்க? நீங்க யாரை மறந்தாலும்? எனக்கு உங்களை தெரியவே செய்யாதே?

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி